ஆதரிப்பதற்கான நிபந்தனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்

0 102

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் பற்றி விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனா­திபதித் தேர்­தலைப் பொறுத்­த­வரை ரணில், சஜித், அநுர எனும் முத்­­த­ரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­ட்டது. எனினும் பொது ஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டியை தோற்றுவித்துள்ளதுடன் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

சிங்­கள மக்­களின் வாக்­குகள் மேற்­படி நான்கு பிர­தான வேட்­பா­ளர்­களுக்கும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள் எவ்­வாறு அமையும் என்­பதை இப்­போ­தைக்குக் கூற முடி­யா­துள்­ளது. சில தமிழ் கட்சிகள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தனது தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

இந்­நி­லை­யில்தான் முஸ்லிம் தரப்பு இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்கப் போகி­றது என்ற கேள்வி எல்லோர் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல தடவைகள் கூடியும் இதுவரை யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எட்டவில்லை.

எனினும் இவ்விரு கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­டன் கைகோர்த்துச் செயற்­பட்டு வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி பல்­வேறு சலு­­கை­களை வழங்கி வரு­கிறார். தத்­த­மது மாவட்டங்­களில் அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­­கென பல மில்­லியன் கணக்­கான நிதி ஒதுக்­கீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது வழ­க்கம் போல சலு­கை­க­ளுக்கும் சுய­ந­லன்­க­ளுக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் அடி­ப­ணிய ஆரம்­பித்து விட்­டார்கள் என்­ப­தையே காண்­பிக்­­கி­ற­து.

முஸ்லிம் காங்கிரஸ் தாம் நிபந்தனைகளுடனேயே சஜித்தை ஆதரிக்கவுள்ளதாக கூறுகிறது. எனினும் அந்த நிபந்தனைகள் என்ன என்பது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. வழக்கம் போல இம்முறையும் இந்த நிபந்தனைக் கதை வெறும் கண்துடைப்பாகவே அமையப் போகிறதா அல்லது சமூகம் எதிர்நோக்குகின்ற சமகாலப் பிரச்சினைக ளுக்குத் தீர்வைக் கோரப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகம் சம­கா­லத்தில் பல்­வேறு நெருக்­க­டி­­களைச் சந்­தித்து வரு­கி­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் கொவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய தலை­யாய பிரச்­சி­னைகள் உட்­பட முஸ்லிம் சமூ­க­த்­திற்கு நீதி கிடை­க்க வேண்­டிய பல்­வேறு விட­யங்கள் நம்முன் உள்­ளன. எனினும் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்சி­னை­களை முன்­னி­றுத்த பொது­வான கோரிக்­கை­களை எல்லா வேட்பா­ளர்­க­ளி­டமும் முன்­வைத்து அவர்­களின் நிலைப்­பா­டு­களை அறிந்து ஆத­ர­வ­ளிக்கும் சாத்­தி­யங்­க­ளைக் காண முடி­ய­வில்லை. முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும் தமது தனிப்­பட்ட அர­சியல் எதிர்­­காலம் மற்றும் கட்­சியின் நலன் ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்­தியே தீர்­மா­னங்­களை எடுக்­கி­றார்கள் என்­பதும் தெளி­வாகத் தெரி­கி­ற­து. அதுமாத்திரமன்றி நாட்டைப் பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் முன்னேற்ற வேண்டிய கடப்பாடு சகல வேட்பாளர்கள் முன்னும் உள்ளது. இது தொடர்பிலும் முஸ்லிம் கட்சிகள் மிகவும் உறுதியான கோரிக்கைகளை வேட்பாளர்களிடம் முன்வைக்க வேண்டும்.

இந்­நிலையில் முஸ்லிம் கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­விக்க முன்­னர், முஸ்லிம் சிவில் சமூக நிறு­­வ­னங்கள் முன்­வந்து இக் கட்­சி­க­ளுக்­கு அழுத்­தங்­களை வழங்க முன்­வர வேண்டும். ஜனா­திபதித் தேர்­தலில் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ளுக்­கு உத்­த­ர­வா­த­ம­ளிக்­கின்ற, கடந்த கால இழப்­பு­க­ளுக்கு பரி­காரம் வழங்­கக் கூடிய வேட்பாள­ருக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என பரிந்­து­ரைக்க வேண்டும். வழக்கம்போல முஸ்லிம் கட்­சிகள் சமூ­கத்தின் வாக்­கு­களை அடகு வைத்து தமது நலன்­களை அடைந்து கொள்வதற்கு இடமளிக்கலாகாது. மாறாக நிபந்தனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு சமூகத்தின் ஒப்புதல் பெற்றப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.