தமிழ் சமூகம் சிறந்த மிதவாத தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாததாகும்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் அனுதாபம்

0 121

தமிழ் சமூகம் ஒரு சிறந்த பண்­பான மித­வா­ததத் தலை­வரை இழந்­தி­ருப்­பது ஈடு­செய்ய முடி­யாத இழப்­பாகும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் முன்னாள் எதிர்க்­கட்சித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா சம்­பந்­தனின் மறை­வை­யொட்டி விடுத்­துள்ள அனு­தாபச் செய்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அச்­செய்­தியில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, மறைந்த இரா. சம்­பந்தன் இந்­நாட்டின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அய­ராது உழைத்து வந்த மித­வாதத் தலை­வ­ராவார். அவர் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காண உழைத்து வந்த அதே­நேரம், இந்­நாட்டு முஸ்­லிம்கள் முகம் கொடுத்த பிரச்­சி­னை­க­ளுக்­கா­கவும் குரல் கொடுக்கத் தவ­றா­த­வ­ராக இருந்தார்.

1980 களில் வடக்கு கிழக்கில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைகள் குறித்து தமிழ் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­து­வ­தற்­காக எமது கவுன்சில் ஒப் முஸ்லிம் அமைப்பு 1985 இல் முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலா­நிதி பதி­யுத்தீன் மஹ்மூத் தலை­மையில் சென்­னைக்கு விஜயம் செய்­தது. அத்­தூ­துக்­கு­ழு­வுக்கு நான் செய­லா­ள­ராகக் சென்­றி­ருந்தேன்.

இவ்­வி­ஜ­யத்தின் போது தமி­ழ­கத்தில் இருந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தலை­வர்­க­ளுடன் வடக்கு கிழக்கு முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டினோம். அவர்­களில் இரா. சம­பந்தன் குறிப்­பி­டத்­தக்­க­வ­ராவார். எமது குழு­வி­னரின் வரு­கையை அறிந்­ததும் இன்­மு­கத்­துடன் எம்மை வர­வேற்று வடக்கு முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யாட வாய்ப்­ப­ளித்தார். எமது தரப்­பினர் வடக்கு கிழக்கு முஸ்­லிம்கள் குறித்து முன்­வைத்த பிரச்­சி­னைகள் தொடர்பில் மிகுந்த அக்­க­­றையோடு கவனம் செலுத்­தினார். அந்த சந்­திப்பு நான்கு தசாப்­தங்­க­ளா­கி­யுள்ள போதிலும் இன்றும் பசுமை போன்று உள்ளது.

ஆகவே மறைந்த இரா. சமபந்தனைப் போன்று தமிழ் முஸ்லிம் உறவை மேலும் கட்டியெழுப்புவதில் தமிழ் தலைவர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் அவசியத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.