பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை

0 74

( எப்.அய்னா)
பொலிஸ் மா அதிபர் பத­வியில் செயற்­பட தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை விதித்­தது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ராக பதவி வகித்த தேச­பந்து தென்­னகோன் பொலிஸ்மா அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டதை சவா­லுக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள‌ 09 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசா­ர­ணை­களும் நிறை­வுறும் வரை இந்த இடைக்­கால தடை அமுலில் இருக்கும் என அறி­வித்த உயர் நீதி­மன்றம், அக்­கா­லப்­ப­கு­தியில் பொலிஸ் மா அதிபர் பத­வியில் பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க சட்­டத்­துக்கு உட்­பட்டு பொருத்­த­மான ஒரு­வரை பரிந்­து­ரைக்­கு­மாறு ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­தது.

அத்­துடன் இந்த 9 அடிப்­படை உரிமை மீறல் மனுக்­க­ளையும் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள தீர்­மா­னித்த உயர்­நீ­தி­மன்றம் வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­தது. அத்­துடன் மனுக்கள் தொடர்பில் ஆட்­சே­ப­னைகள் இருப்பின் அவற்றை எதிர்­வரும் 6 வார காலத்­துக்குள் எழுத்து மூலம் சமர்ப்­பிக்­கவும் பிர­தி­வா­தி­க­ளுக்கு உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது.

இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம், பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, சட்டத்தரணி ஏ.எல்.ஆசாத் உட்­பட பல்­வேறு தரப்­பினர் தாக்கல் செய்த 09 மனுக்­களை கடந்த ஆறு நாட்­க­ளாக பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொண்ட‌ உயர்­நீ­தி­மன்றம் நேற்று காலை 09.30 மணிக்கு இடைக்­காலத் தடை­யுத்­த­ரவை பிறப்­பித்து,இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­ப­தாக அறி­வித்­தது.

நீதி­ய­ரசர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட தலை­மை­யி­லான அச்­சல வெங்­கப்­புலி மற்றும் மஹிந்த சம­ய­வர்­தன ஆகிய நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய மூவர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் இந்த உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தது.

இந்த 9 மனுக்கள் தொடர்­பிலும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரிய, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷமில் பெரேரா, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரத்னம், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விரான் கொரயா,சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ,சட்­டத்­த­ரணி திஸ்ஸ வேர­கொட, மற்றும் சட்­டத்­த­ரணி ல­க்ஷான்­டயஸ் ஆகியோர் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தனர்.

மனுக்­களின் பிர­தான‌ பிர­தி­வா­தி­யான தேச­பந்து தென்­னகோன் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா ஆஜ­ரா­ன­துடன் ஏனைய பிர­தி­வா­தி­க­ளான அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் நான்கு உறுப்­பி­னர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி எர்­மிசா டீகல் மற்றும் சட்­டத்­த­ரணி பினுர குண­ரத்ன ஆகி­யோரும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் ஏனைய உறுப்­பி­னர்கள் மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நெரின் புள்­ளேயும் ஆஜ­ராகி வாதங்­களை முன்­வைத்­தனர்.

காலி முகத்­திடல் போராட்­டக்­க­ளத்­துக்குள் அத்துமீறி தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்­பான குற்­ற­வியல் வழக்கில் சந்­தேக நப­ராக பெய­ரி­டு­மாறு சட்­டமா அதி­பரால் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­ய­ளிக்­கப்­பட்ட‌ தேச­பந்து தென்­னகோன் பொலிஸ்மா அதி­ப­ராக தொடர்ந்து பத­வியில் இருக்க வேண்டும் என்று சட்­டமா அதிபர் திணைக்­களம் தற்­போது குறிப்­பி­டு­வது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­யது என இந்த மனுக்கள் மீதான பரி­சீ­ல­னையின் போது, இலங்கை இளம் ஊட­க­வி­ய­லாளர் சங்கம் சார்பில் ஆஜ­ரான‌ ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் அவ­ரது நிய­மனம் அர­சி­ய­ல­மைப்­புக்கு இசை­வா­ன­தல்ல எனவும்,சபா­நா­யகர் ஜனா­தி­ப­திக்கு குறித்த தீர்­மா­னத்தை முறை­யற்ற வகையில் அறி­வித்தார் எனவும் மற்­றொரு மனு­தா­ர­ருக்­காக ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி வெர­கொட சுட்­டிக்­காட்­டினார்.

அர­சி­ய­மைப்பு பேரவை அனு­மதி வழங்­காத நிலையில் தேச­பந்து தென்ன­கோனை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் இதனூடாக ஜனாதிபதி மக்களின் நம்பிக்கையை மீறியுள்ளார் எனவும் இதன்போது சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ மன்றில் சுட்டிக்காட்டியிருந்த்தார்.
இவ்வாறான நிலையிலேயே, நேற்று இந்த 9 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிய இடைக்கால தடை உத்தரவை வழங்கி, தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்கால தடை விதித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.