பலஸ்தீன் மீதான இலங்கையரின் தூய அன்பை வாழ்நாளில் மறக்கமாட்டேன்

இடமாற்றம் பெற்றுச் செல்லும் பலஸ்தீன தூதுவர் கண்ணீர் மல்க தெரிவிப்பு

0 55

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்­கையில் வாழும் சகல இன மக்­களும் பலஸ்­தீன மக்கள் மீது காட்­டிய அன்­பையும் ஆத­ர­வையும் வாழ்­நாளில் ஒரு­போதும் மறக்க மாட்டேன் என இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா ஸைத் தெரி­வித்தார்.

இலங்­கையில் சுமார் பத்து வருட கால­மாக கட­மை­யாற்றி தற்­போது பாகிஸ்­தா­னுக்­கான பலஸ்­தீன தூது­வ­ராகச் செல்லும் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா ஸைத் அவர்­க­ளுக்­கான பிரி­யா­விடை நிகழ்வு கடந்த திங்கட் கிழமை கொழும்பில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பலஸ்­தீனப் போராட்­டத்­திற்கு இலங்கை மக்கள் வர­லாறு நெடு­கிலும் தமது ஆத­ரவை வழங்கி வந்­துள்­ளனர். தற்­போது காஸா மீது இஸ்ரேல் கட்­ட­விழ்த்­து­விட்­டுள்ள அநீ­தி­க­ளுக்கு எதி­ராக இலங்கை மக்கள் பல்­வேறு போராட்­டங்­களை நடத்தி தமது கண்­ட­னத்தைப் பதிவு செய்­த­துடன் பலஸ்­தீன மக்கள் மீதான தமது அளவு கடந்த அன்­பையும் இன மத பேத­மின்றி வெளிப்­ப­டுத்­தினர்.குறிப்­பாக காஸா சிறு­வர்­க­ளுக்­கான இலங்கை மக்கள் பாரிய நிதிப்­பங்­க­ளிப்­பையும் அண்­மையில் வழங்­கினர்.

இந்த அழ­கிய இலங்கைத் தீவில் நான் சுமார் 10 வருட கால­மாக வாழ்ந்­துள்ளேன். இந்த நாட்­டையும் இலங்கை மக்­க­ளையும் விட்டுப் பிரி­வது மிகவும் கவ­லை­யா­க­வுள்­ளது. நீங்கள் என் மீதும் எனது நாட்டு மக்கள் மீதும் வைத்­துள்ள அன்­பையும் ஆத­ர­வையும் ஒரு­போதும் மறக்­க­மாட்டேன். பலஸ்­தீன மக்­க­ளுக்­கான உங்கள் ஆத­ரவு என்­றென்றும் தொடர வேண்டும்’’ என்றும் தூதுவர் கண்ணீர் மல்க உரை­யாற்­றினார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ள­னத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் நாட்­டி­லுள்ள பல்­வேறு முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், அர­சியல் பிர­மு­கர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், பலஸ்­தீன ஆத­ரவு செயற்­பாட்­டா­ளர்கள் என பலரும் கலந்து கொண்­டனர்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக் குழுவின் தலை­வ­ரு­மான பிமல் ரத்­நா­யக்க, உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பின் சிரேஷ்ட பிரதித் தலைவர் மஹிந்த ஹத்­தக ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் உரை­யாற்­றினர்.

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக் குழுவின் முன்னாள் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், இலங்­கைக்­கான பலஸ்­தீன பிரதித் தூதுவர் ஹிஷாம் அபூ தாஹா, ஈரா­னுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர், பாகிஸ்­தா­னுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சட்­டத்­த­ரணி என்.எம்.ஷஹீத், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்­பட பலரும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டனர்.

இதன்போது பலஸ்தீன ஒருமைப் பாட்டுக்கான இலங்கைக் குழு, பேருவளை அப்ரார் பவுண்டேஷன், களுத்துறை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் தூதுவருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.