வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சட்டம் வேண்டும்

0 103

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரணில், சஜித், அநுர எனும் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி வருகின்றனர். நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையிலான முரண்பாடுகளைக் காரணமாகக் கொண்டு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற நிலைப்பாட்டையும் சிலர் முன்வைக்கின்றனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது ஒரு நாட்டின் முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இந்தப் பிர­தான தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்கள் மாத்­திரம் போட்­டி­யிடு­வதே நன்மை பயக்கும். பொது மக்­களின் நம்­பிக்­கையைத் தன்­ன­கத்தே ஈர்த்­துள்ள, அவர்­களின் விருப்­பத்­துக்­கு­ரிய சிலர் மாத்­தி­ரமே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­ வேண்டும். அபி­வி­ருத்தியடைந்­துள்ள நாடு­களில் இந்­நி­லை­மை­யினை எம்மால் நோக்­க­மு­டி­கி­றது.

எது எப்படியிருப்பினும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனா­தி­பதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் வேட்புமனுத் தாக்கல் செய்து போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த முறை போலவே இம்முறையும் நீளமான வாக்குச் சீட்டை அச்சிட வேண்டிய நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தள்ளியுள்ளது.
உண்மையில் பிரதான வேட்பாளர்களுக்கு இறுதி நேரத்தில் தமது ஆதரவை வெளிப்படுத்தி வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு அதிக எண்ணிக்கையானோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவ்­வா­றான போலி வேட்­பா­ளர்­களால் தேர்தல் ஆணைக்­கு­ழுவும் வாக்­கா­ளர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்றே கூற­வேண்டும். இவ்­வா­றான வேட்­பா­ளர்­க­ளி­னாலே தேர்தல் ஆணைக்­கு­ழுவின் செல­வினங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்த அதி­க­ரித்த செல­வுகள் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­க­ளி­னாலோ அல்­லது வேட்­பாளர்களி­னாலோ செல­வ­ழிக்­கப்­ப­டு­வ­தில்லை. நாட்டு மக்­களின் பணமே இதற்குச் செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான வீணான அதி­க­ரித்த செல­வுகள் கார­ண­மா­கவே எமது நாட்டின் பொரு­ளா­தா­ரமும் ஸ்திர­மற்ற நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது.

தேர்­தலின் பின்பு இவ்­வா­றான வேட்­பா­ளர்­களைக் தேடிக்­கண்­டு­பி­டிக்க முடி­யாமற் கூட போகலாம். அவர்­க­ளினால் நாட்­டுக்கு ஏற்­பட்ட நஷ்­டங்­களை மீட்­டிக்­கொள்­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் கூட எமது நாட்டில் இல்லை.
ஜன­நா­யகம் என்­பது எந்­த­வொரு மோச­டிக்­கா­ர­ருக்கும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகும் சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தாக இருக்­கக்­கூ­டாது. இன்­னொ­ரு­வரின் நன்­மைக்­காக வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­வது நாட்டு மக்­களின் ஜன­நா­ய­கத்தை சவா­லுக்குட்படுத்தும் முயற்­சி­யாகும்.

இவ்­வா­றான போலி வேட்­பா­ளர்­களின் உள்­வாங்­கலைத் தவிர்ப்­ப­தற்­காக எதிர்­கா­லத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குச் செலுத்­தப்­படும் கட்­டுப்­பணத் தொகையை அதி­க­ரிக்க வேண்டும். அத்­தோடு இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் இறங்கும் அர­சியல் கட்­சிகள் பதிவு செய்­யப்­ப­டு­வதும் நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு பின்பு பொதுத்­தேர்தல் நடாத்­தப்­படும். புதிய அர­சாங்கம் பத­வியில் அமரும். எனவே எதிர்கால ஜனா­தி­பதித் தேர்­தல்களில் பிர­தான அபேட்­ச­கர்­க­ளுக்கு மாத்­திரம் போட்­டி­யிடும் வகையில் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான சட்டம் இந்தக் கால எல்லையில் இயற்றிக் கொள்­ளப்­ப­ட­ வேண்டும்.

இந்தப் பொறுப்­பினை தேர்தல் ஆணைக்­கு­ழுவின் மீது சுமத்திவிட்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மெளனமாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. இது விடயத்தில் பொது மக்களுக்கும் பொறுப்பிருக்கிறது. அதிகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கையினால் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், மேலதிக செலவினங்கள், வாக்களிக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் சட்ட ரீதியான தீர்வுகள் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றிணையவேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.