திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன

அனைவருக்குமான நீதி திட்ட இலங்கைச் செயலணி அறிக்கை

0 97

எம்.ஐ.அப்துல் நஸார்

இலங்­கையில் அண்மைக் காலத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட பக்­கச்­சார்பு மற்றும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வ­ருக்­கு­மான நீதி கரி­சனை கொண்­டுள்­ளது. பரீட்­சையின் போது காது­களை மூடா­தி­ருக்க வேண்டும் என்ற கொள்­கையின் கார­ண­மாக அண்­மையில், திரு­கோ­ண­மலை நக­ரி­லுள்ள சாஹிரா கல்­லூ­ரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­று­களை நிறுத்தி வைக்க பரீட்சை அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர். இக்­கொள்கை, சமயக் கடப்­பா­டு­களைப் பின்­பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு எதி­ராக பாகு­பாடு காட்­டு­கி­றது. இதன் கார­ண­மாக, இக்­கொள்­கை­யா­னது முஸ்லிம் பெண்­களை பர­வ­லாகப் பாதிக்­கி­றது. இது இலங்­கையில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான மத பாகு­பாட்டு சூழலை ஏற்­ப­டுத்­து­கி­றது.

இலங்கைப் பரீட்­சைகள் திணைக்­களம் பார­பட்சம் காட்­டு­கின்ற விதி­களை அமுல்­ப­டுத்­து­கின்­றது, 2023 அக்­டோ­பரில் இதே­போன்ற ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது. 13 முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்­ததன் கார­ண­மாக அதிபர் நிய­மனப் பரீட்­சைக்­கான பெறு­பே­றுகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. ஆரம்­பத்தில் காதை மறைக்­கா­தி­ருக்க உடன்­பட்­ட­போ­திலும் இவ்­வாறு பெறு­பேறுகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் பெண்­களின் கூற்­றுப்­படி, இத்­த­கைய விதிகள் அவர்­களின் கல்வி முன்­னேற்­றத்தை சீர்­கு­லைப்­ப­தா­கவும், பாகு­பாடு மற்றும் சகிப்­புத்­தன்­மை­யற்ற நிலை தொடர்­பிலும் ஒரு பரந்த செய்­தியை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

பல இன்­னல்­களைக் கடந்து உயர் தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழகக் கல்வி மறுக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட இந்த நட­வ­டிக்­கை­யா­னது நீண்­ட­கால பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ‘இலங்­கையில் குறிப்­பாக வைத்­தி­ய­சா­லைகள், பாட­சா­லைகள் மற்றும் பொதுப் போக்­கு­வ­ரத்து போன்ற பொது நிறு­வ­னங்­களில் ஹிஜாப் அணி­ப­வர்கள் மீது சகிப்­பின்மை அதி­க­ரித்­துள்­ளது, மாண­வி­களின் மதச் சுதந்­திரம் பாது­காக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­யு­மாறு நாங்கள் அர­சாங்­கத்­திடம் வேண்­டுகோள் விடுக்­கிறோம்,’ என அனை­வ­ருக்­கு­மான நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் தெரி­வித்தார்.

இலங்­கையில் இந்து தேசி­ய­வாத இயக்­கங்­களின் எழுச்சி அதி­க­ளவில் முஸ்லிம் சமூ­கத்தை குறி­வைத்­துள்­ளது என்­பது தொடர்பில் அனை­வ­ருக்­கு­மான நீதி அமைப்பு கவ­லை­ய­டை­கின்­றது. உதா­ர­ண­மாக, 2018 இல் சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்­த­தற்கு எதி­ராக வன்­முறைப் போராட்­டங்கள் நடந்­தன. ராவணா பல­ய போன்ற இந்து தேசி­ய­வாத அமைப்­புகள் இந்தப் பதற்றங்­களைச் சாத­க­மாக்கிக் கொண்டு, முஸ்­லிம்­களின் சனத்­தொகைப் பெருக்கம் ஓர் அச்­சு­றுத்தல் எனவும் முஸ்­லிம்கள் கலா­சாரத் திணிப்­பு­களை மேற்­கொள்­வ­தா­கவும் தவ­றான கதை­களைப் பரப்பி வரு­கின்­றன.

அண்­மைய ஆண்­டு­களில், முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரை இலக்கு வைத்து பாகு­பா­டான பல ஒழுங்­கு­வி­தி­களை இலங்கை இயற்­றி­யுள்­ளது. குறிப்­பி­டத்­தக்க வகையில், கொவிட் -19 தொற்­றுநோய் பர­வ­லின்­போது, வைரஸால் இறந்த நபர்­களை அடக்கம் செய்­வதை அர­சாங்கம் தடை­செய்­தது மற்றும் அதற்கு பதி­லாக தக­னத்தை கட்­டா­ய­மாக்­கி­யது, தகனம் செய்­வதை இஸ்லாம் தடை செய்­துள்­ளது என்­பதை நம்­பிக்­கை­யாகக் கொண்­டுள்ள முஸ்லிம் குடும்­பங்­க­ளி­டையே பெரும் மன­வே­த­னையை ஏற்­ப­டுத்­தி­யது. இது தவிர, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அர­சாங்க ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அதி­கா­ரிகள் எவ்­வித தடை­க­ளையும் ஏற்­ப­டுத்­தாத நிலையில் பொய்ப் பிரச்­சா­ரங்கள் செய்யப்பட்டன.

உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த கட்டமைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த்தி செய்யுமாறு அனைவருக்கும் நீதிக்கான அமைப்பு இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது. பாடசாலைக் கொள்கைகள் மதச் சுதந்திரங்களை மதிக்க வேண்டும் மற்றும் அனைத்து மாணவர்களும் பாகுபாடு அல்லது பழிவாங்கலுக்கு அஞ்சாமல் கல்வி சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.