‘ரிஷாதின் நிதியை இரத்துச்செய்து முஷாரப்புக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு’ நியாயம் என்னவென சபையில் சஜித் கேள்வி

0 44

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)

பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியை இரத்­துச்­செய்­துள்ள நிலையில் ஆளும் தரப்பு உறுப்­பினர் முஷாரப் எம்.பிக்கு புதி­தாக 300 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது தவ­றான நட­வ­டிக்­கை­யாகும். தேர்தல் காலத்தில் இவ்­வாறு செயற்­ப­டு­வது தொடர்பில் தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன் கிழமை விசேட கூற்­றொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
தேர்தல் ஒன்று இடம்­பெற இருக்கும் சம­யத்தில் அரச நிதி பயன்­ப­டுத்­திக்­கொண்டு தேர்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது சட்­ட­வி­ராே­த­மான குற்­றச்­செ­ய­லாகும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி, அவர் எதிர்க்­கட்­சியில் எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட தீர்­மானம் எடுத்த கார­ணத்­தினால் குறித்த பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியை இல்­லாமல் செய்­தி­ருக்­கி­றது.

அதே­நேரம் அரச தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்­துள்ள பாரா­ளு­மன்ற முஷா­ரப்­புக்கு புதி­தாக 300 மில்­லியன் ரூபா அபி­வி­ருத்­திக்கு என ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் அந்த பணத்தை இவர்கள் தேர்­த­லுக்­கா­கவே பயன்­ப­டுத்த இருக்­கின்­றனர்.அரச அதி­கா­ரிகள் இந்த தவறை செய்ய வேண்டாம்.
இந்த நட­வ­டிக்கை முற்றாக சட்டவிரோதமாகும். அதனால் இந்த சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.