சிறையிலுள்ள ஞானசார தேரரை விடுவிப்பதற்காக முஸ்லிம் தரப்பின் ஆதரவை கோருகிறது பிக்குகள் குழு

0 445
  • தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என உலமா சபை திட்டவட்டமாக தெரிவிப்பு
  • எழுத்துமூல ஒப்புதல் அளிப்பதற்கு முஜிபுர் ரஹ்மானும் அஸாத் சாலியும் மறுப்பு

(எஸ்.என்.எம்.சுஹைல்)
அல்லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­திக்கும் விதத்தில் செயற்­பட்ட குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரருக்கு மன்­னிப்பு பெற்றுக் கொடுப்­ப­தற்­கான முயற்­சி­களை சில பௌத்த அமைப்­பு­களும் பிக்­கு­களும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதற்­காக முஸ்லிம் தரப்­பின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­­வ­தற்­கான பிரயத்­த­னங்­களையும் அவர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர். இந்­நி­லையில், இது குறித்து பேச்­சு­வார்த்­தை நடத்­தி அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வின் ஒத்­து­ழைப்பை பெற பிக்­குகள் குழு­வொன்று முயற்­சித்து வரு­கி­றது. எனினும், உலமா சபை­யா­னது குறித்­த சந்­திப்­புக்கு இது­வரை நேரம் வழங்­க­வில்லை. அத்­துடன், தேர­ரை விடு­விப்­ப­தற்கு தாம் எந்த வகை­யிலும் ஒத்­தாசை வழங்­கப்­போ­வ­தில்லை என்றும், இது­வி­ட­யத்தில் தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது என்றும் உலமா சபை ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்­தது.

இதி­னி­டையே, கடந்த வாரம் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அஸாத் சாலி ஆகி­யோரை சந்­தித்த பிக்­குகள் குழு­வினர் ஞான­சார தேரரை விடு­விப்­ப­தற்­கான கடி­த­மொன்றை தரு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்த போதிலும் இரு­வரும் அதற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளனர்.

அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு 4 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை வழங்கி கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கே­யினால் வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேர­ருக்கு விடு­தலை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக தேசிய சங்க கூட்­ட­மைப்பு, ராவணா சக்தி, சிங்­கள அமைப்­புக்கள் உள்­ளிட்ட பல அமைப்­பு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிக்­குகள் கடந்த சில தினங்­க­ளாக தீவிர முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளனர்.
ஞான­சார தேர­ருக்கு ஜனா­தி­பதி மன்­னிப்பு வழங்­கு­மாறு கோரி, மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்க­ளுக்கு விஜயம் செய்து அவர்­க­ளிடம் வலி­யு­றுத்தும் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

முன்­ன­தாக, ஞான­சார தேர­ருக்கு விடு­த­லை­ய­ளிப்­ப­தற்கு ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மறுத்­துள்ள நிலையில் ‘முறைப்­பாட்­டா­ளர்­களும் முஸ்லிம் சமூ­கத்தை சார்ந்­த­வர்­க­ளி­டமும் மன்­னிப்­ப­ளிப்­ப­தற்கு இணக்கம் தெரி­வித்து எழுத்­து­மூல ஒப்­புதல் பெற்றால் தாம் மன்­னிப்­ப­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும்’ ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் குறித்த பிக்­குகள் குழு­வினர் முறைப்­பாட்­டா­ளர்­க­ளான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் செய­லாளர் அஸாத் சாலி ஆகி­யோரை சந்­தித்து ஞான­சார தேர­ருக்கு மன்­னிப்­ப­ளிப்­ப­தற்­கான எழுத்­து­மூல ஒப்­பு­தலை பெற்றுக் கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களில் அண்­மைக்­கா­ல­மாக ஈடு­பட்டு வந்­தனர். மேலும், அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உல­மாவை சந்­திப்­ப­தற்­கான நேரத்தை ஒதுக்கித் தரு­மாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். எனினும் உலமா சபை­யா­னது அவர்­களை சந்­திப்­ப­தற்­கான நேரத்தை இது­வரை வழங்­க­வில்லை என அதன் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.

இது தொடர்­பில் உலமா சபையின் ஊடகப் பிரிவு மேலும் தெரி­விக்­கை­யில், ‘அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவை சந்­திப்­ப­தற்­கான கோரிக்­கையை சில பிக்­குகள் குழுக்கள் முன்­வைத்து வரு­கின்­றன. ஞான­சார தேர­ருக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான கோரிக்­கையை விடுப்­ப­தற்கே அவர்கள் எம்மை சந்­திக்க முற்­ப­டு­கின்­றனர். குறித்த பிக்­குகள் குழு­வி­னரை சந்­திப்­ப­தற்­கான எந்­த­வித தீர்­மா­னத்­தையும் உலமா சபை எடுக்­க­வில்லை.

அத்­துடன், ஞான­சார தேர­ருக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் எங்­க­ளுக்கு எந்­த­வித தார்­மீக உரி­மையும் கிடை­யாது. குறித்த தேரர் முன்­ன­தாக உலமா சபையின் தலை­வரை விமர்­சித்­த­துடன் அவ­தூ­றான வார்த்­தை­களை பிர­யோ­கித்­தி­ருந்தார். இதன்­போது, அதற்கு மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்­டது. அது எங்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட விட­ய­மென்­பதால் நாம் தன்­னிச்­சை­யாக தீர்­மானம் எடுத்தோம்.

எனினும், தற்­போது ஞான­சார தேரர் இஸ்­லாத்­தையும் அல்­லாஹ்­வையும் அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் சிறை­த்தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றார். இது விட­யத்தில் உலமா சபை தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுக்க முடி­யாது.

ஞான­சார தேரரின் இந்த அவ­ம­திப்பு செயற்­பாட்­டினால் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டது. அத்­துடன், பலர் மன உளைச்­ச­லுக்கும் ஆளா­னார்கள். பலரும் பொலிஸில் முறைப்­பா­ட­ளித்­துள்­ளனர். எனவே, இது விட­யத்தில் எங்­களால் தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது. இதன் கார­ண­மா­கவே, நாம் அவர்­களை சந்­திப்­ப­தற்கு நேரம் கொடுக்­காமல் இருக்­கிறோம்’ என உலமா சபையின் ஊடக பிரிவு தெரி­வித்­தது.

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், ‘கடந்த வாரம் இரா­வணா சக்தி அமைப்பின் பொதுச் செய­லாளர் இத்­தே­கந்தே சத்­தா­திஸ்ஸ தேரர் உள்­ளிட்ட மூன்று பிக்­குகள் என்னை வந்து சந்­தித்­தனர். ஞான­சார தேர­ருக்கு விடு­தலை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக ஒப்­புதல் கடி­த­மொன்றை தரு­மாறு என்னை வேண்­டிக்­கொண்­டனர். அதனை நான் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

ஜனா­தி­பதி வேண்­டு­மென்றால் விடு­த­லை­ய­ளிக்­கட்டும். மாறாக எங்­களை இது விட­யத்தில் சம்­பந்­தப்­ப­டுத்தக் கூடாது. நாம் அதற்கு ஒப்­புதல் அளிக்­கப்­போ­வ­தில்லை. பிக்­கு­களை எங்­க­ளிடம் அனுப்பி வேறு­வ­கை­யான சிக்­கலை தோற்­று­விக்க ஜனா­தி­பதி முயற்­சிக்­கிறார்.

நாங்கள் ஒரு­போதும் ஞான­சார தேர­ருக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுக்க துணை­போக மாட்டோம். ஞான­சார தேரர் அவ­ம­தித்­தது என்­னை­யல்ல, அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தை­யு­மாகும். எனவே, இது­வி­ட­யத்தில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­க­முமே தீர்­மானம் எடுக்க வேண்டும்’ என்றார்.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் செய­லாளர் அஸாத்­சாலி கருத்து தெரி­விக்­கையில், ‘ஞான­சார தேரர் இஸ்­லாத்­தையும் அல்­லாஹ்­வையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­ட­மைக்­காகத்தான் சிறை­த்தண்­டனை அனு­ப­விக்­கிறார். எனவே, இது விட­யத்தில் முழு முஸ்லிம் சமுதாயமுமே மன்னிப்பளித்தால்தான் அவரின் விடுதலை பற்றி யோசிக்கலாமே தவிர என்னால் எதனையும் செய்யமுடியாது.

ஞான­சார தேர­ருக்கு சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்ட நாளி­லி­ருந்து பல்­வேறு தரப்­பி­னரும் அவ­ருக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு எனக்கு அழுத்தம் வழங்கி வரு­கின்­றனர். எனினும், முறைப்­பாட்­டாளர் என்­ற­வ­கையில், நான் அதற்கு இணங்­க­வில்லை. இனி ஒரு­போதும் அதற்கு நாம் இணங்­கப்­போ­வ­து­மில்லை.

அல்­லாஹ்­வையும் நபி­யையும் மார்க்­கத்­தையும் அவ­ம­திக்கும் ஞான­சார தேரரை முஸ்லிம் சமூகம் ஒரு­போதும் மன்னிக்­காது. இதே நிலைப்­பாட்­டில்தான் நான் தொடர்ந்தும் இருக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.