திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: மாணவிகளின் மனக்குறையைத் தீர்க்குமா அரசு?

0 63

நா.தனுஜா

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­பதும், பின்னர் தேவை­யேற்­ப­டு­கையில் பொறுப்­புக்­கூ­ற­லின்றி மன்­னிப்­புக்­கோரி அல்­லது ஒடுக்­கு­மு­றையை நியா­யப்­ப­டுத்தி அறிக்­கை­யிட்டுக் கடந்து செல்­வதும் இலங்­கைக்கு ஒன்றும் புதி­தல்ல.

இலங்­கையில் கடந்த சில வரு­டங்­களில் சிறு­பான்­மை­யின முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­மு­றைச்­ சம்­ப­வங்கள் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அவற்றில் இஸ்­லா­மி­யர்­களின் மத மற்றும் நம்­பிக்­கைசார் உரி­மையைக் கேள்­விக்­குட்­ப­டுத்தி, அவர்­களை உள­வியல் ரீதியில் தளர்­வ­டை­யச்­செய்த ‘கட்­டாய உடற்­த­கனம்’ முக்­கி­ய­மா­னது.

கொவிட் – 19 பெருந்­தொற்­றுப்­ப­ரவல் காலத்தில் தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் சட­லங்­களை அவர்­க­ளது மத­நம்­பிக்­கைக்குப் புறம்­பாக, தேசிய மற்றும் சர்­வ­தேச எதிர்ப்­புக்­களை மீறி கட்­டா­ய­மாகத் தகனம் செய்யும் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது அர­சாங்கம். அவ்­வே­ளையில் முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட உள­வியல் போராட்­டத்தை முற்­று­மு­ழு­தாகப் புறக்­க­ணித்து கரு­ணை­யின்றி செயற்­பட்ட அர­சாங்கம், அதற்­காக நேற்று முன்­தினம் பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக்­கோ­ரி­யது. ஆனால் எவ்­வித விஞ்­ஞா­ன­பூர்வ ஆதா­ரங்­க­ளு­மின்றி கட்­டாய உடற்­த­கனக் கொள்­கையைப் பரிந்­து­ரைத்த மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்த ஆவ­ன செய்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக எவ்­வித விசா­ர­ணை­களோ, பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களோ முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

எது எவ்­வா­றி­ருப்­பினும் தலை­நகர் கொழும்பில் இத்­த­கை­யதோர் நாடகம் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்கும் வேளையில் தான் திரு­கோ­ண­ம­லையில் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாண­விகள் 70 பேர் பிறி­தொரு உள­வியல் போராட்­டத்­துக்கு முகங்­கொ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியில் கல்வி பயின்று, க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்­சைப்­பெ­று­பே­று­களை அவர்கள் காதை மறைக்கும் வித­மாக ஹிஜாப் அணிந்­து­வந்து பரீட்சை விதி­களை மீறி­ய­தாகக் காரணம் குறிப்­பிட்டு வெளி­யி­டாமல் இடை­நி­றுத்­தி­வைத்து, பின்னர் வெளி­யிட்ட சம்­பவம் அனை­வரும் அறிந்­ததே. ஆனால் பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் வெளி­யாகி, அனைத்தும் சுமு­க­மாக முடிந்­து­விட்­டது போல் வெளித்­தெ­ரிந்­தாலும், இவ்­வி­வ­கா­ரத்தில் இன்­னமும் இழு­ப­றி­நிலை தொடர்­கி­றது. கட்­டுப்­பா­டுகள் மிகுந்த சமூ­கத்­தி­லி­ருந்து தமது எதிர்­காலம் பற்­றிய மிகை­யான கன­வு­க­ளுடன் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய மாண­விகள், தற்­போது எதிர்­காலம் தொடர்­பான அச்­சத்­துடன் நாட்­களைக் கடக்­கின்­றனர்.

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூரி மாண­விகள் 70 பேரின் உயர்­த­ரப்­ப­ரீட்­சைப் ­பெ­று­பே­றுகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வத்­தின்­மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் முதன்­மு­தலில் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்ட சர்­வ­தேச அமைப்­பான மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், ‘பரீட்­சை­களின் நேர்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வது உரிய அதி­கா­ரி­களின் பொறுப்­பாகும். இதன்­போது பின்­பற்­றப்­படும் நடை­மு­றைகள் மத அல்­லது பாலின அடிப்­ப­டையில் எந்­த­வொரு மாண­வ­ரையும் புறந்­தள்ளும் வித­மாக அமை­யக்­கூ­டாது. அவ்­வா­றி­ருக்­கையில் அம்­மா­ண­விகள் ஹிஜாப் அணிந்து வந்­த­தாகக் குறிப்­பிட்டு அவர்­க­ளது பரீட்­சைப்­பெ­று­பே­று­களை வெளி­யி­டாமல் இடை­நி­றுத்­தி­வைப்­ப­தா­னது அவர்­களின் மத­சு­தந்­தி­ரத்தை மீறு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சமூ­கங்­க­ளுக்கு இடையில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப முனை­வ­தா­கக்­கூறும் அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்­தி­செய்­யாது’ எனக் கடு­மை­யாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

இலங்கை ஜன­நா­யக சோச­லிஸ குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பின் 10 ஆவது சரத்தின் பிர­காரம் இந்­நாட்­டுப்­பி­ர­ஜைகள் அனை­வரும் மத­சு­தந்­தி­ரத்­துக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளாவர். அதே­போன்று 12(2) சரத்­தா­னது எந்­த­வொரு நபரும் பால் அல்­லது மத அடிப்­ப­டையில் ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­துடன், 14(1)(ஈ) சரத்து அனைத்­துப்­ பி­ர­ஜை­களும் தமக்கு விரும்­பிய மதம், நம்­பிக்கை, வழி­பாட்டு முறைமை, நடை­முறை அல்­லது கோட்­பாட்டைப் பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­தி­ரத்தை உறு­தி­செய்­தி­ருக்­கின்­றது.

நாட்டின் அதி­யுச்ச சட்டம் மேற்­கூ­றப்­பட்ட விதி­க­ளைக்­கொண்டு அனைத்­துப்­பி­ர­ஜை­க­ளி­னதும் உரி­மைகள் மற்றும் சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கையில், குறித்­த­வொரு மதம் மற்றும் அது­சார்ந்த ஆடை­களைக் கார­ணங்­காட்டி பரீட்­சைப்­பெ­று­பே­று­களை இடை­நி­றுத்­து­வது ஏற்­பு­டை­ய­தல்ல எனச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு. அது­மாத்­தி­ர­மன்றி அர­சி­ய­ல­மைப்பின் 27(2)(எச்) சரத்தின் ஊடாக சக­ல­ருக்கும் சமத்­து­வ­மான கல்வி உரிமை உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அவ்­வா­றி­ருக்­கையில் மாண­வ­ரொ­ருவர் பரீட்­சைக்குத் தோற்­று­வ­தற்கு அனு­மதி மறுப்­பதோ அல்­லது அவ­ரது பெறு­பேறை இடை­நி­றுத்­தி­வைப்­பதோ இவ்­வு­ரி­மையை மீறு­வ­தா­கவே அமையும் எனவும் ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இருப்­பினும் ஜூலை 4 எனத் திக­தி­யி­டப்­பட்டு, ஜூலை 15 ஆம் திகதி மேற்­கூ­றப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மாண­வி­களின் கைக­ளுக்குக் கிடைக்­கப்­பெற்ற பரீட்சை ஆணை­யாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜய­சுந்­த­ர­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்கும் கடி­தத்தில், கடந்த க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சை­யின்­போது பரீட்சை மண்­ட­பத்­துக்குள் நுழை­வ­தற்கு முன்­னரும், பரீட்சை எழுதும் காலப்­ப­கு­தி­யிலும் ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் விதத்தில் பரீட்­சைக்குத் தோற்­ற­வேண்டும் என்­பது குறித்து பாட­சாலை அதிபர், பரீட்சை மேற்­பார்­வை­யாளர் உள்­ளிட்­டோரால் தேவை­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அவற்றை அம்­மா­ண­விகள் பின்­பற்­ற­வில்லை என்­பது அவ­தா­னிக்­கப்­பட்­ட­மையால் பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­ட­தா­கவும், இருப்­பினும் அம்­மா­ண­விகள் முதற்­த­ட­வை­யாக பாட­சாலைப் பரீட்­சார்த்­தி­யாக இப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றி­ய­மையைக் கருத்­திற்­கொண்டு பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் அம்­மா­ண­விகள் தாம் காதை முழு­மை­யாக மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிந்து செல்­ல­வில்லை எனவும், மாறாக பரீட்சை விதி­மு­றை­களைப் பின்­பற்றும் அதே­வேளை தமது மத­நம்­பிக்­கை­யுடன் முரண்­ப­டாத வகையில் காதுகள் தெரி­யக்­கூ­டி­ய­வ­கை­யி­லான துணி­யையே (Shawl) அணிந்­து­சென்­ற­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கையில் அம்­மா­ண­விகள் பரீட்சை விதி­களை மீறி­ய­­தாகத் தீர்­மா­னித்து, அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்கும் மேற்­கூ­றப்­பட்ட கடி­தத்தின் நேர்­மைத்­தன்மை தொடர்பில் கேள்வி எழு­கி­றது.

இது­கு­றித்து தன்­னார்வ அடிப்­ப­டையில் மீளவும் அவ­தானம் செலுத்­தி­யி­ருக்கும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, இவ்­வி­வ­காரம் தொடர்பில் முறை­யான உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கு­மாறு பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் வலியுறுத்தியிருப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக இந்நெருக்கடிக்குக் காரணமாக அமைந்த விதிமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி, குழப்பமற்ற வகையில் வெளியிடுமாறும் கோரியிருக்கிறது.

ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதாகக் கூறும் நாடொன்றில் ஒருவரின் மத மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த உரிமை, அவரது பிறிதோர் உரிமைக்குத் தடையாக அமைவதையோ அல்லது இடையூறு விளைவிப்பதையோ ஒருபோதும் ஏற்கவியலாது. எனவே கட்டாய உடற்தகன விவகாரத்தில் ‘காலங்கடந்து பிறந்த ஞானத்தைப்போல’ இவ்விவகாரத்திலும் சம்பந்தப்பட்ட மாணவிகள் முகங்கொடுத்துவரும் உளவியல் போராட்டத்தை புறந்தள்ளிவிட்டு, காலங்கடந்து மன்னிப்புக்கோராமல் உடனடியாக அவர்களுக்கு உரியவாறான தீர்வை வழங்க தொடர்புடைய அரச கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அன்றேல் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு என்னும் நாட்டின் பெயரில் ‘ஜனநாயக’ எனும் பதம் அர்த்தம் இழக்கநேரும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.