மோதிவிட்டு தப்பிச்சென்ற வேன் ; எட்டு வயது சிறுவன் மஹ்தி ஸ்தலத்தில் மரணம்!

0 230

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்­ட­மா­வடி – மீரா­வோடை எல்லை குறுக்கு வீதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் வேன் விபத்தில் மர­ண­ம­டைந்த சம்­பவம் அப் பகு­தியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை (17) மாலை ஏழு மணி­ய­ளவில் வாகரை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மட்­டக்­க­ளப்பு – திரு­கோ­ண­மலை வீதி பனிச்­சங்­கேணி பாலத்­த­டியில் இச் சம்பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த விபத்துச் சம்­ப­வத்தில் ஓட்­ட­மா­வடி ஹிஜ்றா வித்­தி­யா­ல­யத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் சப்றாஸ் மஹ்தி எனும் சிறு­வனே உயி­ரி­ழந்­துள்ளார்.
மஹ்­தியின் தாயும், தந்­தையும் குடும்பத் தக­ராறு கார­ண­மாக பிரிந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

வறுமை கார­ண­மாக மஹ்­தியின் தாயார் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­நாடு சென்று பணி­பு­ரிந்து விட்டு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்­டுக்கு வந்­துள்ளார்.

மஹ்­திக்கு ஒரே­யொரு சகோ­தரி. அவர் ஐந்தாம் தரத்தில் மஹ்தி கல்வி கற்கும் ஹிஜ்றா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்று வரு­கிறார்.

சிறு­வ­யதில் இருந்து தாய், தந்தை அர­வ­ணைப்­பின்றி பல்­வேறு ஏக்­கத்­துடன் மஹ்­தியும் அவ­ரது சகோ­த­ரியும் தனது மூத்தம்மாவின் பரா­ம­ரிப்பில் வாழ்ந்து வந்­துள்­ளனர்.

மூத்தம்மா மிகுந்த கவ­னிப்­புடன் மஹ்­தியை வளர்த்து வந்­தாலும் அந்த பிஞ்சு மன­சுக்கு தாய், தந்­தை­யரின் அர­வ­ணைப்பு தேவைப்­பா­டக இருந்­துள்­ளது.
தனது தாய் வெளி­நாட்டில் வசிக்கும் போது மஹ்தி தாயுடன் தொலை­பே­சியில் உரை­யாடும் போது, ‘‘உம்மா நீங்க ஊருக்கு வாங்க, உம்மா நாங்க அநா­தை­யாக கிடக்கம். சந்­தோ­ச­மாக எங்கும் போக ஏலா, நீங்க ஊருக்கு வந்து எங்க கூட இருங்க’’ என அடிக்கடி கூறுவதாக குடும்­பத்தார் கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர்.

தனது பிள்­ளை­க­ளுடன் நாட்­டுக்கு வந்து சந்­தோ­ச­மாக வாழ வேண்டும் என்ற எண்­ணத்தில் மஹ்­தியின் தாயும் வெளி­நாட்டு வாழ்க்­கையை முடித்து விட்டு நாட்­டுக்கு வந்­துள்ளார்.

தொழுகை கடமை இல்­லாத வய­தாக இருந்­தாலும் மஹ்தி பள்­ளி­வா­ச­லோடு மிகவும் நெருக்­க­மாக இருந்­த­தா­கவும், தொழு­கையை தவ­றாமல் பேணி வந்­தவர் என்றும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் தெரி­வித்­தனர்.

மஹ்­திக்கு சிறு காய்ச்சல் வந்­தாலும் அவர் அல்­லாஹ்வின் பக்கம் தனது நெருக்­கத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு சிறு­வ­னாக வாழ்ந்து வந்­துள்­ள­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு சிறு­வ­யதில் நல்­லொ­ழுக்கம் கொண்ட பேணு­த­லான ஒரு சிறு­வ­னா­கத்தான் மஹ்தி வாழ்ந்து வந்­துள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை (16) பாட­சா­லைக்குச் சென்ற மஹ்தி அவ­ரது வகுப்­பா­சி­ரி­யை­யிடம் ‘‘இனி நாம எப்­பதான் சந்­திக்கப் போகிறோமோ?’’ என்று கூறி­யுள்ளார்.

‘‘ஏன் சந்­திக்­கலாம் தானே’’ என்று ஆசி­ரியை சொன்­ன­தற்கு ‘‘இல்லை டீச்சர் திங்­கட்­கி­ழ­மையும் ஸ்கூல் லீவு. இனி நாம சந்­திப்­பமோ தெரியா?’’ என்று தனது மர­ணத்தை அறிந்து வைத்தால் போல் அந்த பிஞ்சு மனசு சொன்ன வார்த்தையை அவரது ஆசிரியை நினைவுகூறியமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்­பவம் நடந்த அன்று மஹ்தி தனது தாயா­ருடன் ஆட்­டோவில் சென்ற போது ஆட்டோ பனிச்­சங்­கேணி பிர­தான வீதியில் பழு­த­டைந்து நின்­றுள்­ளது.
ஆட்டோ சாரதி ஆட்­டோவை சரி­பார்த்துக் கொண்­டி­ருந்த போது ஆட்­டோவில் பய­ணித்த அனை­வரும் வீதியில் இறங்கி நின்­றுள்­ளனர்.

அந்த சமயம் மஹ்­தியின் தாயார் வீதியின் மறு­பக்கம் தொலை­பே­சியில் உரை­யாடிக் கொண்­டி­ருக்கும் போது சிறுவன் மஹ்தி தனது தாயார் நின்ற பக்கம் வீதியை குறுக்­க­றுத்து ஓடிச் சென்றுள்ளார். அப்போதுதான் அவ் வீதியால் வேக­மாக பய­ணித்த வேன் மஹ்­தியை மோதி­விட்டு நிறுத்­தாமல் தப்பிச் சென்­றுள்­ளது.

விபத்தில் மஹ்­தியின் பின்­பக்க தலைப்­ப­கு­தியில் அடி­பட்­டதில் சிறுவன் ஸ்தலத்­திலேயே மர­ண­ம­டைந்­துள்ளார்.

மர­ண­ம­டைந்த சிறுவன் வாகரை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு உடலை நீண்ட நேரம் வைப்­ப­தற்கு குளி­ரூட்டி இல்­லாத கார­ணத்தால் உடல் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டது.
வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் ஒரு நாள் முழு­வ­து­மாக உடல் வைக்­கப்­பட்டு, வைத்­திய பரி­சோ­த­னை­களின் பின்னர் ஜனாஸா ஞாயிற்­றுக்­கி­ழமை (18) மாலை ஆறு மணி­ய­ளவில் உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
மர­ண­ம­டைந்த மஹ்­தியின் ஜனாஸா ஞாயிற்­றுக்­கி­ழமை இஷா தொழு­கையின் பின்னர் பெருந்­தி­ர­ளான மக்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் மீரா­வோடை மீரா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் தொழுகை நடாத்­தப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

விபத்தை ஏற்­ப­டுத்­திய வேனை அடை­யாளம் காண்­ப­தற்­காக பொலி­ஸா­ருடன் அகீல் எமர்­ஜன்ஸி, அனர்த்த அவ­சர சேவைப் பிரிவு ஆகி­யவை இணைந்து கடும் பிர­யத்­தனம் மேற்­கொண்டு வந்­தனர்.

இந்­நி­லையில், விபத்தை ஏற்­ப­டுத்­திய சாரதி வேனுடன் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் திங்கட்கிழமை இரவு வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சர­ண­டைந்த சார­தியை பொலிஸார் வாழைச்­சேனை நீதிவான் நீதி­மன்றில் செவ்­வாய்க்­கி­ழமை (20) ஆஜர்­ப­டுத்­தினர்.

வாழைச்­சேனை நீதிவான் சார­தியை எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.

சிறுவன் மஹ்­தியின் திடீர் மரணம் அப்­பி­ர­தே­சத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ளது.

வீதிகளை கடக்கும்போது அவதானமாக இருக்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக சிறுவர்களை தமது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.