முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரம் : எம்.பி.களின் சிபாரிசுகளை உள்வாங்க தீர்மானித்தமைக்கு ஐ.நா. குழு விசனம்

0 141

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான சட்ட வரைவில் 17 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிபா­ரி­சுகளை உள்­வாங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு ஐ.நாவின் மூன்று விசேட நிபு­ணர்கள் உட்­பட மற்றும் நிபு­ணர்கள் குழு­வொன்றும் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான சட்டம் சர்­வ­தேச மனித உரி­மை­க­ளுக்கு எதி­ரா­னது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இந்­நி­பு­ணர்கள் குழு முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை 2021ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­சனைக் குழு முன்­வைத்­துள்ள சிபா­ரி­சு­க­ளுக்கு அமை­யவே அர­சாங்கம் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன் வைத்­துள்ள சிபா­ரி­சு­களில் முஸ்லிம் பெண்கள் திரு­மண பந்­தத்தில் இணைந்து கொள்­வ­தற்கு ஆண் பாது­கா­வ­லரின் அனு­மதி அவ­சியம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது முஸ்லிம் பெண்­களின் முழு­மை­யான உரி­மை­யினை மறுப்­ப­தாகும்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த ஏற்­பா­டுகள் தற்­போது தாம­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. நீதி­ய­மைச்சர் சட்டத் திருத்த மூலத்தை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன் வைத்­துள்ள சிபா­ரி­சு­களின் அடிப்­ப­டை­யிலே வரைபு செய்­வதை கவ­னத்தில் கொண்­டுள்ளார். ஐ.நாவின் விசேட நிபு­ணர்கள் குழு இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளது.

17 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சமர்ப்­பித்­துள்ள சிபா­ரி­சு­களை உள்­ள­டக்கி சட்டத் திருத்த வரைபு தயா­ரிக்­கப்­பட்டால் அது சர்­வ­தேச தரத்­துக்கு மாறா­ன­துடன் பெண்­களின் உரி­மைகள் மற்றும் பாது­காப்­பிற்கு எதி­ரா­ன­தாகும் என நிபு­ணர்கள் குழு தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பிட்ட சட்ட வரைபு பெண்கள் மற்றும் சிறு­மி­களின் உரி­மை­க­ளுக்கு எதி­ரா­ன­துடன் அது இலங்கை அரசு சர்­வ­தேச சட்­டத்தை மீறு­வ­தாகும். இந்த சிபா­ரி­சுகள் முஸ்லிம் பெண்கள் சர்­வ­தேச ரீதி­யிலும் மற்றும் யாப்பின் அடிப்­ப­டை­யிலும் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டுள்ள சம உரி­மை­களை, அதா­வது ஏனைய இலங்கைப் பிர­ஜைகள் அனு­ப­விக்கும் உரி­மை­களை பெற்றுக் கொள்­வதை தவிர்ப்­ப­தாக அமைந்­துள்­ளது.

இலங்­கையில் அனைத்து முஸ்லிம் அல்­லாத பிர­ஜை­களின் திரு­மண வய­தெல்­லை­யான 18 வய­தினை முஸ்லிம் பெண்­க­ளுக்கும் ஏற்றுக் கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 18 வய­துக்குக் குறை­வான முஸ்லிம் பெண்­களின் திரு­ம­ணத்­தையும் அனு­ம­திக்­கு­மாறு சிபா­ரிசு செய்­துள்­ளார்கள்.
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் முஸ்லிம் பெண்கள் பதவி வகிக்கக் கூடாது என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர். இதனால் ஆண்­களே முஸ்லிம் விவாக பதி­வா­ளர்­க­ளா­கவும் காதி நீதி­வான்­க­ளா­கவும் பதவி வகிக்கும் நிலை ஏற்­ப­டு­கி­றது. காதி நீதி­மன்ற முறைமை எவ்­வித மாற்­றங்­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­படக் கூடாது. அம்­மு­றைமை பேணப்­பட வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிபா­ரிசு செய்­துள்­ளனர்.

திரு­மண பதிவின் போது திரு­மண அத்­தாட்சிப் பத்­தி­ரத்தில் ‘வொலி’­யாக கையொப்­ப­மிட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். இந்தக் கையொப்பம் மண­ம­களின் விருப்­பத்­துக்­க­மைய பெற்றுக் கொள்­ளலாம். அல்­லது மணப் பெண்ணே கையொப்­ப­மிட்டுக் கொள்­ளலாம் என்­பது சட்டத் திருத்த ஆலோ­சனைக் குழுவின் சிபா­ரி­சாகும். புத்­தி­ஜீ­விகள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் அறி­வு­ரையைப் பெற்று இச்­சி­பா­ரிசு முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு விவா­க­ரத்தின் போது கைக்­கூலி மற்றும் ஏனைய திரு­ம­ணத்தின் போது வழங்­கப்­பட்ட கொடுப்­ப­ன­வுகள் திருப்பி மனை­விக்கு வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதும் சிபா­ரி­சாகும்.

விவா­க­ரத்தின் போது பிள்­ளை­க­ளுக்­கான தாப­ரிப்பு மற்றும் ஜீவ­னாம்சம் மற்றும் நஷ்­ட­ஈடு என்­பன தொடர்­பிலும் ஆலோ­சனைக் குழு சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருந்­தது. மேலும் முஸ்லிம் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளா­கவும் விவாகப் பதி­வா­ளர்­க­ளா­கவும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் ஆலோசனைக் குழு தெரிவித்திருந்தது.
சர்வதேச மனித உரிமைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் முஸ்லிம் விவாக, விவாகரத்தின் சட்டத் திருத்தங்களுக்கான சட்டமூல வரைபினை 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளுக்கமைய தயாரிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். இலங்கை சர்வதேச மனித உரிமைகளை மீறா வண்ணம் செயற்பட வேண்டுமெனவும் கோருகிறோம் எனவும் நிபுணத்துவ குழுவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.