உம்றா யாத்திரை ஏற்பாட்டிற்காக வேனில் பயணித்த 5 பேரை பலியெடுத்த கோர விபத்து!

0 318

ஏ.எம்.முஹாஜிரீன்

உம்றாக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக கடவுச் சீட்­டுக்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அநு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லியவிலி­ருந்து கொழும்­புக்குச் சென்று கடவுச் சீட்­டுக்­களைப் பெற்­றுக்­கொண்டு வீடு திரும்­பு­கையில் இடம்பெற்ற ஐவர் உயி­ரி­ழந்த துயர்­மிக்க சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றது.

தம்­புத்­தே­கம பிர­தே­சத்தில் நிகழ்ந்த இவ் வாகன விபத்தில் அந்த சிறிய ரக வானில் பய­ணித்த மூன்று சிறு­வர்கள் உள்­ளிட்ட எட்­டுப்­பேரில் மூன்று சிறு­வர்கள் மாத்­திரம் தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்­பி­யுள்ள போதிலும் அதில் ஒரு சிறுவனான செல்வன் ஸாகிப் மௌலானா (தரம் 01 , கஹட்­ட­கஸ்­தி­கி­லியா அல்­ஹுதா மு.வி. மாணவன்) தொடர்ந்தும் அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்­சை­பெற்று வரு­கின்றார். இச்­சி­று­வனின் தாயும், தந்­தையும் (அப்துல் ஹக் மெள­லானா, திரு­மதி அப்துல் ஹக் மெள­லானா (பாத்­திமா வபா), இந்த எதிர்­பா­ராத கோர விபத்தில் சிக்கி உயி­ரி­ழந்துள்ளனர்.

இவ் விபத்தில் உயிரிழந்த அப்துல் ஹக் மெள­லானா, ஆதம்­லெப்பை றபாய்தீன், நஸீம் (வான் சாரதி) திரு­மதி பாத்­திமா வபா அப்துல் ஹக் மெள­லானா, பாத்­திமா ஆபிதா உள்­ளிட்ட ஐவரின் ஜனா­ஸாக்­களும் கஹட்­ட­கஸ்­தி­கி­லியா முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­துடன் நல்­ல­டக்­கத்தில் பெருந்­தி­ர­ளான மக்கள் கலந்­து­கொண்­டனர்.
இந்த விபத்தில் உயி­ரி­ழந்த ஐவரும் ஒரே கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தோடு மிக­ நெ­ருங்­கிய உற­வி­னர்­க­ளாவர்.

இந்த விபத்தில் உயி­ரி­ழந்த ஐவரில் ஒரு­வ­ரான மர்ஹூம் அப்துல் ஹக் மௌலானாவை இப்­பி­ர­தே­சத்தில் தெரி­யா­த­வர்கள் யாரு­மில்லை. சிறி­ய­வர்கள் முதல் பெரி­ய­வர்கள் வரை அனை­வ­ருக்கும் பரி­ச்ச­ய­மா­னவர். சுய முயற்­சி­யினால் உழைத்து முன்­னேறி தொலைத்­தொ­டர்பு நிலை­ய­மொன்றை கஹட்­ட­கஸ்­தி­கி­லியா நகரில் நடாத்தி வந்­தவர். பள்­ளி­வாசல் மற்றும் பாட­சாலை ஆகி­ய­வற்­றுடன் நெருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த இவர் நீண்ட காலம் பள்­ளிப்­ப­ரி­பா­லன சபையின் பொரு­ளா­ள­ராக (மர­ணிக்கும் வரை) கட­மை­யாற்றி வந்தார். சமூக சிந்­த­னையும், தூர­நோக்கும் கொண்ட மர்ஹூம் ஹக் மௌலானா பிர­தேச கல்வி வளர்ச்­சி­யிலும், சமூக பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திலும் பாரிய பங்­க­ளிப்புச் செய்­துள்­ள­மையை இக்­கி­ராம மக்கள் சான்று பகர்­கின்­றனர்.

“ஹக் ஓர் அரி­தான ஆளுமை கொண்ட அரி­ய ­சொத்து, அதே­போன்று இந்த விபத்தில் உயி­ரி­ழந்த ஆதம் லெப்பை (றபாய்தீன்) ஒரு சிறந்த நிர்­வா­கியும் சமூக சிந்­த­னை­யா­ளரும் ஆவார். நீண்ட காலம் பள்­ளிப்­ப­ரி­பா­லன சபையின் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய இவர் நிரு­வாக சபையில் பல்­வேறு பத­வி­களை வகித்­தவர். இவர் கிராமம் பற்­றியும் இக்­கி­ராம மக்கள் பற்­றியும் ஆழ்ந்த அறி­வுள்ள ஒரு தகவல் களஞ்­சியம். இவர்கள் இரு­வரும் இக்­கி­ரா­மத்தின் முக்­கி­ய­மான இரு தூண்கள். இவர்­களின் இழப்பு இக்­கி­ரா­மத்­திற்கு மாத்­தி­ர­மல்ல இப்­பி­ர­தே­சத்­திற்கே ஈடு­செய்ய முடி­யாத ஓர் இழப்­பாகும் என கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பள்­ளிப்­ப­ரி­பா­லன சபையின் தலைவர் எம்.ஏ. இஸ்­ஸதீன் தெரி­வித்தார்.

தான் வாழு­கின்ற சமூ­கத்தின் மீது கொண்­டி­ருந்த பற்று மற்றும் கரி­சனை போன்றே இவர் தனது குடும்­பத்தின் மீதும் அளவு கடந்த அன்பும் அக்­க­றையும் கொண்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே இள வய­தி­லேயே கண­வனை இழந்த தனது சகோ­த­ரியை உம்றாக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக அழைத்துச் செல்­வ­தற்­கான அலு­வல்­களை மேற்­கொண்டார். இதன் முதற்­கட்டப் பணியே கடவுச் சீட்­டுக்­களைப் பெற்­றுக்­கொள்­வது. இந்த ஏற்­பா­டு­க­ளுடன் அவ­ரது மனை­வியும் இணைந்து கொண்டார். மர்ஹூம் ஹக் மௌலா­னாவும் ஒரு அனு­பவம் உள்ள சாரதி என்­றாலும் தூரப் பயணம் என்­பதால் உற­வி­னரும் நண்­ப­ரு­மான நஸீ­மையும் துணைக்கு அழைத்துக் கொண்­டார்கள். மர்ஹூம் நசீம் தனியார் பஸ் வண்டி ஒன்றில் பஸ் நடத்­து­ந­ராக கட­மை­யாற்­றி­யவர். இவர்­க­ளோடு உற­வி­ன­ரான ஆதம்­லெப்பை (றபாய்தீன்) இன்னும் மூன்று சிறார்­களும் என எட்­டுப்பேர் இப்­ப­ய­ணத்தில் கலந்­து­கொண்­டனர்.

புனித உம்றாக் கடமையை நிறை­வேற்­ற ­வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் எதிர்­பார்ப்பும் நிறை­வே­றப்­போ­கின்­றது என்ற ஆயிரம் ஆயிரம் கன­வு­க­ளுடன் முதற்­கட்ட ஏற்­பா­டாக கட­வுச்­சீட்டை எடுப்­ப­தற்­காக கஹட்­ட­கஸ்­தி­கி­லிய நக­ரி­லி­ருந்து கொழும்­புக்குப் புறப்­பட்ட இவர்கள் சென்ற வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் இவ்­வா­றான ஒரு­கோர விபத்­துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

ஒரு நல்ல நோக்கத்திற்காகச் சென்று திரும்புகையில் இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் இறைவன் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் அனைவரையும் மேலான சுவனத்தில் குடியிருக்கச் செய்யவேண்டுமெனவும், இந்த விபத்தில் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்ற ஸாகிப் மௌலானா விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்வோமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.