ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே

உறுதிப்படுத்தியது சவூதி அரசாங்கம்

0 85

சவூதி அரே­பி­யாவில் நிலவி வரும் கடும் வெப்பம் கார­ண­மாக ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­களில் சுமார் 1,300-க்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளதை அந்­நாட்டு அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் 83 சத­வீதம் பேர் யாத்­திரை மேற்­கொள்ள முறைப்­படி பதிவு செய்­யா­த­வர்கள் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று இந்த தக­வலை சவூதி அதி­கா­ர­பூர்­வ­மாக உறுதி செய்­தது. யாத்­திரை மேற்­கொண்­ட­வர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியின் கீழ் வெகு தூரம் நடந்து வந்­ததும், தங்கும் வசதி இல்­லா­ததும் இதற்கு காரணம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து சவூதி அரசின் செய்தி நிறுவனமான சவூதி பிரெஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இந்­தியா உட்­பட சுமார் 10 நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதில் அதி­க­பட்­ச­மாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதில் 630 பேர் முறைப்­படி பதிவு செய்­யா­த­வர்கள்.

வெப்­பத்தால் பாதிக்­கப்­பட்ட சுமார் 4.65 இலட்சம் பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்­கப்­பட்டு உள்­ள­தா­கவும் அவர்­களில் 1.4 இலட்சம் பேர் முறைப்­படி ஹஜ் யாத்­தி­ரைக்கு பதிவு செய்­யா­த­வர்கள் என்றும் அந்த நாட்டின் சுகா­தாரத்துறை அமைச்சர் ஃபஹத் அல்-­ஜ­லாஜெல் தெரி­வித்­துள்ளார். மேலும், பலர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

சவூ­தியில் இந்த ஆண்டு யாத்­திரை மேற்­கொண்­ட­வர்களின் உயி­ரி­ழப்­புக்கு கால­நிலை மாற்றம் பிர­தான கார­ண­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­களின் வயதும் கார­ண­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நடப்பு ஆண்டில் சவூ­தியில் சரா­ச­ரி­யாக சுமார் 50 டிகிரி செல்­சியஸ் வரை வெப்பம் நிலவி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மினாவில் ஏற்­பட்ட சன­நெ­ரிசல் கார­ண­மாக சுமார் 2,400-க்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­தனர். இதே போல மக்­கா­வுக்கு அருகில் கடந்த 1990 இல் ஏற்­பட்ட சன நெரி­சலில் சுமார் 1,426 பேர் உயி­ரி­ழந்­தனர். கடந்த 1994 இல் 270 பேர், 1998 இல் 118 பேர் சவூ­தியில் யாத்­தி­ரையின் போது ஏற்­பட்ட நெரி­சலில் உய­ரி­ழந்­தனர்.

கடந்த 50 ஆண்­டு­களில் மட்டும் மக்கள் அதிகம் கூடும் மதம் சார்ந்த நிகழ்­வு­களில் சுமார் 9,000 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதில் சவூ­தியில் மட்டும் 5,000 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­தி­யாவில் 40க்கும் மேற்­பட்ட தனித்­தனி நிகழ்­வு­களில் மொத்­த­மாக 2,200 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை சி.என்.என். உடன் பேசிய ஹிரு ஜுமர்டியா, தனது 86 வய­தான தந்தை, ஜூன் 17 அன்று மக்­காவின் தென்­கி­ழக்கில் உள்ள மினாவில் உள்ள தனது கூடா­ரத்தில், உயி­ரி­ழந்­த­தாக கூறினார்.

“அவர் தூங்கிக் கொண்­டி­ருந்தார், இதற்கு முன் நோயின் அறி­கு­றிகள் எதுவும் இருக்­க­வில்லை. ஹஜ் யாத்­தி­ரையின் போது அவர் நல­முடன் இருப்­ப­தாக அனை­வரும் கூறினர்” என்றார்.

சென்­டோனோ 2018 இல் ஹஜ்­ஜுக்­காக பதி­வு­செய்து, இந்­தோ­னே­சி­யாவின் யோக்­ய­கர்த்தா நக­ரத்­தி­லி­ருந்து தனது 83 வய­தான மனைவி மற்றும் அண்டை வீட்­டா­ருடன் மக்­கா­வுக்குப் பயணம் செய்­துள்ளார்.

இஸ்­லா­மிய நம்­பிக்­கை­யின்­படி, ஹஜ்­ஜின்­போது இறப்­பதும் மக்­காவில் அடக்கம் செய்­யப்­ப­டு­வதும் ஆசீர்­வா­த­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது, பல முஸ்­லிம்கள் தங்கள் முதுமைக் காலத்தில் புனிதப் பயணம் மேற்­கொள்­வ­தற்­காக பல வரு­டங்­க­ளாக பணத்தைச் சேமித்து பயணம் செய்­கி­றார்கள்.

“அவர் மக்­காவில் அடக்கம் செய்­யப்­பட்­டதில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்,” என்று ஜுமர்­தியா கூறினார். தான் புனித யாத்­திரை மேற்­கொள்ளும் வாய்ப்பு கிடைக்­கும்­போது தனது தந்­தையின் கல்­ல­றைக்குச் செல்வேன் என்று தான் நம்­பு­வ­தா­கவும் அவர் கூறினார்.

சுமார் 241,000 இந்­தோ­னே­சிய யாத்­தி­ரி­கர்கள் இந்த ஆண்டு மக்­கா­விற்கு பயணம் செய்­துள்­ள­தாக இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இவர்கள் எதிர்­வரும் ஜூலை 7 இல் நாடு திரும்­ப­வுள்­ளனர்.

இந்­தோ­னே­சிய மத விவ­கார அமைச்­ச­கத்தின் தர­வு­க­ளின்­படி, இந்த ஆண்டு புனித யாத்­தி­ரையில் இறந்த பெரும்­பா­லான இந்­தோ­னே­சி­யர்கள் 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாவர்.

ஒவ்­வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது நூற்­றுக்­க­ணக்­கான இந்­தோ­னே­சி­யர்கள் மர­ணிப்­பது வழக்­க­மாகும். கடந்த ஆண்டு, 773 பேர் புனித யாத்­தி­ரையின்போது இறந்­த­தாக அமைச்­ச­கத்தின் பதி­வுகள் தெரி­விக்­கின்­றன.
தீவிர வெப்­ப­நி­லையைக் கண்­கா­ணிக்கும் கால­நிலை நிபு­ணரும் வானிலை வர­லாற்­றா­சி­ரி­ய­ரு­மான மாக்­சி­மி­லி­யானோ ஹெர்­ரேரா, சி.என்.என். இடம் கூறு­கையில், இப்­ப­கு­தியில் உள்ள பாலை­வ­னங்கள் “பகலை விட இரவில் மிக வேக­மாக வெப்­ப­ம­டை­கின்­றன. இந்­நிலை இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்பு வரை இல்லை,” எனக் கூறினார்.

“அனை­வரும் கொடிய வெப்­பத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் மற்றும் துரதிர்ஷ்டவசமாக இம்முறை ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையால் நான் ஆச்சரியப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

“மக்காவின் அதிக வெப்பத்தில் வெளியில் அதிக நேரத்தைச் செலவிடுவது மரண ஆபத்திற்கு இட்டுச் செல்கிறது… அடுத்து வரும் ஹஜ் யாத்திரைகளின்போது உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என இருக்கும் என்று நான் பயப்படுகிறேன்.”- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.