அவதூறு பரப்பியோரிடம் நஷ்டயீடு கோருகிறார் டாக்டர் ரயீஸ் முஸ்தபா

0 177

சமூக வலைத்­த­ளங்­களில் தனக்கு எதி­ராக அவ­தூறு பரப்­பி­யமை தொடர்பில் பிர­பல சிறுவர் வைத்­திய நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்­தபா சட்ட நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­துள்ளார்.

இது தொடர்பில் தான் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பா­வுடன் சட்ட ஆலோ­சனை நடாத்­தி­யுள்­ள­தா­கவும் டாக்டர் ரயீஸ் முஸ்­தபா விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

தன்னை அவ­ம­திக்கும் வகையில் மிக மோச­மான கருத்­துக்­களை உள்­ள­டக்கி சமூக வலைத்­த­ளங்­களில் ஓடியோ பதி­வு­களை வெளி­யிட்­ட­வர்­களை இனங்­கண்­டுள்­ள­தா­கவும் குறித்த நபர்­க­ளிடம் 100 மில்­லியன் ரூபா நஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். இவ்­வாறு பெறப்­படும் நஷ்டயீட்டுப் பணம் மாவ­னல்லை ஆயிஷா ஸித்­தீக்கா கலா­பீ­டத்தின் தப்ஸீர் ஆய்­வு­கூ­டத்­திற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னவும் டாக்டர் ரயீஸ் முஸ்­தபா தெரி­வித்தார்.

கடந்த வாரம் சாய்ந்­த­ம­ரு­தி­லுள்ள மத்­ர­சாவில் மாணவர் ஒருவர் மர­ணித்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அரபுக் கல்­லூ­ரி­களை விமர்­சிக்கும் வகையில் வட்ஸ்அப் குரல் பதி­வொன்று சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்­டது. அக் குரல் பதிவில் இவ்­வாறு அரபுக் கல்­லூ­ரி­களை விமர்­சிப்­பவர் டாக்டர் ரயீஸ் முஸ்­த­பாவே எனத் தவ­றாக அனு­மானம் கொண்ட சிலர், டாக்­டரை விமர்­சிக்கும் வகையில் கடு­மை­யாக வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்தி சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வு­களை இட்டிருந்­தனர். இந் நிலையில் இவ்­வாறு பகி­ரப்­பட்ட குரல் பதி­வா­னது டாக்டர் ரயீஸ் முஸ்­த­பா­வி­னு­டை­யது அல்ல என்றும் அது தன்­னு­டைய குரல் பதிவே என்றும் பாயிஸ் முகம்மட் என்­பவர் உரிமை கோரி­யி­ருந்தார். அத்­துடன் இதனால் டாக்டர் ரயீஸ் முஸ்­த­பா­வுக்கு ஏற்­பட்ட சங்­க­டங்­க­ளுக்கு அவர் மன்­னிப்பும் கோரி­யி­ருந்தார்.

இந் நிலை­யி­லேயே பாயிஸ் என்­ப­வரின் குரலை தனது குர­லாகக் கருதி அவ­தூறு பரப்­பி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக தான் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக டாக்டர் ரயீஸ் முஸ்­தபா தெரி­வித்தார்.

இதே­வேளை “இவ்­வாறு சமூக வலைத்­த­ளங்­களை துஷ்பிர­யோகம் செய்து சமூ­கத்தில் நற்­ப­ணி­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களை அவ­ம­திக்கும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு மறக்க முடி­யாத பாடம் புகட்­டப்­பட வேண்டும். ஆர்ப்­பாட்­ட­மில்­லாது சமூகப் பணி செய்பவர்களை இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன்” என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.