மத்ரஸாக்களின் பாடவிதானத்தை மீளாய்வு செய்ய குழு நியமனம்

0 70

இலங்­கையில் உள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களின் பாடத்­திட்­டத்தை ஒரு முகப்­ப­டுத்தி, அதன் தரா­த­ரத்தை நிலை­யான ஒரு அமைப்பின் கீழ் கொண்­டு­வந்து மாண­வர்­களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் இலங்கை அரசும் குறிப்­பாக கல்வி அமைச்சும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இதன் முதல் கட்­ட­மாக ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரைக்­கேற்ப கல்வி அமைச்சின் ஆலோ­ச­னையின் அடிப்­ப­டையில் இலங்கை முஸ்லிம் சமய கலா­சாரத் திணைக்­களம், துறைசார் பேரா­சி­ரி­யர்கள், கல்­வி­மான்கள், உல­மாக்கள், பல்­வேறு சமய நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட மத்­ரஸா பாடத் திட்ட குழு ஒன்றை நிய­மித்து ஒரு பாடத்­திட்­டத்தை தயா­ரித்­துள்­ளது.

இதன் அடுத்த கட்­ட­மாக தயா­ரிக்­கப்­பட்ட பாடத்­திட்­டத்தை மீளாய்வு செய்யும் குழு ஒன்றை கல்வி அமைச்சு இப்­போது நிய­மித்­துள்­ளது.

இக்­கு­ழுவின் தலை­வ­ராக தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் முன்னாள் பீடா­தி­ப­தியும், ஓய்வு நிலைப் பேரா­சி­ரி­ய­ரு­மான, மெள­லவி மரு­த­முனை எம்.எஸ்.எம். ஜலால்தீன் கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன், பின்­வரும் ஆறு பேரும் ஏனைய அங்­கத்­த­வர்கள் ஆகவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மஹ­ர­கம தேசிய கல்வி நிறு­வ­னத்தின் பிரதி பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி எஸ். ஏ. டீ. சம­ர­வீர. அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் பிர­தானி, கலா­நிதி மெள­லவி அஹ்மத் அஸ்வர், அக்­க­ரைப்­பற்று வலய கல்­விப்­ப­ணிப்­பாளர் ஏ.எம். றஹ்­மத்­துல்லா (நளீமி), பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், மெள­லவி எம்.எல்.எம்.ஹனீபா, கிழக்கு பல்­க­லைக்­க­ழக அறபு மொழித்­துறை தலைவர், மெள­லவி ஐ.எம். தாலிப் ஆகி­யோரும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன், குழுவின் செய­லா­ள­ராக கொழும்பு ஹமீத் அல்ஹுஸைனியா பாடசாலை அதிபர் எம். ஆர். எம். றிஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் குழுவின் முதலாவது அமர்வு இன்று கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.