தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரிக்கைக்கு பதிலளிக்காத பள்ளி தலைவருக்கு ஆணைக்குழு அழைப்பு

0 129

தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்­காத பள்­ளி­வாசல் தலை­வரை தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை முஹை­யதீன் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் மற்றும் அப்­பள்­ளி­வா­சலின் தகவல் அதி­காரி ஆகி­யோ­ருக்கே இந்த அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­விடம் மேற்­கொண்ட மேன் முறை­யீட்­டினை அடுத்தே இந்த உத்­த­ரவு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பி.ப 3.00 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள குறித்த மேன் முறை­யீடு தொடர்­பான விசா­ர­ணையில் ஆஜ­ரா­கு­மாறும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் கடந்த ஜூலை 24ஆம் திகதி தக­வ­ல­றியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
ஆணைக்­கு­ழு­வினால் குறிக்­கப்­பட்ட திக­தியில் நடை­பெ­ற­வுள்ள அதன் அமர்வில் பள்­ளி­வாசல் தலைவர் பங்­கேற்­கா­வி­டினும், இந்த மேன் முறை­யீடு ஆணைக்­கு­ழு­வினால் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­ப­டலாம் என அவ­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்ள அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஆணைக்­குழு முன்னால் தோன்­று­வ­தற்கு தவ­று­கின்ற அல்­லது மறுக்­கின்ற தகவல் அதி­காரி மற்றும் குறித்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரிக்கு எதி­ராக ஆணைக்­கு­ழு­வினால் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் 39ஆவது பிரிவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கல்­முனை முஹை­யதீன் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு வக்பு செய்­யப்­பட்ட காணி­களின் விப­ரங்கள், அதன் மூலம் கிடைக்கும் வரு­மா­னங்கள், இப்­பள்­ளி­வா­சலின் கீழுள்ள கடைகள், அதன் மூலம் கிடைக்கும் வரு­மா­னங்கள், இப்­பள்­ளி­வா­சலின் வரவு மற்றும் செலவு போன்ற விட­யங்­களைக் கோரி ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட தகவல் கோரிக்கை மற்றும் மேன் முறை­யீடு ஆகி­ய­வற்­றுக்கு குறித்த பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை­யினால் இன்று வரை எந்­த­வித பதிலும் வழங்­கப்­ப­டவில்லை.

1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்­டத்தின் கீழ் வக்பு சபையில் இப்­பள்­ளி­வாசல் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ள­மை­யினால் தக­வ­ல­றியும் உரிமைச் சட்­டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் இப்­பள்­ளி­வாசல் ஒரு பகி­ரங்க அதி­கா­ர­சபை எனத் தெரிவித்தே இந்த மேன் முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் கடந்த ஜுலை 24ஆம் திகதி புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டு, புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.