மறக்கப்படும் இனவாத வரலாறும் உயிர்த்த ஞாயி­று தாக்குதலும்

0 64

எஸ்.எல்.எம். சானாஸ்

சிங்­க­ள­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வந்த ராஜ­ப­க்ஷாக்­களின் இன­வாத முழக்­கங்கள் பொரு­ளா­தார சீர­ழி­வுடன் ஓய்­விற்கு வந்­துள்­ளது. நாடு அதல பாதா­ளத்­திற்குள் விழ ஊழல், துஷ்­பி­ர­யோகம் செய்த அதே பங்­க­ளிப்­பினை, இன­வா­தமும் ஆற்­றி­யி­ருக்­கின்­றது. போர் முடி­வோடு பொரு­ளா­தார சுபீட்­சத்­தினை நோக்கி சிங்­க­ள­வரின் கவனம் திரும்பி சமன்­பாடு மாறு­ப­டு­வதைத் தவிர்க்க ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத நாட்­டியம், உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­த­லோடு பிசு பிசுத்துப் போயுள்­ளது.

நுகர்­வு ­பொ­ருட்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஹலால் தரச்­சான்­றி­தழை மைய­மாக வைத்து 2012 ஆம் ஆண்டின் நடுப்­ப­கு­தியில் பல­சேனா செய­லா­ள­ரினால் ஆரம்­பிக்­கப்­பட்ட வன்பேச்­சுக்கள் மாட்­டி­றைச்சி வியா­பா­ர­ம், முஸ்லிம் தனியார் சட்­டம் முஸ்­லிம்­களின் சனத்­தொகை வளர்ச்­சி, புர்கா என்ற பட்­டி­ய­லோடு விஸ்­த­ரிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் வியா­பா­ரத்தை சிங்­க­ளவர் பகிஷ்­க­ரிக்க பல­வந்­தப்­ப­டுத்­தப்­பட்­ட­தோடு பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் மட்­டுமே இந் நாட்­டிற்கு உவப்­பா­ன­வர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டார்கள்.

ஜேர்­ம­னிய யூதன் ஒரு­வனால் மாத்­தறைப் பிர­தே­சத்தில் ஞான­சா­ர­ருக்கு வழங்­கப்­படும் அலு­வ­ல­கமும் அதன் திறப்பு விழாவில் அந்நாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தா பங்­கு­பற்­று­வதும் திருப்பு முனை­யாக மாறு­கின்­றது. தொடர் வன் பேச்­சுக்­க­ளுக்­கான முதல் அறு­வடை அளுத்­கம நகர் எரி­யூட்­டப்­ப­டு­வதன் மூலம் ஈட்­டப்­ப­டு­கின்­றது.

2015 ஜனா­தி­பதி தேர்­த­லில் ம­ஹிந்­தவின் தோல்­விக்கு தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் தான் கார­ண­மென மெத­மு­ல­னவில் இன­வாதத் தீ பற்­ற­ வைக்­கப்­ப­டு­கின்­றது. மலட்டு கொத்து மலட்டுத் தன்மை தரும் ஆடைகள் போன்ற உணர்­தி­றன்­மிக்க தலைப்­புக்கள் பல­சேனா அணி­யி­ன­ரினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு முஸ்லிம் சமூகம் வெறுப்­பேற்­றப்­பட்­டது. பதி­லுக்கு புத்­தர்­ சி­லை­களை சேத­மாக்கும் நிகழ்­வு­க­ளினால் ஸஹ்ரான் குழு­வினர் சிங்­க­ள­வரைப் பீதிக்­குள்­ளாக்­கினர். இவ்­விரு அடிப்­ப­டை­வாதக் குழுக்­களும் முன்னாள் ஆட்­சியில் நிதி­ வ­ழங்­கப்­பட்டு போஷிக்­கப்­பட்­டதை (மொசாட் உல­கிற்கு கற்றுக் கொடுத்த பாடத்தை) அநு­ர­கு­மார பாரா­ளு­மன்­றத்தில் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார்.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இடை­வி­டாத இன­வாத பேச்­சுக்­களும் நல்­லாட்­சிக்குக் கார­ண­மான சிறு­பான்­மை­யினர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சியும் 2018 ஆம் ஆண்டு உள்­ளூராட்சி தேர்­தலில் மொட்டுக் கட்­சியை வெற்­றி­வாகை சூடச்­செய்­த­து­டன், இரண்­டு­பட்­டி­ருந்த நல்­லாட்­சி­யா­ளர்கள் மிரட்­டப்­பட்டு திகனக் கல­வ­ரமும் மூட்­டப்­பட்­டது. இதேவேளை 2019 ஜனா­தி­பதித் தேர்­தலின் இறுதிப் பெறு­பேற்றை மாற்­றி­ய­மைக்கும் வாக்குப் பலம் பற்­றியும் இங்கு தீவி­ர­மாக ஆரா­யப்­ப­டு­கின்­றது.

நல்­லாட்­சிக்குள் ஜனா­தி­பதி பிர­தமர் கயி­றி­ழுப்­பு, குட்டி வல்­ல­ரசின் அன்­றைய அரசு மீதான அதி­ருப்தி பாது­காப்புத் தரப்­பிற்குள் தமக்­கி­ருந்த செல்­வாக்கு ஆகி­ய­வற்றைச் சூத்­தி­ர­தா­ரிகள் கச்­சி­த­மாக ஒருங்­கி­ணைத்­தி­ருக்க வேண்டும். சுருங்கக் கூறின் ஹொலிவுட் சினிமா பாணியில் சிறந்த இயக்­குனர், நடி­கர்­களின் பங்­க­ளிப்­போடு 2019 ஈஸ்டர் தினத்தில் இத்­தி­ரைப்­படம் வெளி­யி­டப்­ப­டு­கின்­றது.

மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­த­லுக்கு கத்­தோ­லிக்­கர்கள் ஆளாக்­கப்­பட்ட அதேவேளை, முஸ்லிம் சமூகம் இத்­தாக்­குதல் பற்றி முன்­கூட்­டியே தெரிந்­தி­ருந்­த­தாக செய்த விஷமப் பிர­சாரம் இனங்­க­ளுக்­கி­டையில் பாரிய விரி­சலை உரு­வாக்­கி­யது. நியூஸி­லாந்தின் கிரிஸ்சேர்ச் நகர பள்­ளியில் மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லை­களின் போது அந்­நாட்டின் பிர­தமர் ஜெஸிந்தா வெளிப்­ப­டுத்­திய மனிதநேய அணு­கு­முறை முழு உல­கிற்கும் எடுத்­துக்­காட்­டாக இருக்­கையில் எமது ஆட்­சி­யா­ளர்கள் இங்கு வைராக்­கி­யத்தைப் பரப்ப அந்­நாட்டின் படு­கொ­லை­களை ஒரு­து­ரும்­பாகப் பாவித்­தமை ஈனச்­செ­யலே.

‘முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக உங்கள் கைகளைத் தூக்க வேண்டாம்’ என உணர்ச்­சி­ த­தும்ப கத்­தோ­லிக்­கர்­க­ளிடம் வேண்டி இரத்­தக் ­க­ள­ரியைத் தடுத்­த­துடன் பிராந்­திய தீவி­ர­வா­தத்தை இங்கு காலூன்றச் செய்யும் ஷியோ­னிஸ்­டு­களின் சதி­யையும் முறி­ய­டித்த மெல்கம் ரன்­ஜித்­திற்கு முழு நாடும் கட­மைப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து ரத்ன தேரரின் மாளி­காவைச் சூழ்ந்து ஆடிய நாடகம் தனிப்­பட்ட பாது­காப்பின் நிமித்தம் தரு­விக்­கப்­பட்­டி­ருந்த வாள்­களை வைத்­துக்­காட்­டிய ஜிஹாத் பூச்­சாண்­டி, (வாளால் விளைந்த மதம் இஸ்லாம் எனும் பழியை மெய்ப்­பிக்­கவும்) வைத்­தியர் ஷாபியின் விவ­காரம் என பல்­முனை தாக்­கு­தலால் எமது சமூகம் நிலை குலைந்து போனது. எமது சமை­ய­ல­றையில் காணப்­பட்ட கறைபடிந்த சக்­திகள் கூட பிர­தான தொலைக்­காட்­சி­களின் தலைப்­புச் ­செய்­தி­களில் இடம்­பி­டித்­தன. இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியை வெளிக்­கொ­ணரத் தீவி­ர­மாக முயன்ற குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் அன்­றைய பணிப்­பாளர் உட்­பட சிரேஷ்ட அதி­கா­ரிகள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டனர்.

குண்­டு­வெ­டிப்­பினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பா­கவும் மதங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் அர­பு­ல­கினால் வழங்­கப்­பட்ட ஒரு கோடி டொலர் பற்றி அன்றோ அது குறித்த மக்­களைச் சென்­ற­டை­யா­தது பற்றி இன்றோ சிங்­கள மீடி­யாக்­களும் பௌத்த பீடங்­களும் வாய்­தி­றக்­க­வில்லை.

கொவிட் காலத்­திலும் விட்­டு­வைக்­கப்­ப­டாத முஸ்லிம் சமூகம் வேண்­டு­மென்றே கொரோ­னாவை பரப்­பு­வ­தாக முன்னாள் விவ­சாய அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டி­ய­தோடு அன்­றைய பாது­காப்புச் செய­லா­ளரும் முஸ்­லிம்கள் மீது கடும் விமர்­ச­னங்­களை முன்வைத்தார்.

ஸஹ்­ரானின் தீவி­ர­வாத போத­னைகள் பற்றி முஸ்லிம் அமைப்­பு­களால் விடு­க்கப்­பட்ட எச்­ச­ரிக்­கைகள் தட்­டிக்­க­ழிக்­கப்­பட்­டமை இத்­தீ­வி­ர­வா­தியை சட்­ட­ரீ­தி­யாக மடக்க எத்­த­னித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் (கத்­தோ­லிக்கர்) சட்­டத்தின் பிடியில் தந்­தி­ர­மாக சிக்க வைக்­கப்­பட்ட விவ­காரம், பல­சேனா செய­லாளர் ஜனா­தி­பதி மன்­னிப்பின் மூலம் சிறை­வா­சத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டது என அனைத்தும் 2019 ஜனா­தி­பதித் தேர்­தலை இலக்கு வைத்­ததே.

‘நாட்டின் பாது­காப்பு பேரா­பத்தில்’ என்ற தோற்­றப்­பா­டு, களனி ரஜ­ம­கா­வி­ஹா­ரையில் தோன்­றிய அபூர்வ நாகம்? பற்­றிய பிர­தம துற­வியின் (பேரா­சி­ரியர் ஒருவர்) புரட்­டு, மரணத் தறு­வாயில் (மரண மஞ்­சக) ஈடேற்றம் பெற மொட்­டுவை ஆத­ரிக்க தேரர் ஒருவர் (பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர்) வலி­யு­றுத்­தி­ய­து, எளிய வியத்­மக தொழில் சார் நிபு­ணர்­களின் போலி மேடைப்­பேச்­சுகள் என்­பன கோத்­தாவின் தேர்தல் வெற்­றியை உறுதி செய்­தன.

நாட்டில் இடம்பெற்ற இன­ வன்­மு­றை­களால் அக்­கினிப் பிளம்­பாக்­கப்­பட்ட எமது சொத்­துக்கள் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்தின் ஒரு பகு­தி­யையும் நாச­மாக்­கி­யுள்­ளது. போர் முடி­வோடு ஆரம்­பித்த இன­வாத பரப்­பு­ரை­களால் அந்­நிய முத­லீ­டுகள் அயல் நாடு­களை நோக்கி நகர்ந்­தன. திகன கல­வ­ரத்தை அடுத்து சுமார் ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் கண்­டிப்­பி­ர­தேசம் மாத்­திரம் இழந்த வரு­மானம் 900 கோடி ரூபாய் என மதிப்­பி­டப்­பட்­டது. ஜனாஸா எரிப்­பினைத் தொடர்ந்து மத்­திய கிழக்கு எம்மை விட்டும் தூர­மா­னதால் ஏற்­பட்ட பொரு­ளா­தார இழப்பைக் குறைத்து மதிப்­பிட முடி­யாது. இக்­கா­லப்­ப­கு­தியில் நாட்டில் தலை­வி­ரித்­தா­டிய ஊழல், கொலைக் ­க­லா­சாரம், போதை­ப் பொ­ருள் ­மா­பியா போன்ற தலைப்­புக்கள் ‘தேசத்தை நேசிப்போம்’ ‘இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம்’ எனும் மாயை­களைக் கொண்டு மறக்­க­டிக்­கப்­பட்­டன.

1915, 1958, 1983 ஆண்­டு­களின் கல­வ­ரங்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாகக் சம்­ப­வங்கள் தற்­செ­ய­லாக இடம்­பெற்­றி­ருந்­தாலும், போர் முடி­விற்கு பின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான கல­வ­ரங்­க­ளுக்­கான கார­ணங்கள் முன்­னரே சோடிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­த­லை­ய­டுத்து, திவ­யின பத்­தி­ரிகை வைத்­தியர் ஷாபி தொடர்­பாக வெளி­யிட்ட ஒரு போலிச் செய்­தி­யா­னது, முழு நாட்­டையும் எரிக்க திரை மறைவில் மேற்­கொண்ட ஒரு முயற்­சியே.

வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் (Hate Speech) தடை­செய்யும் சட்டம் பற்றி நல்­லாட்சிக் காலத்தில் பேசப்­பட்­டாலும், அன்­றைய தலை­வர்­க­ளுக்கும் ராஜ­ப­க்ஷ­வி­ன­ருக்­கு­மி­டையில் நில­விய கள்ள உறவு அதற்கு இடம் கொடுக்­க­வில்லை. அத்­தடை அமு­லா­கி­யி­ருந்தால் அதனைத் தொடர்ந்த அனர்த்­தங்கள் நடை­பெ­றா­ம­லி­ருக்க வாய்ப்­புகள் இருந்­தன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்­கு­த­லுக்கு நீதி கேட்டு போர்க்­கொடி தூக்­கி­யி­ருக்கும் கத்­தோ­லிக்­கர்­க­ளிடம் அர­சியல் சித்து விளை­யாட்­டுக்கள் எதுவும் பலிக்­க­வில்லை. சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளான சிரன்த அம­ர­சிங்க, செஹான் மாலக கமகே போன்­ற­வர்கள் இத்தாக்குதல் தொடர்­பாக பகி­ரங்­கக் க­ருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­வ­தோடு, பௌத்த இனவாதி­க­ளுக்கு கடும் எதிர்ப்­பு­களை வெளி­யிட்டு வரும் கத்­தோ­லிக்­கர்கள். குண்­டுத்­தாக்­கு­தலின் சூத்­தி­ர­தாரி (மஹ­மொ­ல­கரு) அல்­லாஹ்தான் என தனது இறுதி அஸ்­தி­ரத்தை ஏவிய ஞான­சா­ர­ருக்­கு, ‘முஸ்­லிம்­களும், கத்­தோ­லிக்­கர்­களும் வணங்­கு­வது ஒரு கட­வுளைத் தான்’ எனும் தலைப்பில் சிரன்த தரப்பால் ஒரு வீடியோ வெளி­யி­டப்­பட்டு அவரின் வாய­டைக்­கப்­பட்­டது. இத்­தாக்­குதல் பற்றி மட்டும் தெரிந்து கொண்டு நிற்­காமல் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான மோதல்கள் கடந்த கால இலங்கை இந்­திய (மொட்­டுவை பொதுச் சின்­ன­மாக கொண்­டு­டி­ருக்கும்) அர­சு­களால் திட்­ட­மிட்டுத் தோற்­று­விக்­கப்­பட்­டதை செஹான் புட்டு வைத்­தி­ருக்­கிறார். எமது சமூ­கத்தின் புத்­தி­ஜீ­விகள் இவர்­க­ளோடு கைக்­கோர்க்க பின்­னிற்­ப­தா­கவும் தீவி­ர­வாதம் பற்றிப் பேசத் தயங்­கு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­படும் விடயம் குறித்து நாம் அவ­தானம் செலுத்த வேண்டும்.

அமெ­ரிக்­காவின் இரட்டைக் கோபு­ரங்கள் மீதான தாக்­கு­தலும் (செப்டெம்பர் 11) ஈஸ்டர் தாக்­கு­தலும் அர­சியல் பின்­ன­ணி­களைக் கொண்­டி­ருந்­த­தோடு, ஒரே வித­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. சில வெளி­நாட்டு ஊட­கங்கள் இலங்­கையின் இத்­தாக்­கு­தலை Mini September Eleven Attack என வர்­ணித்­தி­ருந்­தன.

அமெ­ரிக்­காவில் இது இஸ்­லா­மோ­போபி­யாவை உயிர் பெறச் செய்து உல­கெங்கும் பரவச் செய்­தது.

குறு­கிய காலத்தில் அந்­நாட்டின் புத்­தி­ஜீ­விகள் பின்லாடன் குழு­வினர் இத்­தாக்­கு­தலை தனி­யாக நடாத்­த­வில்லை என ஒப்­பு­வித்­த­துடன் இச்­சம்­ப­வத்தில் அமெ­ரிக்க உள­வுத்­து­றையும் இஸ்­ரே­லிய யூதர்­களும் தொடர்­பு­பட்­டி­ருக்­கலாம் என சந்­தேகம் வெளி­யிட்­டனர். அதனைத் தொடர்ந்த அரபு நாடுகள் மீதான ஆக்­கி­ர­மிப்பு அதன் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. அன்­றி­லி­ருந்து இன்­று ­வரை இஸ்லாம் மீதான ஈர்ப்பு அமெ­ரிக்­கர்­க­ளி­டையே அதி­க­ரித்த வண்ணம் உள்­ளது.

உயிர்த்த ஞாயிறு படு­கொ­லை­க­ளை­ய­டுத்து இங்கு இஸ்லாம் எதிர்ப்பு உணர்வு ஜனாஸா எரிப்பு வரை நீண்டு சென்­றது. குண்டு வெடிப்பு பற்றி புல­னாய்வுப் பிரி­வு­ன­ருக்கு கிடைத்த துல்­லிய தக­வல்கள் மறைக்­கப்­பட்ட விவ­காரம் ஸஹ்ரான் தரப்பு புல­னாய்வுப் பிரி­வி­ன­ருடன் கொண்டிருந்த தொடர்புகள் மொசாட்டும் ஸஹ்ரானும் நெருங்கிச் செயற்பட்டது குறித்தும் காரசாரமான விவாதங்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இடம்பெற்றன. கோத்தாவினால் முன்னுரிமை வழங்கப்பட்ட இனவாத நிகழ்ச்சி நிரல் ஆட்டம் கண்டிருந்த பொருளாதாரத்தை முழுமையாகச் சரிய வைத்ததுடன் பெரும்பான்மையினர் தற்போது முஸ்லிம்களோடு சிநேகபூர்வமான தொடர்புகளைப் பேண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும், பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சியும் முன்னாள் ஆட்சியாளர்களின் பாதி முகத்திரையைக் கிழித்திருக்கிறது. பொருளாதார படுகொலைகளுக்கு மஹிந்த குழு­மத்தை நோக்கி நீதி தேவ­தையும் விரல் நீட்­டி­யுள்­ளது. ‘வலிந்து உரு­வாக்­கிய முரண்­பா­டுகள் மூலம் பத­வியைப் பிடித்துக் கொண்­டாலும் அதில் நீடிக்க விடாமல் அம்­மு­ரண்­பா­டு­களே அவர்­களைத் துவம்சம் செய்யும்’ என்ற மண்­டே­லாவின் கோட்­பாடு யதார்த்­த­மாகி வருகிறது.

தாய் நாட்டைக்காக்க வந்த மீட்பாளர்கள் உட்பட, பாரம்பரியக் கட்சிகள் நம் தேசத்தை குட்டிச் சுவராக்கியுள்ளனர். ஊழல் மாபியாவிலிருந்து விடுபட்டதோடு இனமுறுகல்களை வெற்றி கொண்ட றுவாண்டா, தென்னாபிரிக்கப் பாதையில் நாம் பயணிக்கப் போகின்றோமா? என்பதை அடுத்து வரும் தேர்தல் முடிவுகள் காட்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.