இனம், சாதி, மதம் அன்றி பொருளாதாரம் பிரதான தலைப்பானது மகிழ்ச்சிக்குரியது

0 28
  • சிறுபான்மை கட்சிகள் வேறுதிசையில் சென்றாலும்
    தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு
  • ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால் மீண்டும் ஒரு
    நெருக்கடி நிலை ஏற்படலாம் என்கிறார் ஜனாதிபதி

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் குறித்து கருத்தில் கொள்­ளப்­படும் தேர்­தலை எதிர்­கொள்­வதில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்ஹ தெரி­வித்­துள்ளார்.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை விரை­வாக ஏற்­று­மதி சார்ந்த பொரு­ளா­தா­ர­மாக மாற்­றா­விட்டால் 2035-2040 காலப்­ப­கு­தியில் மற்­று­மொரு நெருக்­கடி ஏற்­ப­டக்­கூடும் என ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு ஷங்­கி­ரிலா ஹோட்­டலில் தொழில் வல்­லு­நர்கள் சங்­கத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற “Ask Me Anything” என்ற விசேட நிகழ்ச்­சியில் கலந்­து­கொண்டு கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்ஹ இவ்­வாறு குறிப்­பிடார். .

இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
கடவுச் சீட்டு பெறு­வதில் உள்ள நெரி­சலை விரைவில் தீர்க்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இதனால் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு அர­சாங்கம் என்ற ரீதியில் மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­கிறோம்.
ஜனா­தி­பதித் தேர்தல் வெற்­றியின் பின்னர் தாம் விரும்­பிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்­காது, நாட்டு மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட மக்கள் பிர­தி­நி­தி­களை நிய­மிக்­க­வுள்ளேன். இதற்­காக மக்கள் தமக்கு விருப்­ப­மா­ன­வர்­களை புதிய பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பு­வார்கள்.

சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஏனைய ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யுள்ள போது, ​​இந்­நாட்டின் பெரும்­பா­லான தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தனக்கு இருக்­கி­றது.

தற்­போது, ​​சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, சீன எக்சிம் வங்கி மற்றும் 17 நாடு­க­ளுடன் கடன் நிலைத்­தன்மை, கடன் நிவா­ரணம் மற்றும் 2032 வரை­யி­லான முன்­னோக்கி செல்லும் வழிகள் குறித்து உத்­தி­யோ­க­பூர்வ கடன் வழங்­கு­நர்கள் குழு­வுடன் உடன்­பாட்டை எட்­டி­யுள்ளோம். இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லப் போகி­றோமா அல்­லது மாற்றப் போகி­றோமா என்­ப­துதான் இப்­போ­தைய கேள்வி. அர­சாங்­கத்தின் வருவாய் மற்றும் செல­வி­னங்­களின் தற்­போ­தைய அள­வு­கோல்­களை மாற்ற முடி­யாது. வரித் திருத்­தங்கள் செய்­யப்­ப­டலாம் என்­றாலும், அதற்கு முழு அள­வு­கோல்­களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மாற்று வரு­மான வழி­களை முன்­வைக்­காமல் வரி­களைக் குறைத்து, அரச வரு­வாயைக் குறைத்து, நலன்­புரி நட­வ­டிக்­கை­களின் மூலம் அர­சாங்கச் செல­வி­னங்­களை அதி­க­ரிக்க ஏனைய கட்­சிகள் பரிந்­து­ரைக்­கின்­றன. 2019 இல் வரி குறைப்பு மற்றும் அதி­கப்­ப­டி­யான சலு­கைகள் கார­ண­மாக வரு­மானம் குறைந்­தது. இத­னா­லேயே 2022 இல் பொரு­ளா­தார சிக்­கல்கள் எழுந்­தன. கடந்த காலத்தில் செய்த தவ­று­களை மீண்டும் செய்ய வேண்­டுமா என்று வினவ விரும்­பு­கிறோம்.

சாதி, இனம் போன்று நீடித்து காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கான ஆணைக்­கு­ழு­வொன்று தொடர்­பிலும் கவனம் செலுத்­தி­யி­ருக்­கிறோம். இனம், சாதி, மதம் வேறு­பா­டின்றி அனை­வ­ரையும் பாதித்த பொரு­ளா­தார நெருக்­க­டிகள் குறித்து கருத்தில் கொள்­ளப்­படும் தேர்தல் நடை­முறை காண கிடைத்­துள்­ள­தை­யிட்டு ஜனா­தி­பதி என்ற வகையில் நான் பெரு­மை­ய­டை­கிறேன்.

இந்த சூழ்­நிலை ஒரு நாடாக ஒன்­றி­ணை­வ­தற்கும், தற்­போ­துள்ள சமூக ஏற்­றத்­தாழ்­வு­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் வாய்ப்­ப­ளிக்கும். குழந்தை பரா­ம­ரிப்பு மற்றும் குடும்ப வன்­முறை போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண வேண்­டி­யுள்­ளது. ஒவ்­வொரு பொலிஸ் நிலை­யத்­திலும் பெண்கள் மற்றும் சிறு­வர்கள் பிரிவு இருந்­தாலும், அதற்குள் மேலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

அதேபோல் நமது அர­சியல் முறை­யிலும் மாற்றம் தேவைப்­ப­டு­கி­றது. பொரு­ளா­தாரச் சரிவு அர­சியல் முறை­யி­னையும் பாதித்­துள்­ளது. மற்­றைய கட்­சிகள் பழைய பொரு­ளா­தார கொள்­கைகள் மீதே தங்­கி­யுள்­ளன. அது இறந்­த­வர்­களை உயிர்ப்­பிக்கும் முயற்­சி­யாகும். அவ்­வா­றான செயற்­பா­டு­களை நம்­பி­யி­ருக்க முடி­யாது.

அர­சியல் கட்­சிகள் எடுக்கும் தீர்­மா­னங்­களை நீதி­மன்றம் வரையில் கொண்டு செல்லும் கலாச்­சா­ரத்­திற்கு மாறாக அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஒரே சட்ட வரை­ய­றைக்குள் செயற்­படும் வகையில் ஜேர்­மனி போன்ற ஐரோப்­பிய நாடு­களில் செயற்­ப­டுத்­தப்­படும் நடை­மு­றையை உரு­வாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.