வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை: ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய 13 அதிபர்களின் பெறுபேறு இடைநிறுத்தம்

மனித உரிமை ஆணைக் குழு விசாரணை; சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனை

0 112

(எம்.எப்.எம்.ப­ஸீர்)
ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன‌. இது தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் (9) இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­போதும், முறைப்­பாட்டில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் விசா­ர­ணை­க­ளுக்கு சமூ­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து இந்த விசா­ர­ணைகள் எதிர்­வ­ரும்19 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­ட­துடன்அன்­றைய தினம் விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ரா­கு­மாறு பிர­தி­வா­தி­க­ளுக்கு மீள அறி­வித்தல் அனுப்­பப்பட்­டுள்­ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அதிப‌ர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்­றுக்கு தர­மு­யர்த்­து­வ­தற்­கான வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்­களில் நடாத்­தப்­பட்­டி­ருந்­தன. முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழு­தி­யுள்ள பரீட்­சார்த்­திகள் மறு நாள் பரீட்சை எழு­திக்­கொண்­டி­ருக்கும் போது, இறுதி 20 நிமி­டங்­க­ளுக்குள் அங்கு வந்த அதி­கா­ரி­களால் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ள­ாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் பரீட்­சார்த்­தி­களின் அடை­யாள அட்­டை­களை பெற்று அவர்­க­ள‌து பரீட்சை அனு­மதிச் சீட்­டுடன் வைத்து புகைப்­படம் எடுத்­துக்­கொண்டு சென்­றுள்­ளனர்.

கொட்­டாஞ்­சேனை மத்­திய கல்­லூ­ரியில் நடந்த இந்த பரீட்­சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்கு தோற்­றிய முஸ்லிம் அதி­பர்­களே இந்த அநீ­திக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில், வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறு­பே­றுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறித்த பெறு­பே­று­களை பரீட்­சித்­த­போது, ஹிஜாப் அணிந்து பரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்லிம் அதி­பர்கள் 13 பேரி­னதும் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டாமல் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் விடி­வெள்­ளி­யிடம் பேசிய பாதிக்­கப்­பட்ட அதிபர் எஸ்.எப்.யூ. உல்பத், பரீட்­சைக்கு தோற்­றும்­போது காது­களை காட்டி உறு­தி­செய்­து­கொண்ட பின்­னரே அனை­வரும் தோற்­றி­ய­தா­கவும், முதல் நாள் எந்த சிக்­கலும் ஏற்­ப­டாத நிலையில், முதல் நாள் பாடத்தின் பெறு­பே­றுகள் கூட நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

பரீட்­சை­களின் பின்னர் குறித்த 14 முஸ்லிம் அதி­பர்­களும் பரீட்­சைகள் திணைக்­கள‌த்­துக்கு அழைக்­கப்­பட்­ட­தா­கவும், அப்­போதும் தாம் எந்த தவறும் செய்­த­தாக குற்றம் சாட்­டப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பரீட்சை எழுதும் போது காதினை வெளிக்­காட்­டி­ய­வாறு பரீட்சை எழுத வேண்டும் எனும் சுற்று நிரு­பத்தை, மாண­வர்­க­ளுக்கும் சென்று நீங்கள் அறி­விக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே தம்மை அழைத்­த­தாக பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் அப்­போது கூறிய போதும், பரீட்சை பெறு­பே­று­களை அவர்கள் நிறுத்தி வைத்­துள்­ளனர்.

நாங்கள் சட்டவிரோ­த­மாக எத­னையும் செய்­ய­வில்லை. பரீட்சை சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய, பரீட்­சைக்கு முன்­ன­தாக எமது ஹிஜாபை விலக்கி காதுகள் தெரியும் வண்ணம் மேற்­பார்வை அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­திய பின்­ன­ரேயே அவர்­க­ளது அனு­ம­தியின் பின்னர் பரீட்சை எழு­தினோம். அப்­ப‌டி இருக்­கையில் பெறு­பே­று­களை நிறுத்­தி­யுள்­ளமை அநீதியானது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரை, பாராளுமன்ற‌ உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடாக சந்தித்து பேசினோம்.

அவரும் பரீட்சைகள் திணைக்கள ஆணைய‌ாளருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ஆனாலும் எமது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாது தொடர்ந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள‌து என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.