பரீட்சை நிலைய அநீதிகளுக்கு நிரந்தர தீர்வொன்றே அவசியம்!

0 243

தேசிய மட்­டத்தில் நடாத்­தப்­படும் பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­விகள் அல்­லது பரீட்­சார்த்­திகள் தமது கலா­சார ஆடையை அணிந்து தோற்­று­வதில் தொடர்ச்­சி­யாக சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தர பரீட்­சை­களின் போது முஸ்லிம் மாண­வி­களின் ஆடையை மையப்­ப­டுத்தி ஏதோ ஒரு பரீட்சை மண்­ட­பத்தில் ஏதேனும் ஒரு சம்­பவம் பதி­வா­காமல் இருப்­ப­தில்லை. தற்­போது இது ஒருபடி மேல் சென்று 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­று­களை நிறுத்தி வைக்கும் அள­வுக்கு வியா­பித்­து­விட்­டது.

இம்­முறை பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்ட போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பரீட்சை எழுத தமது பாட­சாலை சீரு­டை­யுடன் இணைந்­த­தாக பர்தா அணிந்து சென்ற மாண­வி­க­ளுக்கு அவர்­க­ளது காதையும் முகத்­தையும் காட்­டு­மாறு கூறப்­பட்­டுள்­ளது. பரீட்சை திணைக்­கள சுற்­று­நி­ரு­பத்­துக்கு அமைய இதற்­கான கட்­டளை பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யா­ளரால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அம்­மா­ண­விகள் அக்­கட்­ட­ளை­களை பின்­பற்­றி­யுள்­ள­தாக கூறு­கின்­றனர். 70 மாண­வி­களில் 68 மாண­வர்கள் பர்­தாவை கழட்­டி­விட்டு, கையில் வைத்­தி­ருந்த துப்­பட்­டா­வினால் தலையை மறைத்­துக்­கொண்டு பரீட்சை எழு­தி­யுள்­ளனர்.

அதே பரீட்சை மண்­ட­பத்தில் வேறு பாட­சா­லை­களைச் சேர்ந்த 10 முஸ்லிம் மாண­வி­களும் பரீட்சை எழு­தி­யுள்­ளனர். அவர்­களின் பெறு­பே­றுகள் வெளி­யா­கி­யுள்­ளன. இவற்றை பார்க்­கும்­போது, திரு­ம­லை ­ஸா­ஹி­ரா ­கல்­லூரி திட்­ட­மிட்டு பழி­வாங்­கப்­பட்­டுள்­ளது என பாட­சாலை சமூ­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

இந் நிலையில் இந்த விட­யத்தில் பரீட்­சைகள் திணைக்­களம் மாண­வி­க­ளிடம் விசா­ரணை நடாத்தும் போதும் உரிய முறை­மை­யினை பின்­பற்­றாது, பலாத்­கா­ர­மாக, அச்­சு­றுத்தி சில விட­யங்­களை எழுதிப் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் கூறப்­ப‌­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் இந்த விடயம் தொடர்பில் கடந்த இரு வாரங்­க­ளாக முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் ஜனா­தி­பதி, கல்வி அமைச்சர், பரீட்­சைகள் ஆணை­யாளர் என சகல தரப்­புக்­க­ளு­டனும் பேசி வரு­கின்­ற‌னர். ஆனால் இன்னும் அவர்­களின் பெறு­பே­றுகள் மட்டும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் தொடர்­பி­லான மீள் திருத்த விண்­ணப்­பங்­களை ஏற்­றுக்­கொள்ளும் திகதி எதிர்­வரும் 19 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்­றது. ஆனால் இந்த 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த 9 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் திரு­கோ­ண­ம­லைக்கு சென்று இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதும், நேற்று மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கல்வி அமைச்­ச­ருடன் அமைச்சில் வைத்து பேசிய போதும் இன்னும் 6 நாட்­க­ளுக்குள் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப‌டும் என பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் பெறு­பே­று­களை வெளி­யி­டு­வ­தாக இடை நிறுத்­தப்­பட்ட தினத்­தி­லி­ருந்து ஒவ்­வொரு திக­தியை அதி­கா­ரிகள் கூறிய போதும் இன்னும் அவை வெளி­யி­டப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

அத்­துடன் 6 நாட்­களில் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­பட்­டாலும், இந்த 70 பேருக்கு மீள் திருத்தல் குறித்து விண்­ணப்­பிக்க போது­மான கால அவ­காசம் இல்லை.
எனவே இந்த மாண­விகள் பரீட்சை பெறு­பேறு இடை நிறுத்தம் கார­ண­மாக பெரும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் அல்­லது கல்வி அமைச்சு, இம்­மா­ண­வி­களின் விட­யத்தில் தொடர்ச்­சி­யாக அச­மந்த போக்­கு­டனும், பொறுப்­பற்றும், நியா­ய­மின்­றியும் செயற்­ப­டு­மானால் முஸ்லிம் சமூகம் நீதி­மன்றை நாட தயங்கக் கூடாது.

குறிப்­பாக உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்து, தேசிய மட்ட பரீட்­சை­களின் போது எந்த த‌ங்கு தடையும் இன்றி முஸ்லிம் மாணவர்கள் அவர்களது கலாசார ஆடைகளை அணிந்து தோற்ற அனுமதிக்கும் வகையிலான வழிகாட்டல்களை தீர்வாக பெற முஸ்லிம் சமூகம் முயற்சிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில், முஸ்லிம் மாணவர்களின் ஆடையை மையப்ப‌டுத்தி எந்த பழிவாங்கல்களுக்கும் அவர்கள் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.