ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு

0 69

(எப்.அய்னா)
ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாடு மீது நாளை மீண்டும் விசா­ரணை நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.

கடந்த 9 ஆம் திகதி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போதும், மனித உரி­மைகள் ஆணைக்குழு முறைப்­பாட்டில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் விசா­ர­ணை­க­ளுக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து இந்த விசா­ர­ணை­க­ளுக்­காக நாளை 19 ஆம் திக­திக்கு ஆஜ­ராக பிர­தி­வா­தி­க­ளுக்கு பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் ஊடாக அறி­வித்தல் அனுப்­பப்பட்­டுள்­ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அதிப‌ர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்­றுக்கு தர­மு­யர்த்­து­வ­தற்­கான வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்­களில் நடாத்­தப்­பட்­டி­ருந்­தன. முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழு­தி­யுள்ள பரீட்­சார்த்­திகள் மறு நாள் பரீட்சை எழு­திக்­கொண்­டி­ருக்கும் போது, இறுதி 20 நிமி­டங்­க­ளுக்குள் அங்கு வந்த அதி­கா­ரி­களின் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் பரீட்­சார்த்­தி­களின் அடை­யாள அட்­டை­களை பெற்று அவர்­க­ள‌து பரீட்சை அனு­மதிச் சீட்­டுடன் வைத்து புகைப்­படம் எடுத்­துக்­கொண்டு சென்­றுள்­ளனர்.

கொட்­டாஞ்­சேனை மத்­திய கல்­லூ­ரியில் நடந்த இந்த பரீட்­சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்கு தோற்­றிய முஸ்லிம் அதி­பர்­களே இந்த அநீ­திக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.

இந் நிலையில், வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறு­பே­றுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறித்த பெறு­பே­று­களை பரீட்­சித்த போது, ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்கள் 13 பேரினதும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.