வஹாபிஸம் தொடர்பில் பிழையான புரிதலுடன் நீதியமைச்சர் பேசுகிறார்

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறோம் என்கிறது உலமா சபை

0 196

(எஸ்.என்.எம்.சுஹைல்)
வஹா­பிஸம் தொடர்­பாக பிழை­யான புரிதலுடன் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஷ ராஜ­பக்ஸ பேசு­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் இஸ்­லாத்­துக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பது தொடர்பில் தாம் ஏற்­க­னவே நீதி­ய­மைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளித்­தி­ருக்­கின்றோம் என்றும் ஜம்­இ­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது வஹா­பிஸம் தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஸ கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இது குறித்து நாம் ஜம்­இய்­யதுல் உலமா சபை­யிடம் வின­வி­ய­போதே அதன் ஊடகப் பிரிவு இவ்­வாறு தெரி­வித்­தது.

இது தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது, 2016 ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­ச­ராக இருந்த விஜ­ய­தாஸ ராஜ­பக்­ஸவை (தற்­போதும் நீதி­ய­மைச்சர்) நாங்கள் சந்­தித்து ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்­புக்கும் இஸ்­லாத்­திற்கும் எவ்­வித தொடர்பும் இல்யை என்­பதை விளக்­கி­யி­ருந்தோம். அதில் இளை­ஞர்கள் இணை­வதை தடுக்க வழி­களை மேற்­கொள்­ளு­மாறு நாம் வலி­யி­றுத்­தினோம்.

அச்­சந்­திப்பு ஜம்­இய்­யதுல் உலமா மாத்­திரம் கலந்­து­கொண்ட சந்­திப்­பல்ல, முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இது விட­ய­மாக போதிய தெளி­வுகள் இல்­லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் வஹாபிஸம் என்ற பிழையான புரிதலினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ அவ்வாறு பேசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.