இலங்கையில் முதலிடுமாறு குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

0 149

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற்றுக்கொள்வதற்காக குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.

அத்துடன், இப்தார் வைப­வங்­க­ளுக்­காக செல­விடும் பணம் பாதிக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீ­னர்­க­ளு­க்கு­ அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார கடந்த திங்­கட்­கி­ழமை சினமன் கிரேன்ட் ஹோட்­டலில் இடம்­பெற்ற குவைத் நாட்டின் தேசிய தின வைப­வத்தின் போது இத்­த­க­வலை வெளி­யிட்டார்.

குவைத் தேசிய தின வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தனது உத்­தி­யோ­க­பூர்வ உரைக்கு முன்­பாக இத்­த­க­வலை வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

‘பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இச்­சூழ்­நி­லையில் உத­விகள் வழங்­கு­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்கம் வழ­மை­யாக வரு­டாந்தம் ஏற்­பாடு செய்யும் இப்தார் நிகழ்­வுகள் இந்த வருடம் ரம­ழானில் இடம்­பெ­ற­மாட்­டாது. ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ரமழான் இப்தார் ஏற்­பா­டு­க­ளுக்கு உத்­த­ர­வி­ட­மாட்­டார்கள்.

இந்த இப்தார் வைப­வங்­க­ளுக்­காக வழ­மை­யாக ஒதுக்­கப்­படும் நிதி பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான நிதி­யத்­துக்கு மாற்­றப்­படும். அர­சாங்கம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை உத­வி­யாக வழங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளது. இந்த பலஸ்­தீ­னர்­க­ளுக்­கான நிதி­யத்­துக்கு தங்கள் பங்களிப்பைச் செய்ய விரும்புவர்கள் அனுப்பி வைக்க முடியும் கிடைக்கப் பெறும் உதவிகள் பலஸ்தீன் நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை, குவைத் அர­சாங்­கத்­திற்­கி­டையில் 2009 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்றும் பரஸ்­பர பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­யா­னது பல வச­தி­களை வழங்­கு­கி­றது. இதனால் குவைத் நாட்டின் முத­லீட்­டா­ளர்கள் அதி­க­பட்ச பலனைப் பெறு­வ­தற்­கான வாய்ப்பைப் பெறு­வ­தா­கவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் இங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர்,
“இலங்கை மற்­றும் குவைத்­து­க்கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உறவு ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இது­வரை இவ்­விரு அர­சு­களும் பரஸ்­பரம் நெருக்­க­மான உற­வு­களை பேணி வரு­கின்­றன.

அரே­பிய பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான குவைத் நிதி­யத்தின் மூலம் சலுகைக் கடன்­களை வழங்கி இலங்­கையின் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு குவைத் அர­சாங்கம் வழங்­கிய ஆத­ர­வா­னது இலங்கை மக்­களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்­து­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ளதை இங்கு குறிப்­பாக நினை­வு­கூர வேண்டும்.

குவைத்தில் பணி­பு­ரியும் 100,000 க்கும் மேற்­பட்ட இலங்­கை­யர்­க­ளுக்கு குவைத் இரண்­டா­வது தாய­க­மா­க­வுள்­ளது. இலங்­கை­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை வழங்கி அவர்­களின் நலனில் அக்­கறை கொண்­டுள்ள குவைத் அர­சாங்­கத்­திற்கு எனது நன்­றியை இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

குவைத்தின் வளர்ச்சித் திட்­டங்­க­ளுக்கு அதிக நிபு­ணர்­களை வழங்­கு­வதன் மூலம் குவைத்தின் வளர்ச்­சிக்கு பங்­கா­ளி­யாக இருக்க விரும்­பு­கிறோம்.
2020 பெப்­ர­வரி மாதம் இலங்கை வர்த்­தக சம்­மே­ள­னத்­திற்கும் குவைத் வர்த்­தக கைத்­தொழில் சம்­மே­ள­னத்­திற்­கு­மி­டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இருநாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் மேம்படுத்துவதற்காக வருகை தந்தால், அது பெரும் சாதகமான முடிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.