ஒரு விசித்திர முரண்பாடு

0 261

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இத்தாய்த் திரு­நாட்டின் அர­சியல் அலங்­கோ­லங்­க­ளுக்கும், பொது­நிர்­வாகச் சீர்­கே­டு­க­ளுக்கும், பொரு­ளா­தாரப் பிணி­க­ளுக்கும், கலாச்­சார மோதல்­க­ளுக்கும், இன ஒற்­று­மை­யின்­மைக்கும் அடிப்­படைக் கார­ண­மாகச் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதச் சித்­தாந்­தமே என்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை. இச் சித்­தாந்­தமே இலங்கை அர­சியற் சுதந்­திரம் அடைந்த நாட்­தொட்டு இன்­று­வரை இந்த மணித்­தி­ரு­நாட்டைச் சீர்­கு­லைத்து வந்­துள்­ளது. அந்தச் சீர்­கு­லைவின் ஒட்­டு­மொத்த வெளிப்­பா­டா­கவே 2022ஆம் ஆண்டு தொடக்கம் இன்­று­வரை நிலவும் பொரு­ளா­தார வங்­கு­ரோத்து நிலைமை என்­பதை எனது ஆங்­கிலக் கட்­டு­ரை­களில் தொடர்ந்து விலி­யு­றுத்தி வந்­துள்ளேன். சர்­வ­தேச நாணய நிதி பதி­னே­ழா­வது முறை­யாக இலங்­கையின் பொரு­ளா­தாரச் சீர்­கு­லைவை நிவர்த்­தி­செய்ய அழைக்­கப்­பட்­டதில் எந்த ஆச்­ச­ரி­யமும் இல்லை. கோத்­தா­பய ராஜ­பக்ச நாட்­டை­விட்டு விரட்­டி­ய­டிக்­கப்­பட்டு அவ­ரு­டைய ஜனா­தி­பதிப் பத­வியும் பறி­போ­ன­பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ மட்­டு­மல்ல வேறு எவ­ரேனும் அப்­ப­த­விக்கு வந்­தி­ருந்­தாலும் நாட்டின் பொரு­ளா­தாரம் அன்­றி­ருந்த நிலையில் சர்­வ­தேச நாணய நிதி­யிடம் சர­ண­டை­வ­தன்றி வேறு­வழி யாருக்கும் இருக்­க­வில்லை. ஆகவே ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ அவர்கள் எதையும் ஆச்­ச­ரிப்­ப­டக்­கூ­டி­ய­வாறு சாதிக்­க­வில்லை. அதனால் அவரை நாட்­டைக்­காத்த தலைவர் என அவ­ரது அடி­வ­ரு­டிகள் இன்று கொண்­டா­டு­வது ஓர் அப­ரி­மித­மான புழுகு என்றே கரு­தப்­படல் வேண்டும். அதைப்­பற்றி மேலும் விரி­வாக ஆரா­யாமல் இக்­கட்­டுரை மேற்­கூ­றிய சித்­தாந்­தத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சிறு­பான்மை இனங்­க­ளி­டையே இன்று தோன்­றி­யுள்ள ஒரு விசித்­தி­ர­மான முரண்­பாட்­டைப்­பற்றி அலச விரும்­பு­கி­றது.

பெரும்­பான்மை இனத்தின் விழிப்பு
2022ல் காலி­மு­கத்­தி­டலில் வளர்ந்­து­வரும் இளம் சந்­த­தி­யி­னரால் உரு­வா­கிய அர­க­லயப் போராட்டம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்று. அப்­போ­ராட்­டத்தின் பிர­தான கோரிக்கை “அமைப்பை மாற்று” என்­ப­தாகும். அது என்ன அமைப்பு என்­பதை அவர்கள் அன்று விப­ரிக்­க­வில்லை. ஆனால் அந்த மாற்­றத்தைக் கொண்­டு­வர அன்றும் இன்றும் ஆட்­சி­யி­லி­ருக்கும் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களால் முடி­யாது என்­பதை அவர்­க­ளது இரண்­டா­வது கோஷ­மான “225 வேண்டாம்” வெளிப்­ப­டுத்­திற்று. ஆகவே அமைப்பு மாற வேண்­டு­மானால் ஆட்­சி­மாற வேண்டும் என்­பதே அவர்­களின் முடிவு. எனினும் அந்தப் போராட்டம் ஒரு தனிப்­பட்ட தலை­மை­யின்­கீழோ அல்­லது ஒரு கட்­சியின் வழி­யா­கவோ உரு­வா­காமல் சாதி மத இன­பே­த­மற்று சர்­வ­மக்­களின் கூட்­டான ஒரு கொந்­த­ளிப்­பாக வெடித்­த­மையால் அவர்­க­ளிடம் எந்தத் திட்­டங்­களோ பிர­க­ட­னங்­களோ அப்­போது இருக்­க­வில்லை. ஆனால் அப்­போ­ராட்டக் கோரிக்­கையின் அந்­த­ரங்கச் செய்­தியை ஆட்­சி­யா­ளர்கள் மட்­டு­மல்ல இலங்­கையின் அர­சியல் அவ­தா­னி­களும் ஏன் வெளி­நாட்டுத் தூத­ர­கங்­க­ளும்­கூட நிச்­சயம் அறிந்­தி­ருந்­தனர். என­வேதான் உலக அரங்­கிலும் அர­க­லாய புக­ழாரம் சூடிக்­கொண்­டது.

அந்தப் போராட்­டத்தின் விளை­வா­க­வேதான் இன்று பெரும்­பான்மை இன­மக்­க­ளி­டையே அதா­வது அவர்­களின் இளஞ்­சந்­த­தி­யி­ன­ரி­டை­யேயும் வெகு­ஜ­னங்­க­ளி­டை­யேயும் ஒரு விழிப்­பு­ணர்வு தோன்­றி­யுள்­ளதை உணரக் கூடி­ய­தாக உள்­ளது. அதா­வது இனி­மேலும் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதச் சித்­தாந்தம் சமூ­கத்தை ஆட்சி செய்­யு­மானால் மேலும் மோச­மான விளை­வு­களை நாடு எதிர்­நோக்கும் என்­ப­தையும் இரு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட பொரு­ளா­தார வங்­கு­ரோத்து நிச்­ச­ய­மாக கடைசி வங்­கு­ரோத்­தாக இருக்­க­மாட்­டாது என்­ப­தையும் நாட்டில் இன சௌஜன்யம் என்­பது வெறும் பகற்­க­ன­வா­கவே இருக்கும் என்­ப­தையும் அவர்கள் புரிந்து கொண்­டனர். என­வேதான் இந்த நாட்டில் உண்­மை­யான ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட்டு, ஊழல் ஒழிக்­கப்­பட்டு, சட்­டமும் நீதியும் சுதந்­தி­ர­மாக இயங்கி சர்­வ­மக்­களும் சாதி, மொழி, இன, மத வேறு­பா­டின்றிச் சம­மாகக் கணிக்­கப்­படும் ஆட்­சி­யொன்றை நிறுவ என அர­க­லயப் போராட்­டத்தின் மடி­யிலே உரு­வா­கிய தேசி­ய மக்கள் சக்­தியின் பின்னால் அவர்கள் அணி­தி­ரளத் தொடங்கி உள்­ளனர். இந்தச் சக்­தியின் விரை­வான எழுச்சி பல அர­சியல் அவ­தா­னி­க­ளையும் வியப்பில் ஆழ்த்தி உள்­ளது. தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அனுர குமார திசா­நா­ய­காவை வெளி­நா­டு­களும் மதிப்­புடன் வர­வேற்கத் தொடங்­கி­யதில் எந்த ஆச்­ச­ரி­யமும் இல்லை. எனவே எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இனத்தின் ஆத­ரவு அமோ­க­மாக அத்­த­லை­வனைச் சூழும் என்று துணிந்து கூறலாம். இந்த நிலையில் சிறு­பான்மை இனங்­களின் நிலைப்­பாடு என்ன?

சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பலிக்­க­டாக்கள்
கடந்த எழு­பத்­தைந்து வரு­டங்­க­ளுக்கும் மேலாக தமி­ழி­னமும் அதனைத் தொடர்ந்து முஸ்­லிம்­களும் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் வளர்ச்­சிக்குப் பலிக்­க­டாக்­க­ளாக மாற்­றப்­பட்­ட­மையை வர­லாறு மறக்­காது. 1957ல் வெடித்த சிங்­க­ள -­தமிழ் இனக்­க­ல­வரம் வளர்ந்து வளர்ந்து ஈற்றில் ஒரு போரையே தோற்­று­வித்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­களின் உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் பலி­கொண்­ட­மை­யையும் அதனால் இன்று உல­க­ளா­விய புக­லிடத் தமிழர் என்ற ஒரு சமூகம் உரு­வாக்­கி­யுள்­ள­தையும் யார்தான் மறுப்­பரோ? அந்தப் போராட்ட வெப்ப அன­லிலே குளிர்­காய்ந்து கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் 2009க்குப் பின்னர் அதே பலிக்­க­டாக்­க­ளாக மாறி­யதை கேகாலை, அளுத்­கம, அம்­பாரை, திகன, மாவ­னெல்லை, புத்­தளம், நீர்­கொ­ழும்பு, மினு­வாங்­கொடை போன்ற பல இடங்­களில் வெடித்த சிங்­கள முஸ்லிம் கல­வ­ரங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. அந்த நிலை இன்னும் நீங்­க­வில்லை என்­றுதான் கூற­வேண்டும். ஆகவே சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் அர­சியற் சித்­தாந்­த­மாகத் தலை­வி­ரித்­தா­டும்­வரை ஜன­நா­ய­கத்­துக்கோ இன ஒற்­று­மைக்கோ ஏன் பொரு­ளா­தார மீட்­சிக்கோ இலங்­கையில் இட­மில்லை என்­பதை மேலும் வலி­யு­றுத்த வேண்­டுமா? அவ்­வா­றானால் அந்தப் பேரி­ன­வா­தத்தை உத­றித்­தள்­ளி­விட்டு இந்த நாட்டின் சகல பிர­ஜை­களும் சட்­டத்­தின்முன் சமன், அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் சம­மான உரி­மை­களும் கட­மை­களும் உண்டு, எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் எந்த இனமோ மதமோ இந்த நாட்டை ஆள முடி­யா­தென்ற தூய ஜன­நா­யக மர­பி­லான அரசு ஒன்றை நிறு­வு­வ­தற்­கென ஒரு சக்தி எங்­கா­வது வெளிப்­ப­டும்­போது அதற்குப் பின்னால் அணி­தி­ரள்­வது இச்­சி­று­பான்மை இனங்­களின் கடமை அல்­லவா? ஆனால் இப்­போது நடப்­ப­தென்ன?

இன­வா­தத்தைப் பங்­கு­போ­டு­வதா?
விரைவில் தேர்­த­லொன்று வரப்­போ­கின்­றது. அது ஜனா­தி­பதித் தேர்­த­லா­கவே அமையும் என்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­ப­டு­கின்­றன. எனினும் தேர்தல் நாளை அறி­விக்­கா­மலே ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ தனது பிரச்­சா­ரத்தை ஆரம்­பித்து விட்டார். அவ­ரது வெற்­றிக்குச் சிறு­பான்மை இனங்­களின் ஆத­ரவு அவ­சியம் என்­பதை அவர் உணர்ந்­த­தனால் ஏற்­க­னவே வடக்­கிலும் கிழக்­கிலும் மேடைப் பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ளார். இந்த நிலையில் தமிழ் மக்­க­ளி­டையே அவ­ரையும் அவரை எதிர்க்கும் போட்­டி­யா­ளர்­க­ளையும் எதிர்­நோக்கும் ஒரு கேள்வி 13ஆம் திருத்­தத்தை அமு­லாக்­கு­வீர்­களா என்­ப­தாகும். அனுர குமர திச­நா­ய­கா­வைத்­த­விர ஏனை­ய­வர்கள் ஆம் என்று தலை அசைப்­ப­துபோல் தெரி­கி­றது. திச­நா­யகா மட்டும் அவ­ரது அரசு 13ஆம் திருத்­தத்­தையும் கடந்து சென்ற காலத்தை மறந்து வருங்­கா­லத்தை நோக்கி ஒரு முடி­வெ­டுப்போம் என்று கூறி­யுள்ளார். இதில் அடங்­கி­யுள்ள ஓர் உண்­மையை சிறு­பான்மை இனங்கள் புரிந்­து­கொள்­வது அவ­சியம்.

13ஆம் திருத்தம் இந்­தி­யாவின் சிபார்­சினால் உரு­வா­கிய ஒரு சம­ரசம். அதனைப் பேரி­ன­வாதச் சித்­தாந்­தத்தின் ஓர் உப பிரி­வா­கவே கருத வேண்டும். பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­தத்தை ஏழு மாகா­ணங்­க­ளிலும் தமி­ழரின் இன­வா­தத்தை இரண்டு மாகா­ணங்­க­ளிலும் வள­ர­விடும் ஓர் இன­வாதப் பங்­கீட்டுத் தீர்வே அது. தமி­ழரின் இன­வா­தத்­தின்கீழ் முஸ்­லிம்கள் நிலை என்ன என்­ப­து­பற்றி இந்­தியா அன்று சிந்­திக்­கா­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஆனால் 13ஆம் திருத்­தத்­துக்­கான எதிர்ப்பு அப்­போ­தி­ருந்தே கிழக்­கி­லங்­கையில் முஸ்­லிம்கள் மத்­தியில் ஆரம்­ப­மாகி விட்­டது. இன்று கல்­மு­னையில் ஏற்­பட்­டுள்ள பிர­தேச சபைப் பிரி­வு­பற்­றிய தமி­ழர்-­ முஸ்லிம் முறுகல் அதற்கோர் எடுத்­துக்­காட்டு. ஆகவே 13ஆம் திருத்­தத்­தையும் கடந்து ஒரு முடி­வு­காண வேண்­டு­மானால் இன­வா­தத்­தையே முற்­றாக அர­சி­யலில் இருந்து ஒழிப்­ப­தாகும். அதைத்தான் தேசிய மக்கள் சக்தி தன் கொள்­கை­யாகக் கொண்­டுள்­ள­மையை திச­நா­ய­காவின் பிரச்­சார உரைகள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. ஆகவே 13ஆம் திருத்தம் அமு­லாக்­கப்­படல் வேண்டும் என்று கோரும் தமிழ்த் தலை­மைகள் இன­வா­தத்தில் தமக்­கொரு பங்கு கேட்­கின்­றன.

முஸ்லிம் தலை­மை­களின்
நிலைப்­பாடு
முஸ்­லிம்­களின் அர­சியல் வியா­பார அர­சியல். அந்த வியா­பா­ரத்­துக்குச் சிங்­க­ள-­ தமிழ் இன­வாதம் உறு­து­ணை­யாக அமைந்­த­தைத்தான் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள அவர்­களின் அர­சியல் வர­லாறு கற்­பிக்­கின்­றது. விடு­தலைப் புலி­களின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அட்­டூ­ழி­யங்­களும் அழி­வு­களும் ஒரு­வ­கையில் இந்த வியா­பார அர­சி­ய­லுக்கு எதி­ராக எழுந்­த­வொன்று என்­ப­தையும் இங்கே சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. 1990வரை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தனித்­த­னியே இந்த வியா­பா­ரத்தைச் சில்­ல­றை­யாக மேற்­கொள்ள 1990இன் பின்னர் தமக்­கென ஒரு கட்­சியை அமைத்­துக்­கொண்டு மொத்த வியா­பா­ரத்தில் இறங்­கி­யுள்­ளனர். எந்தச் சிங்­களத் தலைவன் ஆட்சி அமைக்­கி­றானோ அவ­னுக்குத் தாஜா­பி­டித்துக் காரியம் சாதிப்­பதில் முஸ்லிம் தலை­வர்கள் வல்­ல­வர்கள். ஆனால் அவர்­களின் சாத­னை­க­ளெல்லாம் தனிப்­பட்ட சலு­கை­களைப் பெறு­வ­தே­யன்றி சமூகம் செழிப்­ப­தற்­காக வென்­றெ­டுத்த சாத­னை­க­ளல்ல. கட்சி இல்­லா­மலே சமூ­கத்­துக்­காக உழைத்த தலை­வர்­களை முஸ்லிம் சமூ­கமே மறந்­து­விட்­டது. அந்தச் சோக வர­லாற்றை இங்கே விவரிக்க இக்­கட்­டுரை விரும்­ப­வில்லை.

கிழக்­கிலே ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ அவர்கள் அண்­மையில் திக்­வி­ஜயம் செய்­த­போது ஒரு முஸ்லிம் பிர­பலம் அவ­ரு­டைய ஜனா­தி­பதி ஆட்சி இறை­வனின் அருட்­கொடை எனப் புகழ்ந்தார். இன்­னொரு பிர­பலம் அவரே தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­யாக இருக்க அல்­லாஹ்­வையே நேர­டி­யாக இறைஞ்­சினார். இந்த ஞான­சூ­னி­யங்­க­ளுக்கு நாட்டின் அடிப்­படைப் பிரச்­சினை என்ன என்­பதைப் பற்­றியோ அதனால் ஏற்­பட்ட சீர­ழி­வுகள் எவை என்­பன பற்­றியோ எந்த அறிவும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. நாட்டின் அர­சி­யல்-­ பொ­ரு­ளா­தா­ர -­ச­மூக அமைப்பு பேரி­ன­வாதச் சித்­தாந்­தத்தின் அடிப்­ப­டையில் அமைந்­தி­ருக்க அந்த அடிப்­ப­டையை உடைத்­தெ­றிந்­தா­லன்றி இந்த நாட்­டுக்கு விடி­வு­காலம் பிறக்­கா­தென்­பதை இந்தப் பிர­ப­லங்கள் உண­ருமா? அந்த உண்­மையை வளர்ந்­து­வரும் இளஞ் சந்­த­தி­யொன்று பெரும்­பான்மை இனத்­தி­டையே உணர்ந்­த­த­னா­லேதான் அர­க­லயப் போராட்டம் அன்று வெடித்­தது. ஆனால் அந்தப் போராட்­டத்தை முறி­ய­டித்து ஜனா­தி­ப­தி­யா­கிய விக்­கி­ர­ம­சிங்­ஹ­வுக்கு அந்த அடிப்­ப­டையை உடைத்­தெ­றியத் துணி­வில்லை. இந்த நிலையில் அவர் இனங்­க­ளி­டையே சம­ரசம் வேண்டும் என்று கூறித்­தி­ரி­வது சிறு­பான்மை இனங்­களின் வாக்குப் பெட்­டி­களைக் கவர எடுக்கும் பிர­யத்­த­னமே. அதற்கு உறு­து­ணை­யாக செயற்­ப­டு­கின்­ற­வர்­களே முஸ்லிம் அர­சியல் வியா­பா­ரிகள். இந்த ஆஷா­ட­பூ­தி­களை தலை­வர்­களாகக் கொண்டால் முஸ்லிம் சமூகம் என்­றுமே பேரினவாதத்தின் பலிக்கடாக்கள்தான்.

விசித்திர முரண்பாடு
இந்த நாட்டின் தற்­போ­தைய சீர­ழி­வு­களை மொத்­த­மாக நீக்­கு­வ­தற்கு ஒரே பரி­காரம் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதச் சித்­தாந்­தத்தில் உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் பொரு­ளா­தார சமூக அமைப்­பு­களை அகற்­று­வதே என்ற புரட்­சி­க­ர­மான சிந்­த­னையை பெரும்­பான்மை இனத்­தி­டையே விதைத்­துள்­ளார்கள் இளந்­த­லை­முறை அர­க­லயப் போரா­ளிகள். அவர்­க­ளுக்கு முதலில் நன்­றி­கூற வேண்டும். அந்த விதைப்பில் வளர்ந்­துள்ள தேசிய மக்கள் சக்தி அச்­சிந்­த­னைக்கு அர­சியல் வடிவம் கொடுக்கக் களத்தில் குதித்­துள்­ளது. அந்தக் கட்­சியின் செல்­வாக்கு நாளுக்­குநாள் பெரு­கிக்­கொண்டு வரு­வதை பலரும் அறிந்­துள்­ளனர். இந்த நிலையில் பேரி­ன­வா­தத்­துக்குப் பலிக்­க­டாக்­க­ளாகி பல இழப்­பு­களை இன்னும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் சிறு­பான்மை இனங்கள் அக்­கட்­சியின் பின்னால் அணி­தி­ர­ளாமல் பேரி­ன­வா­தத்தில் பங்கு கேட்டுத் தமி­ழரும் அர­சியல் வியா­பாரம் செய்­வ­தற்கு பேரி­ன­வா­தமே சிறந்­தது என்று கருதி முஸ்லிம் தலை­மைகள் பேரி­ன­வா­தி­களின் பின்னால் சுற்­று­வதும் அவர்­க­ளுக்குப் புக­ழாரம் சூடு­வதும் ஒரு விசித்­தி­ர­மான முரண்­பா­டாகத் தோன்­ற­வில்­லையா?

பெரும்­பான்மை இனமே விழித்­தெ­ழுந்து இனவாதப் போர்வையை கிழித்தெறியும்போது சிறுபான்மை இனங்கள் அந்தப் போர்வைக்குள்ளேயே இன்னும் துயில்வதை எவ்வாறு சரிகாண்பதோ?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.