முஸ்லிம்கள் மறந்துவிட்ட குதிரைமலை சியாரம்

0 91

றிப்தி அலி

இலங்­கைக்கும் அர­பு­ல­கிற்கும் இடை­யி­லான வர­லாற்றுத் தொடர்­புக்­கான வலு­வான ஆதா­ர­மாக திகழும் குதிரை மலை சியாரம் இன்று கவ­னிப்­பா­ரற்று காணப்­ப­டு­கின்­றது.

இது போன்ற பல சியா­ரங்­களை பரா­ம­ரிக்கத் தவ­றிய முஸ்லிம் சமூகம், தனது வர­லாற்று தொல்­லியல் அடை­யா­ளங்­களை காப்­பாற்ற மறந்து நிற்­கின்­றதா என்ற கேள்­வியும் எழு­கி­றது.

மன்­னா­ருக்கும் புத்­த­ளத்­துக்கும் இடை­யி­லுள்ள வட மேற்கு கரையில் வில்­பத்து தேசிய பூங்­கா­விற்கு அரு­கி­லேயே இந்த குதிரை மலை அமைந்­துள்­ளது. அதா­வது, வில்­பத்து காட்­டினை ஊட­றுத்துச் செல்லும் புத்­தளம் –- மன்னார் வீதியின் மேற்குப் பக்­கத்­தி­லேயே இந்த மலை காணப்­ப­டு­கின்­றது.
இலங்­கையின் வட மேல் கடற் பகு­தி­யி­லி­ருந்து பார்க்கும் போது தென்­ப­டக்­கூ­டிய ஒரே­யொரு மலை குதிரை மலை தான் என்று வர­லாற்று ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

குதிரை மலை குடாவை அண்­மித்­த­தாக முத்­துப்­பார்கள் இருந்­த­தா­கவும் தொன்மைக் காலம் முதல் இங்கு அரபு மற்றும் பார­சீக வணி­கர்கள் குதிரை மற்றும் முத்து வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் வர­லாற்றுக் குறிப்­புக்கள் தெரி­விக்­கின்­றன.

இந்த இயற்கைத் துறை­மு­கத்தை அவர்கள் “ஜபலுல் பர்ஸ்” (குதிரை மலை) என்று அழைத்­துள்­ள­தாக அரபு இஸ்­லா­மியத் துறையின் மூத்த விரி­வு­ரை­யா­ள­ராகப் பணி­யாற்­றிய கே.எம்.எச்.காலீதின் தனது “இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு (1986)” எனும் நூலில் குறிப்­பி­டுள்ளார்.

 

இதே­வேளை, உரோம வர­லாற்­றா­சி­ரி­ய­ரான பிளினி, குதிரை மலையை ஹிப்­பரஸ்‌ என அழைத்­த­தா­கவும் இது­வொரு கிரேக்க மொழிச் சொல்­லாகும் என வர­லாற்­றாய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

பெரிய அளவில் குதிரை வர்த்­தகம் இங்கு நடை­பெற்­ற­தாலும் கடலில் இருந்து பார்க்­கும்­போது இந்த மலை படுத்­தி­ருக்கும் குதிரை போல் தோற்­ற­ம­ளித்­த­தாலும் இதற்கு குதிரை மலை எனப் பெயர் வழங்­கப்­பட்­ட­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

கப்­பல்கள் திசை­யினை அறிந்­து­கொள்­வ­தற்­காக அரே­பி­யர்­க­ளினால் இந்த மலையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த கரை விளக்­குகள், மினா­ராக்கள் என அழைப்­பட்­டா­தாக ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ் தனது “புத்­தளம் முஸ்­லிம்கள்: வர­லாறும் வாழ்­வி­யலும் (2009)” எனும் நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.
இதற்கு மேல­தி­க­மாக “இலங்கை முஸ்­லிம்­களின் மறக்­கப்­பட்ட வர­லாறு” எனும் தலைப்பில் விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர் அனஸ் தொடர்ச்­சி­யாக எழுதி வந்த பத்­தியில் இந்த குதிரை மலை தொடர்பில் விரி­வாக எழு­தி­யுள்ளார்.

இலங்­கையின் முத­லா­வது சிவில் சேவை அதி­கா­ரி­யான கற்­பிட்­டி­யினைச் சேர்ந்த சைமன் காசிச்­செட்டி 1834ஆம் ஆண்டு வெளி­யிட்ட நூலில் குதிரை மலைக்கும் அரே­பி­யர்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பு பற்றி குறிப்­பிடப்பட்டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், இந்த மலை தற்­போது கட­ல­ரிப்­புக்கு உள்­ளாகி அதன் தோற்­றத்தில் பல மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­மை­யினை கடந்த வாரம் நாம் மேற்­கொண்ட கள விஜ­யத்தின் போது நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

இப்­பி­ர­தேசம் மலை என்று கூறப்­பட்­டாலும் பொது­வாக நாம் காணும் மலைக்­கு­ரிய அடை­யா­ளங்கள் எத­னையும் இங்கு காண முடி­ய­வில்லை. குதிரை மலை முழுக்க செம்பு நிற மண் காணப்­ப­டு­கின்­றது. விஜய மன்­ன­னினால் இலங்­கையில் முத­லா­வ­தாக உரு­வாக்­கப்­பட்ட இராச்­சி­ய­மான தம்­ப­பண்ணி என்ற சொல்லின் தமிழ் மொழி­பெ­யர்ப்பு செம்பு நிற மண்­ணாகும்.

இப்­பு­வியியல் பிர­தே­சத்­துக்கு மாத்­தி­ரமே சொந்­த­மான சில குட்­டை­யான மரங்­க­ளையும் இங்கு காண முடிந்­தது. இந்த மலை­யி­லி­ருந்து 60–70 அடி பள்­ளத்­தி­லேயே கடற்கரை காணப்­ப­டு­கின்­றது. இக் ­கடற்கரை­யோ­ரத்தில் பெரிய இஸ்­லா­மிய அரபுக்‌ குடி­யி­ருப்­புக்­களைக்‌ கட­லோ­டி­யான அனியஸ்‌ லொக்­கமஸ்‌ கண்­ட­தாக வர­லாற்­றா­சி­ரி­ய­ரான பிளினி கூறி­யுள்ளார்.

குதிரை மலையில்‌ இஸ்­லா­மிய ஞானப்‌ பெரி­யார்கள்‌ அடக்கம் பெற்ற மகி­மைக்­கு­ரிய சியா­ரங்கள் இருந்­துள்­ளன. இதனால், குறித்த மலை ஒரு புனிதத்‌ தல­மாக மதிக்­கப்­பட்டு அங்கு தரி­சித்து வரு­வது வழக்­க­மாக இருந்­தது என ஏ.என்‌.எம்‌. ஷாஜ­ஹா­னினால் எழு­தப்­பட்ட “புத்­தளம் வர­லாறும் மர­பு­களும் (1992)” எனும் நூலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும், இக்­க­டற்­க­ரையில்‌ இன்று எஞ்­சி­யுள்­ளது ஒரே­யொரு சியா­ர­மாகும். முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டா­மை­யினால் இந்த சியாரம் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளதை எமது கள விஜ­யத்தின் போது அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த மலைப் பிர­தே­சத்தில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள நல்­ல­டி­யாரின் பெயரை இது­வரை நிச்­ச­யிக்க முடி­ய­வில்லை. எனினும், சுந்­தர வாவாப்­பிள்ளை ஒலி தர்ஹா அல்­லது குதிரை மலை சாஹிபு என பண்­டைய காலத்து புல­வர்­க­ளினால் இந்த சியாரம் அழைக்­கப்­பட்­ட­தாக புத்­த­ளத்­தினைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற உதவிக் கல்விப் பணிப்­பா­ளரும், ஆய்­வா­ள­ரு­மான இஸட் ஏ. ஸன்ஹிர் தெரி­வித்தார். எழுத்­தாளர் ஷாஜ­ஹானின் மரு­ம­க­னான இவர், குதிரை மலைக்­கான எமது கள விஜ­யத்­திலும் பங்­கேற்­றி­ருந்தார்.

கரைத்­தீ­வினைச் சேர்ந்த வர­கவி செய்கு அலா­வுதீன் புலவர் மற்றும் குறிஞ்­சிப்‌­பிட்­டியில் வாழ்ந்த புலவர்‌ அசனா மரைக்கார்‌ செய்கு இஸ்­மாயில்‌ போன்ற பல புல­வர்கள்‌ இந்த மலை­­யி­னையும் அங்­குள்ள சியா­ரத்­தி­னையும் புகழ்ந்து கவி பாடி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

குதிரை மலைப்‌ பகு­தியால்‌ பய­ணிக்கும் கப்­பல்கள் யாவும்‌ அத்­து­றை­மு­கத்தில்‌ கட்­டாயம் தங்கி அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டி­ருக்கும் இறை நேசச்‌ செல்­வரின்‌ பேரில்‌ “பாற்‌ கிச்­சடி” எனும்‌ பாங்­கான உணவைத்‌ தயா­ரித்து, பிரார்­த்­த­னை­களின்‌ பின்பு அதைப்‌ பகிர்ந்­த­ளித்துச்‌ செல்­வது வழக்­க­மாக இருந்­துள்­ளது என ஷாஜ­ஹானின் புத்­தளம் வர­லாறும் மர­பு­களும் நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன்‌ மூலம்‌ தமது கடற்‌ பிர­யா­ணத்தில்‌ தடங்கல்கள்‌ ஏதும்‌ ஏற்­ப­டாமல்‌ பாது­காப்­புடன்‌ போய்­வர ஆசிர்­வாதத்தைப்‌ பெறலாம்‌ என்ற நம்‌­பிக்கை இருந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆயிரம் வரு­டங்கள் வாழ்­கின்ற ஒரு மக்கள் கூட்­டத்­திற்கு சொல்லிக் கொள்ள ஒரு மலை, ஒரு ஆறு, ஒரு அருவி, ஒரு கடல், ஒரு குளம், ஒரு குகை, ஒரு பள்­ளத்­தாக்கு இல்­லா­மலா போய்­விடும். அதன் அடிப்­ப­டை­யி­லேயே அரபு – முஸ்லிம் பாரம்­ப­ரி­யத்தின் இலட்­சி­ய­மா­கவும் இலக்­கா­கவும் இன்றும் நிலவும் ஒரு தொன்­மைச்­சான்றே குதிரை மலை­யாகும் என ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர் அனஸ் கூறு­கின்றார்.

எனினும், இந்த வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தொன்­மைச்­சான்றை பாது­காக்க இலங்கை முஸ்லிம் சமூகம் தவ­றி­விட்­டது என்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது.

குதிரை மலையில் அடக்கம் செய்­யப்­பட்­டி­ருப்­பவர் ஒரு முஸ்லிம் என்ற விடயம் எமது நாட்டில் வாழ்­கின்ற ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுக்கு தெரிந்­துள்­ளது. இதனை எமது கள விஜ­யத்தின் போது நேர­டி­யாக உணர முடிந்­தது. இந்த மலை­யினைப் பார்­வை­யிட வந்­தி­ருந்த ஏனைய சம­யத்­த­வர்கள், இந்த சியாரம் தொடர்பில் எம்­மிடம் கேட்­ட­றிந்து கொண்­டனர்.

எனினும், இது தொடர்பில் போதிய தக­வல்­களை எம்மால் வழங்க முடியாமல் போனமை மிகவும் வருத்தமளிக்கின்றது. இலங்கையிலுள்ள சியாரங்களை பாதுகாத்து பாரமரிக்கும் பொறுப்பு வக்பு சபையிடம் காணப்படுகின்றது.
இதற்காக உருவாக்கப்பட்ட வக்பு நிதியத்தில் பல கோடி ரூபாய் பணம் உள்ளது. எனினும், இந்த சியாரம் தொடர்பான எந்தவொரு தகவலும் வக்பு சபையில் இல்லை என்ற தகவல் எமது தேடலின்போது தெரியவந்தது.
கொள்கை மற்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து குதிரை மலையிலுள்ள சியாரத்தினை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வலுவான வரலாற்றினை பாதுகாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.