துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி விவகாரம் பின்னணியில் ஆயுத விற்பனை என்று சந்தேகம்

தீவிரமாக விசாரித்து வருகின்றது சி.ரி.ஐ.டி.; பயங்கரவாதம் தொடர்பில் இதுவரை சான்றுகள் இல்லை

0 58

(எப்.அய்னா)
வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாவ­லடி சந்­தியில் வைத்து ரீ 56 ரக துப்­பாக்­கிகள், தோட்­டாக்கள், மெகஸின் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளுடன் 43 வய­தான மெள­லவி ஒருவர் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட விவகாரத்தின் பின்னணியில் ஆயுத விற்பனை சம்பவம் ஒன்று இருப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்புகள் குறித்து இதுவரை தெளிவான சான்றுகள் எவையும் இல்லை என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் பிறிதொருவருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவ்வாறெனில் அது யாருக்கு என்ன நோக்கத்துக்காக விற்பனை செய்யப்படவிருந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அவ்விசாரணைகளின் நிறைவிலேயே உறுதியான நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதனை விட குறித்த மீட்கப்பட்ட துப்பாக்கிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்குக் கிடைத்த இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து அர­ல­கங்­வில பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை முகாம் அதி­கா­ரிகள் குழு கடந்த ஜூலை 30 ஆம் திகதி இந்த மெளலவியை கைது செய்ததாக‌ பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் சட்டப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­கர விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்திருந்தார்.

இந் நிலையில் இந்த சம்­ப­வத்தின் பின்­னணி, நோக்கம் உள்­ளிட்­ட­வற்றை கண்­ட­றிய, சந்­தேக நபரை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு (சி.ரி.ஐ.டி.) பொறுப்­பேற்று விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டிருந்த்தார்.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமை­வாக பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் நாவ­லடி சந்­தியில் வைத்து மோட்டார் சைக்­கிளில் சென்­று­கொண்­டி­ருந்த மெள­ல­வியை கைது செய்­துள்­ளனர்.

இதன்­போது அவ­ரி­ட­மி­ருந்து ரீ 56 ரக துப்­பாக்கி ஒன்­றி­னையும் 29 தோட்­டாக்­க­ளையும் ஒரு மெக­சி­னையும் அதி­ரடிப் படை­யினர் கைப்­பற்­றினர்.
இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணையின் போது, அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மெள­ல­வியின் சகோ­த­ரரின் வீட்டில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மற்­றொரு ரீ 56 ரக துப்­பாக்கி, 30 தோட்­டாக்கள், மெகசின் மற்றும் வாள் ஆகி­ய­வற்றை கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து மெள­ல­வியின் வீட்­டுக்கு சென்ற அதி­ரடிப் படை­யினர் அங்­கி­ருந்து, துப்­பாக்­கி­களை மறைத்து வைக்க பயன்­ப­டுத்தும் இரு பிளாஸ்டிக் பைகள் மற்றும் தொலைக் காட்­டியை கைப்­பற்­றினர். இத­னை­விட துப்­பாக்­கி­களை கொண்டு செல்ல பயன்­ப­டுத்­தி­ய­தாக கூற­ப்படும் மோட்டார் சைக்கிள், மேலும் இரு வாகன இலக்­கத்­த­க­டுகள் இரண்­டையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மெளலவியின் சகோதரனை கைது செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.