17 வயது மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 15 வயது மாணவன் மரணம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் அதிர்ச்சி சம்பவம்

0 64

எப்.அய்னா

ஹம்­பாந்­தோட்டை, சிப்­பிக்­குளம் சாமோ­தா­கம பகு­தியில் 15 வயது பாட­சாலை மாணவன் ஒரு­வரை 17 வயது பாட­சாலை மாணவன் ஒருவன் கத்­தியால் குத்தி கொலை செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் கடந்த வாரம் பதி­வா­னது.

ஹம்­பாந்­தோட்டை சாஹிரா கல்­லூ­ரியில் தரம் 10 இல் கல்வி கற்ற, ஆரா­பொக்க பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் பைரூஸ் ஆனிப் மொஹம்மட் எனும் மாண­வனே இவ்­வாறு கொல்­லப்­பட்­டி­ருந்தார். கடந்த 5 ஆம் திகதி சிப்­பிக்­குளம், சாமோ­தா­கம பகு­தியில் உள்ள மேல­திக வகுப்­புக்கு செல்லும்போது, குறித்த மாணவன் தாக்­கப்­பட்டு கத்­தியால் குத்­தப்­பட்டு படு காய­ம­டைந்த நிலையில், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டுள்ளார். இத­னை­ய­டுத்தே சிகிச்சைப் பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­பவம் தொடர்பில் கொலை குற்­ற‌ச்­சாட்டில் ஹம்­ப­ாந்­தோட்டை ஆரா­பொக்க பகு­தியைச் சேர்ந்த, சென். மேரி பாட­சா­லையில் கல்வி கற்கும் 17 வய­து­டைய எம். அவ்ஷான் எனும் மாணவன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி அம்­மா­ணவன் ஹம்­பாந்­தோட்டை நீதிவான் ஓஷத மிகார மஹா­ரச்சி முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில், இம்­மாதம் 20 ஆம் திக­தி­வரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளார். அதன்­படி அங்­கு­னு­கொ­ல­பெ­லஸ்ஸ சிறையில், நீதி­மன்றின் உத்­த­ரவின் பிர­காரம் சந்­தேக நப­ரான மாணவன் ஏனைய கைதி­க­ளிடம் இருந்து தனி­மைப்­ப‌­டுத்­தப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் இந்தச் சம்­பவம் தொடர்பில் தங்­காலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கீர்த்­தி­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய ஹம்­பாந்­தோட்டை பொலிஸ் நிலைய குற்­ற‌­வியல் விசா­ரணைப் பிரி­வி­னரால் சிற‌ப்பு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. குறித்த விசா­ர­ணை­களில், கிரிக்கட் போட்டி ஒன்று தொடர்பில் இரு மாண­வர்­க­ளுக்கும் இடையில் நில­விய முரண்­பாட்டை மையப்­ப­டுத்­திய வாய்த்­தர்க்கம் கொலையில் முடிந்­துள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, அண்­மையில் க.பொ.த.சாதா­ரண தர பரீட்­சை­க­ளுக்­காக அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பரீட்சை மண்­டப வளா­கத்தில் இரு மாணவக் குழுக்­க­ளி­டையே மோதல் சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யமை, இதனால் ஒரு மாணவன் காய­ம­டைந்து அனு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில், இம்­மோ­தல்­க­ளி­டையே பரீட்சை வளா­கத்­துக்குள் புகுந்து மாணவர் ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறி மாணவன் ஒரு­வனின் தாய் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சம்­ப­வ­மா­னது ஒரு தனிப்­பட்ட குற்றச் சம்­ப­வ­மாக பதி­வா­கி­யுள்ள போதும், எமது இளம் மாணவ சமூ­கத்­தி­ன­ரி­டையே அண்மைக் கால­மாக குழு மோதல்கள் பதி­வா­வதை நாம் அவ­தா­னிக்­கின்றோம். குறிப்­பாக அண்­மையில் க.பொ.த.சாதா­ரண தர பரீட்­சை­க­ளுக்­காக அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பரீட்சை மண்­டப வளா­கத்தில் இரு மாணவக் குழுக்­க­ளி­டையே மோதல் சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யமை, இதனால் ஒரு மாணவன் காய­ம­டைந்து அனு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிலையில், இம்­மோ­தல்­க­ளி­டையே பரீட்சை வளா­கத்­துக்குள் புகுந்து மாணவர் ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறி மாணவன் ஒரு­வனின் தாய் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வத்தை விடி­வெள்ளி அறிக்­கை­யிட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான பல குழு மோதல்கள், மாண­வர்­க­ளி­டையே ஆங்­காங்கே பதி­வா­கின்­றன. இது ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்கை அன்று. குறிப்­பாக, ஒழுக்­க­முள்ள, அறி­வார்ந்த சமூ­கத்தை உரு­வாக்க உள்ள கட்­ட­மைப்­பான‌ பாட­சா­லை­களில் கற்கும் போதே இவ்­வாறு வன்­முறை கலா­சா­ரத்­துக்கு வழி­ய­மைக்கும் செயற்­பா­டு­களில் மாண­வர்கள் ஈடு­ப­டு­வது அவர்­க­ளது எதிர்­கா­லத்­தையே பெரிதும் பாதிக்கும்.

அவ்­வா­றெனில் மாண­வர்­களை அவ்­வா­றான வன்­மு­றைகள் நோக்கி செல்­லாது தடுப்­ப­தற்­கான சூழலை அமைத்­துக்­கொ­டுக்க வேண்­டி­யது சமூ­கத்தின் கட­மை­யாகும்.

இதற்­காக பாட­சா­லைகள் மட்­டு­மன்றி, ஊரின் பள்­ளி­வா­சல்கள், சமூக நலன் சார் அமைப்­புக்கள் என அனைத்தும் ஒன்­றி­ணைந்து செயற்பட வேண்டும். வெறுமனே பாடப் புத்தகத்தை மட்டும் கற்றுக்கொடுக்கும் இடங்களாக பாடசாலைகள் இயங்காது, முரண்பாடுகளை தீர்க்கும் வழிமுறைகளை கற்பிக்கும், ஒன்றிணைந்து செயற்படும் திறனை வளர்க்கும், மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்கும், சகித்துக்கொள்ளும் விடயங்களை ஊக்குவிக்கும் இடங்களாகவும் செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.