போதைப்பொருள் கும்பல், பாதாள உலகத்தினரிடம் தெருவோரக் குழந்தைகள் தஞ்சமடைவதை தடுத்தோம்

0 108

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கில் சேவ் த பேர்ள் பொருளாளர் சாட்சியம்; சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. பொறுப்பேற்ற ஆவணங்களில் வவுச்சர்கள் மாயம் ‍; மதுரங்குளி காணி குறித்தும் சாட்சியம்

 

எப்.அய்னா

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தலை­வ­ராக செயற்­பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெரு­வோர குழந்­தை­க­ளுக்கு வல­மான எதிர்க்­கா­லத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்பட்­ட­தா­கவும், அவ்­வாறு அவர்­களை பொறுப்­பேற்று கவ­னிக்­காமல் இருந்­தி­ருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்­பல்­க­ளிலும், பாதாள உல­கத்­தி­ன­ரி­னதும் பிடிக்குள் சிக்கி சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்க அதிக வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளிக்­கப்பட்­டது. சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் சாட்­சி­யான சேவ் த பேர்ள் அமைப்பின் பொரு­ளா­ள­ராக செயற்­பட்ட மொஹம்மட் இம்ரான் என்­பவர் சாட்­சியம் அளிக்கும் போதே இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

கடந்த வாரம் புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்த வழக்கு விசா­ர­ணை­களின் இடையே, இந்த விட­யத்தை பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவின் நெறிப்­ப­டுத்­தலில் சாட்­சியம் அளிக்கும் போது குறித்த சாட்­சி­யாளர் வெளிப்­ப‌­டுத்­தினார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த வாரம் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரசா பாட­சாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ‌ உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.
2 ஆம் பிர­தி­வா­தி­யான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மையில் குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம ஆஜ­ரா­கினார்.

அத்­துடன் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை கண்­கா­ணிக்க ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள், அமெரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் நீதி­மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னதாலேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.
இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவின் நெறிப்­ப­டுத்­தலில் சேவ் த பேர்ள் அமைப்பின் பொரு­ளா­ள­ராக செயற்­பட்ட இம்ரான் சாட்­சி­ய­ம­ளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் சேவ் த பேர்ள் அமைப்பின் பொரு­ளா­ள­ராக கட­மை­யாற்­றி­ய­தா­கவும் அக்­கா­லப்­ப­கு­தியில் அவ்­வ­மைப்பின் தலை­வ­ராக முதலில் நஜ்மான் என்­ப­வரும் பின்னர் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வும் கட­மை­யாற்­றி­ய­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

அமைப்பின் திட்­டங்கள் தொடர்­பி­லான நிதி அனு­ம­திகள் பூரண ஆராய்வின் பின்னர், உரிய நிறை­வேற்றுக் குழுவின் அனு­ம­தியும் கிடைத்த பின்னர் தன்­னா­லேயே இறுதி அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­ட­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.
இதன்­போது, சேவ் த பேர்ள் அமைப்­புக்கு சொந்­த­மான மது­ரங்­குளி பகு­தியில் உள்ள காணி ஒன்­றினை மைய­ப்­படுத்தி கேள்வி எழுப்பப்­பட்­டது. குறித்த காணியை யார், எப்­போது, எதற்­காக வழ­ங்­கி­னார்கள் என்ற கேள்­வி­க­ளுக்கு விடை தெரியும் வண்ணம் சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன்­போது உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களில் குண்­டு­தா­ரி­க­ளாக அறி­யப்­ப‌டும் மொஹம்மட் இல்ஹாம் என்­பவர், சேவ் த பேர்ள் அமைப்பின் நிறை­வேற்றுக் குழுவில் இருந்­த­தா­கவும், அவ­ரது சகோ­த­ர­ரான மற்­றொரு குண்­டு­தா­ரி­யான இன்சாப் அஹ­மட்டின் தலை­யீட்­டுடன் இப்­ராஹீம் ஹாஜி­யாரின் குடும்­பத்­தி­னரால் குறித்த காணி அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­ட­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். 2017 ஆம் ஆண்­ட­ளவில் அக்­காணி அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­ட­தா­கவும், மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் நோக்கில், முன்­னெ­டுக்­கப்பட்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் ஒவ்­வொ­ரு­வரும் ஏற்­றுக்­கொண்ட பொறுப்­புக்­களின் பின்­ன­ணியில் குறித்த காணி அன்­ப­ளிப்­பாக பெறப்­பட்­ட­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

எவ்­வா­றா­யினும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தலின் குண்­டு­தாரி ஒருவர் அமைப்பின் நிறை­வேற்றுக் குழுவில் இருந்­த­மையை மைய­ப்­படுத்தி தொடர்ச்­சி­யாக கேள்­வி­களை எழுப்­பினார்.

அதற்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர், உண்­மையில் மொஹம்மட் இல்­ஹாமின் தந்­தை­யான இப்­ராஹீம் ஹாஜி­யா­ரையே சேவ் த பேர்ள் அமைப்பு தனது அமைப்பில் உறுப்­பி­ன­ராக சேர்க்க முயன்­ற­தா­கவும், அவ­ரது வேலைப் பளு கார­ண­மாக அவ­ரது பரிந்து­ரைக்கு அமைய அவ­ரது மகனை பின்னர் சேர்த்­த­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். கொழும்பு முஸ்லிம் தெரு­வோரக் குழந்­தை­களின் எதிர்­கா­லத்­துக்­காக குறித்த அமைப்பு பாடுபட்­ட­தா­கவும், அக்­கு­ழந்­தை­களை, பல கார­ணங்­களைக் காட்டி பல அரச பாட­சா­லைகள், தனியார் பாட­சா­லைகள் சேர்க்க மறுத்­த­தா­கவும், அவ்­வா­றான பின்­ன­னி­யி­லேயே புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ர­ஸா­வுடன் ஓர் இணக்­கப்பாட்டின் அடிப்­ப­டையில் அப்­பிள்­ளை­களை சேர்த்­த­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவ்­வாறு சேர்க்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு சேவ் த பேர்ள் அமைப்பு மாதார்ந்தம் ஒரு தொகையை மத்­ர­ஸா­வுக்கு செலுத்­தி­ய­தா­கவும், அதற்கு மேல­தி­க­மாக குறித்த மத்­ர­ஸாவில் ஆங்­கிலம், கணிதம் உள்­ளிட்ட பாட­சாலை கல்வி மற்றும் பிற செயற்­பா­டு­க­ளுக்­காக நிதிப் பங்­க­ளிப்­புக்­களை வழங்­கி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

சேவ் த பேர்ள் அமைப்பு குறித்த நட­வ­டிக்­கையை செய்­யா­தி­ருந்­தி­ருந்தால், குறித்த பிள்­ளைகள் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யாகி, பாதாள உலக கும்­பல்­க­ளுடன் சேர்ந்து சமூக விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே அதிகம் இருந்­த­தாக சாட்­சி­யாளர் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது, அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர், பிள்­ளை­களை வீடு வீடாக சென்று சேர்க்கும் நட­வ­டிக்­கையில் தான் நேர­டி­யாக பங்­கேற்­க­வில்லை எனவும், மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கல்விக் குழு ஊடாக தேடிப் பார்த்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் அம்­மத்­ர­ஸா­வுக்கு அடிக்­கடி சென்­றாரா என பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் கேள்வி எழுப்­பிய போதும், தலைவர் என்ற ரீதியில் மாண­வர்­களின் கல்வி தொடர்பில் தேடிப் பார்க்க அவ­ருக்கு பொறுப்­பி­ருந்­த­தாக குறிப்­பிட்ட சாட்­சி­யாளர், அடிக்­கடி நேர­டி­யாக சென்­றாரா என்­பது தொடர்பில் தனக்கு தெரி­யாது என குறிப்­பிட்டார்.

இதன்போது சேவ் த பேர்ள் அமைப்பின் கூட்­டங்­களின் போதான கூட்­ட­றிக்­கை­களை மையப்­ப‌­டுத்தி கேள்வி எழுப்­பப்பட்­டது. சேவ் த பேர்ள் அமைப்பின் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. ஆகி­யன பல ஆவ­ணங்­க­ளை எடுத்துச் சென்­ற‌­தா­கவும், தானும் பல ஆவ­ணங்­களை சுமார் 20 தட­வைகள் விசா­ர­ணைக்கு சென்று கைய­ளித்­த­தா­கவும் எனினும் அமைப்பின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிதி கொடுக்கல் வாங்கல்களை காட்டும் வவுச்சர்கள் எவையும் மன்றில் உள்ள சான்றாவணங்களில் இல்லை எனவும் சாட்சியாளர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து இவ்வழக்கின் சாட்சியம் மீதான குறுக்கு விசாரணைகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அன்றைய தினம் மற்றொரு சாட்சியாளருக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்ட நிலையில், மேலும் இரு சாட்சியாளர்களின் சாட்சி நெறிப்படுத்தலுடன் வழக்கு தொடுநர் தரப்பின் சாட்சி விசாரணைகளை முடிவுறுத்த எதிர்பார்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம குறிப்பிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.