இந்தியாவில் கைதான 4 இலங்கையர்கள் பயங்கரவாத தொடர்புக்கு எவ்வித ஆதாரமுமில்லை

இலங்கையின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிப்பு

0 93

(எப்.அய்னா)
நான்கு இலங்­கை­யர்­கள் குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை மையப்­ப‌­டுத்தி, இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் பெரும்­பாலும் நிறை­வுக்கு வந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்­ப‌டும் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரே­ம­ரத்­னவின் கட்­டுப்­பாட்டில், சி.ரி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸின் ஆலோ­சனை மற்றும் கட்­டுப்­பாட்டில் சிற‌ப்புக் குழு இவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

அதன்­படி இவ்­வி­வ­கா­ரத்தில் இலங்­கையில் 8 பேர் கைது செய்­யப்­பட்டு நிர்­வாக தடுப்புக் காவலின் கீழ் வைக்­கப்­பட்டு வரும் நிலையில், அவ்­வி­சா­ர­ணைகள் நிறை­வுக்கு வந்­துள்­ள‌­தா­கவும் அதில் பயங்­க­ர­வாதம் அல்­லது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் குறித்து எந்த ஆதா­ரங்­களும் வெளிப்­ப‌­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸ் தலை­மை­யக உள்­ளக தக­வல்கள் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்­தன.

அதே நேரம் இந்­தி­யாவில் இருந்து கிடைக்கப் பெரும் தக­வல்­களின் படி, இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்ட நால்­வ­ருக்கு எதி­ரா­கவும் பயங்­க­ர­வாதம் குறித்து குற்ற‌ம் சுமத்த வலு­வான ஆதா­ரங்கள் இல்லை எனவும், பெரும்­பாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக‌ வேறு குற்­ற‌ச்­சாட்­டுக்­களின் கீழ் குஜராத் பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்க தயா­ராகி வரு­வ­தா­கவும் அறிய முடி­கின்­றது.

அதன்­படி அவர்­க­ளுக்கு எதி­ராக கடத்தல் பிரி­வு­களின் கீழ் குற்­றச்­சாட்டு முன் வைகப்­ப­டலாம் என தெரி­கி­றது.

இது­வரை இலங்­கையில் 8 பேர் கைது :
இந்த விவ­கா­ரத்தில் 8 பேர் இலங்­கையின் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு நிர்­வாக தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றனர். அதில் பிர­தான சந்­தேக நப­ராக தெமட்­ட­கொடை பகு­தியை சேர்ந்த ஒஸ்மன் ஜராட் புஷ்­ப­குமார் என்­பவர் அடை­யா­ளப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்ளார்.

முதலில் மாளி­கா­வத்தை ‍ ஜும் ஆ மஸ்ஜித் லேனை சேர்ந்த்த நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். பின்னர் சிலாபம் ‍ பங்­கெ­தெ­னிய பகு­தியை சேர்ந்த சகோ­த­ரர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவ்­வி­ரு­வரும் இலங்­கையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் முக்­கிய சந்­தேக நப­ராக கரு­தப்­ப‌டும் ஒஸ்மான் ஜெரோட்டின் உடன் பிறந்த சகோ­த­ரர்­க­ளாவர். பின்னர் மாவ­னெல்­லையை சேர்ந்த்த இருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில், அதன் பின்னர் கொழும்பில் தனது உரு­வத்தை மாற்றி மறைந்­தி­ருந்த ஒஸ்மன் ஜெரோட்டும் கைது செய்­யப்­பட்டார்.

அதனைத் தொடர்ந்து வத்­தளை பகு­தியில் வைத்து மேலும் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் சமூக வலைத்­த­ளங்­களில் அடிக்­கடி காணொ­ளி­களை வெளி­யிடும் நபரும் உள்­ள­டங்­கு­கின்றார்.

இந் நிலை­யி­லேயே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் அல்­லது பயங்­க­ர­வாதம் குறித்து குற்றம் சுமத்த எந்த ஆதா­ரங்­களும் வெளிப்­ப‌­டுத்­தப்­ப­ட­வில்லை எனக் கூறும் விசா­ர­ணை­யா­ளர்கள், மிக விரைவில் கைது செய்­யப்­பட்ட 8 பேர் தொடர்­பிலும் தீர்­மானம் ஒன்று எடுக்­கப்­ப‌டும் எனவும், பொலிஸ் சட்ட பிரிவு மற்றும் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­யையும் அவ­சியம் ஏற்­படின் நாட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.

இந்­தி­யாவில் இலங்­கை­யர்கள் நால்வர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இலங்கையினுடைய பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் கமல் குண‌ரட்ன, “நாங்கள் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகி இருப்பதை கண்டறிந்துள்ளோம். அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர்” என பதிலளித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.