வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்துமாறு தொழில் வாண்மையாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0 143

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்­கப்­பட்டு உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­தாக தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றியம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளது.

அத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வழங்கும் செயற்­திட்­டத்­தின்­போது வடக்கு, கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்­து­மாறும் அவ்­வ­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் பிர­மு­கர்­களை மட்­டக்­க­ளப்பு “ஈஸ்ட் லகூன்” உல்­லாச விடு­தியில் சந்­தித்தார்.

இதன்போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் தொடர்பில் கருத்துக்களை தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றிய தவி­சாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அவ் அமைப்பின் உபதலைவர் ஜாபீர் நளீமி ஆகியோர் பல்வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

முதலில் கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் ஒன்­றி­யத்தின் தவி­சாளர் முபீன் அண்­மையில் வட­மா­கா­ணத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்­தத்தை பொலிஸ் அதி­காரம் இன்றி நடை­மு­றைப்­ப­டுத்தப் போவ­தாக கூறி இருந்­தீர்கள்.

உண்­மையில் இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்­டி­யதை முஸ்லிம் சமூகம் வர­வேற்­கி­றது.

ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் இத்­த­கைய தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­வது முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்­தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்­லிம்­க­ளுக்­குள்ளே தொட­ராக இருந்து வரு­கின்­றது. காரணம் இங்கே பத­வியில் இருக்­கின்ற தமிழ் அதி­கா­ரிகள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் கிழக்கு மாகா­ணத்தில், வட­மா­கா­ணத்தில் முஸ்­லிம்­களை நசுக்கும் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர்.

தற்­போது அர­சியல் யாப்பின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள அதி­காரப் பர­வ­லாக்க நடை­மு­றை­களின் ஊடாக அதா­வது பிர­தேச செய­லகம், கச்­சேரி முறை­மை­களின் ஊடாக அவ்வதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தியே முஸ்­லிம்­களின் உரி­மை­களை தொடர்ந்­து­தேச்­சி­யாக இந்த தமிழ் அதி­கா­ரிகள் மறுத்து வரு­கின்­றனர்.
எனவே இவர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை கொடுக்­கின்றபோது அவ் அதி­கா­ரங்­களைக் கொண்டு மேலும் முஸ்­லிம்­களை அவர்கள் நசுக்­கு­வார்கள் என்ற அச்சம் முஸ்­லிம்­களை பீடித்­துள்­ளது. என­வேதான் 13வது திருத்தம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்­கான தீர்வு என்ன என்ற கேள்­வியை அதி­மே­தகு ஜனா­தி­ப­தி­யா­கிய உங்­களைப் பார்த்து நாங்கள் கேட்­கின்றோம்? இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும்.

ஆனால் அத்­தீர்வு வழங்­கு­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பொருத்­த­மான தீர்­வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்­களை மிகத் தாழ்­மை­யாக கேட்­டுக்­கொள்­கிறோம்.
அடுத்த விட­ய­மாக தங்கள் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­வது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் பாரிய நிலப்­பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­கின்­றனர். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 27% வாழ்­கின்ற முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ­மீட்டர் காணி­யையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது.
மட்­டக்­க­ளப்­பிலே 2854 சதுர கிலோ­மீட்டர் மொத்த காணியில் தமிழ் பிர­தே­சத்தில் 2808 சதுர கிலோ­மீட்டர் அவர்­க­ளுக்கு உரி­ய­தாக காணப்­பட நான்கு பிர­தேச செய­ல­கங்­களைக் கொண்ட முஸ்­லிம்கள் வெறு­மனே 46 சதுர கிலோ மீற்றர் காணி­க­ளையே பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக உள்­ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும்.

2023 ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்­கை­யின்­படி முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் 27% ஆகும் எனவே, 27 வீதத்­திற்கு மொத்­த­மாக முஸ்­லிம்­க­ளுக்கு 770 சதுர கிலோ­மீட்டர் காணி உரித்­து­டை­யது
ஆனால் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்­களின் காணி உரி­மை­களை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்­ட­ருக்குள் அவர்­களை முடக்­கி­யுள்­ளது.

கடந்த உள்­நாட்டு யுத்­தத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் 33 கிரா­மங்­களில் இருந்து பல­வந்­த­மாக துரத்தி அடிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே அமைந்­துள்ள காத்­தான்­குடி, ஏறாவூர், கல்­குடா போன்ற பிர­தே­சங்­களில் குடி­யே­றினர். இதனால் ஏற்­க­னவே அங்கு நில­விய காணி­தட்­டுப்­பாடு மேலும் பாரிய தட்­டுப்­பாட்டை அம் முஸ்லிம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தி­யது.

அத்­தோடு 1999 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட பனம்பல ஆணைக்குழு­விற்கு புதிய பிர­தேச செய­லக கோரிக்­கையை முன்­வைத்த தமிழ் தரப்­பினர் தங்­க­ளுக்­கான ஒரு புதிய தமிழ் பிர­தேச செய­ல­க­மாக கோரளை தெற்கு கிரான் பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்­கு­கின்ற போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு காணி இருந்த ஒரே­ ஒரு பிர­தே­ச­மான கோரளை மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் இருந்து ஐந்து கிரா­மங்­களை திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் இணைத்து தங்­க­ளுக்­கான பிர­தேச செய­ல­கத்தை உரு­வாக்கிக் கொண்­டனர். ஏற்­க­னவே பல­மான காணி தட்­டுப்­பாட்டை எதிர்­நோக்­கிய முஸ்­லிம்­க­ளுக்கு இத்­த­கைய திட்­ட­மிட்ட செயல் அவர்­களின் காணியை உரி­மையை மேலும் மிகப்­பெ­ரிய சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யது.
எனவே மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்­லிம்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு ஏற்ப 770 சதுர கிலோ­மீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையில் புதிய பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக 1999 ஆம் ஆண்டு பணம்­ப­லன ஆணை குழு அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்­டது, இவ்­வா­ணைக்­குழு இலங்­கையின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்து ஆறு பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­கி­யது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் இரண்டு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உரு­வாக்­கப்­பட்­டது.
அதில் ஒன்று கோர­ளை­ப்பற்று மத்தி பிர­தேச செய­லகம் ஆகும். இக்­கோ­ர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லகம் முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்­ட­துடன் அதே­வேளை கோர­ளைப்­பற்று தெற்கு கிரான் பிர­தேச செய­லகம் தமி­ழர்­க­ளுக்­கான உரு­வாக்­கப்­பட்­டது.

இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­களில் கிரான் பிர­தேச செய­ல­கத்தை உத்­தி­யோகப்பற்­றற்ற முறையில் 620 சதுர கிலோ­மீட்டர் காணியை வழங்கி அப்­பி­ர­தேச செய­ல­கத்தை இயங்­கு­வ­தற்கு மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் அனு­மதி வழங்­கி­யது. அதே வேளை முஸ்­லிம்­க­ளுக்கு என உரு­வாக்­கப்­பட்ட அதா­வது 240 சதுர கிலோ­மீட்டர் காணி பரப்பைக் கொண்ட கோர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­ல­கத்தை அதற்­கு­ரிய காணி அள­வீட்­டினை அள­வீடு செய்­யாமல் மட்­டக்­க­ளப்பு கச்­சேரி மறுத்து வரு­வ­துடன் இன்று வரை சுமார் 23 வரு­டங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிர­தேச செய­லகம் வெறும் ஆறு சதுர கிலோ­மீட்­ட­ருடன் இயங்கி வரு­கி­றது.

அத்­துடன், 2000 ஆண்டு இச்­செ­ய­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தையும் இது­வரை அமுல்­ப­டுத்­தாமல் இழுத்­த­டித்து முஸ்­லிம்­களின் காணி உரி­மையை இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லகம் மறுத்­து­வ­ரு­கி­றது.

இது­வ­ரையில் 9 அர­சாங்க அதி­பர்கள் அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தை மறுத்து அர­சாங்­கத்தின் ஆணைக் குழுவின் சிபா­ரி­சையும் மறுத்து முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் செய்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இது தொடர்பில் அர­சாங்கம் இது­வரை உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஜனா­தி­பதி, பிர­தமர் என பலரை சந்­தித்தும் இது­வரை இந்த அநி­யா­யத்­துக்கு முடிவு கிடைக்­க­வில்லை. எனவே உங்­க­ளு­டைய காலத்­தி­லா­வது இந்த பிரச்­சினையை தீர்த்து வையுங்கள் என்றார்.

அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்பில் சக­ல­ரு­டனும் கலந்­து­ரை­யாடி தீர்வை வழங்க எதிர்­பார்க்­கிறோம். ஏனை­ய­ வி­வ­கா­ரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்­ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்­லோ­ரி­டமும் கலந்­து­ரை­யாடி இதற்­கான தீர்­வு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த தொழில் வாண்­மை­யாளர் மற்றும் சிவில் அமைப்­பு­களின் ஒன்­றி­யத்தின் உப தலை­வ­ரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி,

காத்­தான்­கு­டியின் எல்லை பிரச்­சி­னைகள் மிக நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன. இவ் எல்­லைகள் தொடர்பில் தெளி­வான மூன்று வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்­லை­க­ளிலும் முஸ்­லிம்­களின் காணி அடாத்­தாக ஏனைய பிர­தேச செய­ல­கங்­களால் கைப்­பற்­றப்­பட்டு நிர்­வாகம் செய்­யப்­ப­டு­கி­றது. பாரிய காணித்­தட்­டுப்­பாட்டை எதிர்நோக்கும் காத்­தான்­கு­டிக்கு இது மிகப்­பெ­ரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

எனவே இவ் எல்லை பிரச்­சினையை தீர்த்துத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம்.
மேலும் காத்­தான்­குடி பிர­தேச சபை நகர சபை­யாக தரம் உயர்த்­தப்­பட்ட வேளையில் காத்­தான்­கு­டியின் காணிப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் அமுல்­ப­டுத்­தப்­பட்ட “உரு­மய” வேலைத் திட்­டத்தில் காத்­தான்­கு­டியில் பாரிய காணிப் பிரச்­சி­னையை எதிர்­நோக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடி­ய­வில்லை.

எனவே புதிய காத்­தான்­கு­டியை ஒரு பிர­தேச சபை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­ப­தியை கேட்டுக் கொள்­வ­தோடு அப்­பி­ர­தேச சபை­யுடன் காத்­தான்­கு­டிக்கு நெருக்­க­மாக உள்ள முஸ்லிம் கிரா­மங்­க­ளான பூனொச்­சி­முனை, மஞ்சந் தொடுவாய், பால­முனை போன்ற கிரா­மங்­க­ளையும் இணைத்து புதிய காத்­தான்­குடி பிர­தேச சபை ஒன்றை உரு­வாக்கித் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கிறோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.