கொவிட் ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியலுக்காக அல்ல

அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

0 58

கொவிட் சட­லங்­களை எரித்­த­மைக்­காக அர­சாங்கம் அண்­மையில் மன்­னிப்புக் கோரி­ய­மை­யா­னது அர­சியல் உள்­நோக்கம் கொண்­ட­தல்ல எனக் குறிப்­பிட்­டுள்ள வெளி­வி­வ­கார மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி நீர் வழங்கல் அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆய்­வு­களின் அறிக்­கை­க­ளுக்­க­மை­யவே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

அர­சாங்கம் கொவிட்-19 இறுதிச் சடங்கு கொள்­கை­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சியா என ஆங்­கில இணை­யத்­தளம் ஒன்று எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
நிச்­ச­ய­மாக இது அர­சியல் நோக்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. டாக்டர் சன்ன ஜய­சு­மான, டாக்டர் மெத்­திகா வித்­தா­னகே மற்றும் தொழில்­நுட்பக் குழு­வினால் முன்­வைக்­கப்­பட்ட நிலத்­தடி நீரினால் கொவிட் வைரஸ் பரவும் என்ற வாதத்தை முறி­ய­டிப்­ப­தற்­காக நாம் ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. வாசு­தேவ நான­யக்­கார நீர் வழங்கல் அமைச்­ச­ராக இருந்த போது அவ­ரது முயற்­சியில் இரண்டு ஆய்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அமைச்சர் ஜீவன் தொண்­ட­மானின் காலத்­தி­லேயே அந்த அறிக்­கை­களின் முடி­வுகள் கிடைத்­தன. அந்த அறிக்­கையை சில காலத்­திற்கு முன்பு நான் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்தேன். எனினும் அவர்கள் அப்­போது அதை ஒத்­தி­வைக்க விரும்­பினர். எனினும் அனைத்து அறிக்­கை­களும் கிடைத்­ததால், அதற்­கான முன­னெ­டுப்­பு­களை விரைவு படுத்­தினோம். அதற்கு அமைச்­ச­ரவை அனு­ம­தி­ய­ளித்­தது.

அதைத் தொடர்ந்து ஒரு புதிய சட்­டத்தை நான் பரிந்­து­ரைத்து, வரைவு செய்து அமைச்­ச­ர­வையின் முன் வைத்தோம். தொற்­றுநோய் போன்ற சூழ்­நி­லையில் மக்­க­ளுக்கு அவர்­களின் இறுதிச் சடங்கு முறையைத் தேர்வு செய்யும் உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அமைச்­ச­ரவை இந்த புதிய சட்­டத்தை நிறை­வேற்­றி­யது. உலக சுகா­தார நிறு­வனம் ஒரே ஒரு முறையை மட்­டுமே பரிந்­து­ரைக்கும் போது மட்­டுமே விதி­வி­லக்கு. இல்­லை­யெனில் மக்கள் தங்­க­ளுக்கும் அவர்­களின் அன்புக்குரியவர்களுக்கும் விருப்பமான முறையில் இறுதிச் சடங்கை முன்னெடுக்க புதிய சட்டம் அனுமதியளிக்கிறது.
எனவே இது அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல. நாட்டுக்குத் தேவையான சரியான நடவடிக்கையையே நாம் செய்தோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.