குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை

0 95

எம்.ஐ.அப்துல் நஸார்

இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்­கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்­குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அண்­மையில் தடுத்து வைக்­கப்­பட்ட அல்­குர்ஆன் பிர­திகள் மற்றும் அல்­குர்­ஆனின் மொழி­பெ­யர்ப்­புகள் தொடர்பில் கொழும்பு டைம்ஸ் இணை­யத்­தளத்திற்கு கருத்த வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேரா­சி­ரியர் ரஷீன் பாப்பு, அல்­குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டாலும், அவற்றை 4 மாதங்கள் சுங்கப் பிரி­வி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் அதற்­கான கட்­ட­ணத்தை செலுத்­து­வதும் பண விர­ய­மாகும் எனக் குறிப்­பிட்டார்.

சுங்கம், பாது­காப்பு அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா அல்­லது மீளாய்வுக் குழுவைக் குறை கூறு­வதில் அர்த்­த­மில்லை. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், கல்வி அமைச்சு மற்றும் பாது­காப்பு அமைச்சு ஆகி­ய­வற்­றினால் சமயப் புத்­த­கங்கள், வெளி­யீ­டுகள் வீடி­யோக்கள் போன்­ற­வற்றை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரைகள் நடை­மு­றைக்கு வந்­தன, இது ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களுள் ஒன்­றாகும்.

எனினும், சில நாடு­களில், தங்கள் நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­படும் சமய புத்­த­கங்­க­ளுக்கு கட்­டுப்­பா­டுகள் உள்­ளன. சவூதி அரே­பியா, எகிப்து, மலே­சியா, கட்டார், குவைத், ஓமான் போன்ற முஸ்லிம் நாடு­களில் இந்த நடை­முறை உள்­ளது.

நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­படும் ஒவ்­வொரு புத்­த­கமும் அதற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் இணக்­கப்­பாட்டைப் பெறுதல் வேண்டும். இதே நடை­மு­றை­யைத்தான் இலங்­கையும் பின்­பற்­று­கி­றது. ‘தமிழ் மற்றும் சிங்­கள அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள் கடந்த காலங்­களில் நாட்டின் தேசியப் பாது­காப்­பிற்கு கடு­மை­யான சவா­லாக இருந்­தன. ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­ட­வர்கள், இவ்­வா­றான அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்பால் செல்­வாக்­கிற்­குட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இது அல்­குர்­ஆனின் உண்­மை­யான மொழி­பெ­யர்ப்­பிற்கு முர­ணான நேரடி மொழி­பெ­யர்ப்­பாகும், ‘காபிர்­களை (பிற நம்­பிக்­கை­யா­ளர்கள்) எங்கு கண்­டாலும் கொல்­லுங்கள்’ என்று தெளி­வாக மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளது. கேள்­விக்­கு­ரிய மொழி­பெ­யர்ப்­புகள், எல்லாம் வல்ல அல்­லாஹ்வின் சிபாத் (குணங்கள்) தொடர்­பான அல்­லது ஜிஹாத் தொடர்­பான 30 வச­னங்­க­ளுக்கு (ஆயாத்கள்) எந்த விளக்­கமும் இல்­லாமல் அல்­குர்­ஆனின் நேரடி மொழி­பெ­யர்ப்­பாகக் காணப்­ப­டு­கின்­றது. இது போன்ற மொழி­பெ­யர்ப்­பு­களே ஞான­சார தேரர் போன்ற துற­வி­க­ளுக்கு எல்லாம் வல்ல அல்­லாஹ்வை ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் மூளை­யாக’ அழைக்க தூண்­டி­யது. சர்­வ­ வல்­ல­மை­யுள்ள அல்­லாஹ்வின் புனிதச் செய்­தியை தவ­றாகக் கூறும், தவ­றாகப் புரிந்­து­கொள்ளச் செய்யும் இத்­த­கைய அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள் நமக்கு இன்னும் தேவையா? என்­ப­துதான் இங்­குள்ள கேள்வி.

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புத்­த­கங்­க­ளுக்­கான மீளாய்வுக் குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் புனித அல்­குர்­ஆன்கள் மற்றும் ஏனைய இஸ்­லா­மிய பாடப் புத்­த­கங்­களை அனுமதிக்க அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­ட­மைப்பின் கீழ் செயல்­பட்டு வரு­கி­றது. அரபுக் கல்­லூ­ரி­களில் பயன்­ப­டுத்­தப்­படும் இது­போன்ற பல அல்­குர்­ஆன்கள் மற்றும் ஏனைய இஸ்­லா­மிய பாடப் புத்­த­கங்­களை அனு­ம­திப்­ப­தற்கு இந்த குழு பரிந்­துரை செய்­துள்­ளது. இது அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, சூபி தரீக்­காக்கள் மற்றும் ஜாமியா நளீ­மி­யாவின் பட்­ட­தா­ரிகள் ஆகிய புகழ்­பெற்ற மற்றும் தகு­தி­வாய்ந்த இஸ்­லா­மிய அறி­ஞர்­களை உள்­ள­டக்­கிய ஒரு சுயா­தீன அமைப்­பாகும். புனித அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள் தொடர்­பான கட்­ட­மைப்பில் அவை எவ்­வா­றி­ருக்க வேண்டும் என பின்­வ­ரு­மாறு தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது:

1. அல்­குர்­ஆனின் அரபு உரை இல்­லாத எந்த மொழி­பெ­யர்ப்பும் சிபாரிசு செய்­யப்­ப­ட­மாட்­டாது.
2. மொழி­பெ­யர்ப்பு அல்­குர்­ஆனின் மொழி­யியல் சார்ந்த மொழி­பெ­யர்ப்­பாக இருக்­கக்­கூ­டாது, ஆனால் ‘உம்­ம­ஹாத்துத் தப்சீர்’ இற்கு அமை­வாக குறித்த மொழி­பெ­யர்ப்பு இருக்க வேண்டும்.
3. குர்ஆன் மொழி­பெ­யர்ப்­பு­களில் அடிக்­கு­றிப்­புகள் அல்­லது விளக்கக் குறிப்­புகள் இருக்க வேண்டும், குறிப்­பாக அந்த ஆயத் (வச­னங்கள்), ஜிஹாத் மற்றும் ஏனைய வச­னங்­க­ளுக்கு சரி­யான விளக்கம் இல்­லாமல் வாச­கரால் தவ­றாகப் புரிந்து கொள்­ளப்­ப­டலாம். அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள், குறிப்­பாக தேவைப்­படும் இடங்­களில் அடிக்­கு­றிப்­புகள் அல்­லது விளக்கக் குறிப்­பு­களைக் கொண்­டி­ருத்தல் வேண்டும்
4. அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­புகள் அல்­குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சர்­வ­வல்­ல­மை­யுள்ள அல்லாஹ், அவ­னது அன்­பிற்­கு­ரிய நபி முஹம்­மது (ஸல்), ஏனைய அனைத்து நபி­மார்கள், மற்றும் மலக்­குகள் பக்­தி­யுள்ள ஆண்கள் மற்றும் பெண்­களை குறிப்­பி­டு­வ­தற்கு பொருத்­த­மான மற்றும் மரி­யா­தைக்­கு­ரிய வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்த வேண்டும். மேற்­கூ­றி­ய­வற்றை அவ­ம­ரி­யாதை செய்­வ­தாகக் கரு­தப்­படும் வார்த்­தை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்பின் தடை­ய­கற்­ற­லுக்­காக சிபார்சு செய்­யப்­ப­ட­மாட்­டாது.

அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்­பு­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு நீண்ட காலம் தேவைப்­படும் என்­பதை குழு புரிந்­து­கொள்­கி­றது.

எனவே இறக்­கு­ம­தி­யாளர் நாட்­டிற்கு புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பே, மொழி­பெ­யர்ப்­பு­களின் குறைந்­த­பட்சம் 10 மாதிரி பிர­தி­களை வழங்க வேண்டும்.

துர­திஷ்­ட­வ­ச­மாக, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொழி­பெ­யர்ப்­புகள் 2020 முதல் நடை­மு­றையில் உள்ள இந்த வழி­காட்­டு­த­லுக்கு இயை­பாக இருக்­க­வில்லை. நன்­கொ­டை­யாளர் அரபுக் கல்­லூ­ரி­களில் கற்கும் மாண­வர்­களின் நல­னுக்­காக நல்ல நோக்­கத்­துடனேயே அனுப்­பி­யுள்ளார். நன்­கொ­டை­யாளர் முன்பே மாதி­ரி­களை அனுப்­பி­யி­ருந்­தாலும், அவை உத்­தி­யோகபூர்வ தரப்­புகள் மூலம் அனுப்­பப்­ப­ட­வில்லை. உத்­தி­யோ­க­பூர்வ பரிந்­து­ரைகள் மற்றும் இணக்­கப்­பா­டு­களைப் பெற்ற பின்னர் நன்­கொ­டை­யாளர் கப்பல் மூலம் அனுப்­பி­யி­ருந்தால், தற்­போ­தைய நெருக்­கடி நிலை தோன்­றி­யி­ருக்­காது. இந்த அணுகுமுறைகள் தொடர்பில் நன்கொடையாளருக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளால் முன்பே விளக்கமளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், மீளாய்வுக் குழு அரபு அல்குர்ஆனின் 26,000 பிரதிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் சுங்கம் சார்ந்த அமைச்சு அவற்றை விரைவில் வெளியிட வேண்டும். மொழிபெயர்ப்புகளை உள்ளடக்கிய மீதமுள்ள புத்தகங்களை நன்கொடையாளருக்கு அனுப்பலாம் அல்லது சரியான மொழிபெயர்ப்புகளை சரியான அடிக்குறிப்புடன் சேர்க்கலாம். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், நன்கொடையாளர் மற்றும் சுங்கத் தரப்பினருடன் ஒருங்கிணைத்து மேலும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.