பலஸ்தீனுக்காக குனூத் மாத்திரம் போதுமா?

0 98

அனீக்

“நாளைய ஜுமுஆ குத்­பாவில் பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்­திலும் அமை­தியும் சமா­தா­னமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்­லாஹு தஆ­லா­விடம் பிரார்த்­திக்­கு­மாறு சகல கதீப்­மார்­க­ளையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கேட்­டுக்­கொள்­கி­றது.”

கடந்த ஆறு மாத காலத்­திற்கு மேலாக ஒவ்­வொரு வியா­ழக்­கி­ழ­மையும் சமூக ஊட­கங்­களில் காணக்­கி­டைக்கும் வேண்­டுகோள் இது! கடந்த ஒக்­டோபர் மாதத்தில் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­குதல் ஆரம்­பித்­ததில் இருந்து பல்­வேறு நாடு­களின் முஸ்­லி­மல்­லாத நிறு­வ­னங்­களும், தனி­ந­பர்­களும் மனிதப் பேர­வ­லத்தை நிறுத்­து­மாறும், மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­மாறும் தமது அர­சு­க­ளையும், ஐக்­கிய நாடுகள் சபை­யையும் கோரு­வ­தோடு நிறுத்தி விடாது இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு உதவும் வர்த்­தக நாமங்­களைக் கொண்ட வியா­பாரப் பொருட்­க­ளையும் பகிஷ்­க­ரிக்­கு­மாறும் அழைப்பு விடுத்த வண்­ண­மி­ருக்­கின்­றனர்.

ஆனால், இலங்கை முஸ்­லிம்­களை வழி­ந­டத்தும் ஜம்­இய்­யதுல் உல­மாவோ வெறு­மனே குனூத் நாஸி­லா­வோடும், உலக அமை­திக்­கான துஆ­வோடும் தனது கடமையைச் சுருக்கிவிட்­டது கவ­லைக்­கு­ரி­யது.

எது தேவை?
“ஒரு­வ­ருக்­கொ­ருவர் கருணை புரி­வ­திலும், அன்பு செலுத்­து­வ­திலும், இரக்கம் காட்­டு­வ­திலும் (உண்­மை­யான) இறை நம்­பிக்­கை­யா­ளர்­களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுக­வீ­ன­ம­டைந்தால் அத­னுடன் மற்ற உறுப்­பு­களும் (சேர்ந்­து­கொண்டு) உறங்­காமல் விழித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் (உடல் முழுதும்) காய்ச்­சலும் கண்­டு­வி­டு­கி­றது.” (புகாரி 6011) என இறைத் தூதர் உலக முஸ்­லிம்­களின் ஒற்­று­மையை வலி­யு­றுத்தி அதன் பிர­தி­ப­லிப்பை அடிக்­கோ­டிட்டு காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஆனால், வெறு­மனே குனூத் நாஸி­லாவில் ‘பலஸ்­தீ­னத்தை யூதர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­பா­யாக! காஸாவை பாது­காப்­பா­யாக!’ என இறைஞ்­சு­வ­தாலும், உலக அமை­திக்­காக குத்­பாவில் துஆ கேட்­ப­தாலும் இந்த ஓருடல் -ஓருள்ளம் என்ற நிலை ஏற்­ப­டாது. அரபு மொழி பரிச்­ச­ய­மில்­லா­த­வர்கள் வெறு­மனே ‘ஆமீன்’ கூறு­வார்­க­ளே­யொ­ழிய பலஸ்­தீனின் யதார்த்த நிலை மற்றும் தமது கடப்­பாடு என்­ன­வென்­பதை உணர மாட்­டார்கள்.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ய­லுக்கு முன்னால் ஜும்ஆ தொழு­கையைத் தொடர்ந்து இஸ்­ரே­லிய அடக்­கு­மு­றைக்­கெ­தி­ரான ஆர்ப்­பாட்­ட­மொன்று சமூக செயற்­பாட்­டா­ளர்­களால் ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. ஆனாலும் அதனைத் தொடர்ந்­தான செயற்­பா­டுகள் தொடர்பில் எவ்­வித செய்­தி­க­ளையும் காணக்­கி­டைக்­க­வில்லை. இவ்­வாறு வெறு­மனே கூடினோம், ஆக்­ரோ­ஷ­மாக கோசங்கள் முழங்­கினோம், கலைந்தோம் என்­றில்­லாமல் முறை­யாகக் கட்­ட­மைக்­கப்­பட்ட விழிப்­பூட்டல் மற்றும் வழி­காட்­டல்­க­ளையே பலஸ்தீன் விட­யத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் வேண்­டி­நிற்­கி­றது.

பலஸ்தீன் பிரச்­சி­னையின் ஆரம்பம், 1948க்கு முன்­ன­ரான அதன் நிலை பற்­றிய அறி­வூட்டல் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு சென்­ற­டைய வேண்டும். இதற்­கான முன்­னெ­டுப்பை அல்­லது முன்­னெ­டுப்­புக்­கான ஆத­ரவை ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொள்ள வேண்டும். இது சமூக ஊட­கங்கள் மூல­மா­கவோ அல்­லது உள்ளூர் மயப்­ப­டுத்­தப்­பட்ட பள்­ளி­வாசல் பிரச்­சா­ரங்கள் மூல­மா­கவோ இடம்­பெ­றலாம். குறிப்­பாக இமாம்­களும் முஅத்­தின்­களும் அறி­வூட்­டப்­பட வேண்டும். ஏனெனில், பலஸ்தீன் வெறு­மனே முஸ்­லிம்கள் மாத்­திரம் வாழ்ந்த பூமி­யல்ல. கிறிஸ்­த­வர்­களும், யூதர்­களும் முஸ்­லிம்­க­ளோடு இரண்­டறக் கலந்த ஒரு நாடு. இஸ்ரேல் எனும் தேசத்தை நிறு­வு­வதன் ஒரு பகு­தி­யாக ஸியோ­னிச சிந்­தனை கொண்­ட­வர்­களால் இவ்­ஒற்­றுமை சீர்குலைக்­கப்­பட்­டது. குனூத் நாஸி­லாவில் யூதர்­க­ளி­ட­மி­ருந்து பலஸ்­தீனைக் காப்­பாற்­று­வா­யாக!’ என நாம் கேட்­பது ஒரு விதத்தில் அவர்­களை அவர்­க­ளது சொந்த பூமியில் இருந்து விரட்டும் படு­பா­தக செயல் என்­பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் இஸ்­ரே­லிய அடக்­கு­மு­றைக்­கெ­தி­ரான தங்கள் எதிர்ப்பை பதி­வு­செய்து வரு­கின்­றனர். இவ்­வாறு பிற மதத்­த­வர்கள் அடக்­கு­மு­றைக்­கெ­தி­ராக நிகழ்­வு­களை நடாத்தும் போது இலங்கை முஸ்­லிம்­களை வழி­காட்டும் அமைப்பு என்ற ரீதியில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் பங்­கேற்று இஸ்லாம் காட்­டித்­தந்­தி­ருக்கும் சக­வாழ்வு, மனித நேயம், அடக்­கு­மு­றைக்கு எதி­ரான நிலைப்­பாடு மற்றும் ஒற்­றுமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­பது பொரு­மத்­த­மா­ன­தா­யி­ருக்கும். உள்ளூர் மற்றும் சர்­வ­தேச அமைப்­பு­க­ளோடு இணைந்து போர் நிறுத்தம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­காக அழைப்பு விடுப்­ப­திலும் ஈடு­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது.

எல்­லா­வற்­றிற்கும் மேலாக பலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்களின் போது ஒரு முஸ்லிமாக நாம் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டலையும், ஒரே உம்மத்தாக உணர்வது என்பதன் அர்த்தம் என்ன அது எவ்வாறு எமது ஈமானை அதிகரிக்கும் என்பது பற்றியும் விழிப்பூட்டுவதும் அகில ஜம்இய்யதுல் உலமாவின் கடமையாகும்.

ஆயிரம் வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி ஷைத்தானுக்கு எதிராக பலம்பொருந்தியவராவார்! எமது வணக்கவாளிகளை அறிவூட்டி அவர்களை வலுவூட்டுவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.