பாகிஸ்­தானின் மூத்த அர­சியல் தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை

0 653

பாகிஸ்­தானின் பிர­தான அர­சியல் கட்­சியின் மூத்த உறுப்­பினர் ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

சையத் அலி ரஸா அபிடி என்ற 46 வய­தான குறித்த அர­சியல் கட்சி உறுப்­பினர் அவ­ரது வீட்டின் முன்பு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

முன்னர், மதச்­சார்­பற்ற முஸ்லிம் குவாமி இயக்கம் – பா­கிஸ்தான் என்ற அர­சியல் கட்­சியில் தலை­மை­யேற்று செயற்­பட்டு வந்தார். பின்னர் சில தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக அதி­லி­ருந்து வில­கினார்.

இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கராச்­சியில் பாக் சர்­ஸாமீன் கட்­சியின் இரண்டு உறுப்­பி­னர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை அடுத்து இந்த கொலைச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

ரஸா அபிடி, காரில் தனது வீட்­டிற்கு திரும்­பிய போது அடை­யாளம் தெரி­யாத இரண்டு பேர் மோட்டார் சைக்­கிளில் வந்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள் ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பின்னர் மருத்துவமனை

யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பது குறித்து விரிவாக கூறுவது கடினம் என்று கராச்சி பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த கொலைக்கான பின்னணி தனிப்பட்டதா அரசியல் ரீதியானதா அல்லது மதம் சார்ந்ததா என்று அனைத்து கோணத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.