மார்க்க வழிகாட்டல்களை பேணாது ஜும்ஆ நடைபெறும் இடத்தில் பிரசங்கம் செய்யாதீர்

கதீப்மார்கள், இமாம்களிடம் உலமா சபை வேண்டுகோள்

0 223

மார்க்க வழி­காட்­டல்­களைப் பேணாது ஜும்­ஆக்கள் நடை­பெ­றக்­கூ­டிய இடங்­களில் பிர­சங்கம் செய்­வதை முற்­றிலும் தவிர்த்துக் கொள்­ளு­மாறு கதீப்­மார்கள் மற்றும் இமாம்­க­ளி­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அத்­துடன், மார்க்க ரீதி­யாக ஜும்­ஆவை நிறை­வேற்­று­வ­தற்கு அனு­ம­தி­யுள்ள இடங்­களில் ஜும்­ஆக்­களை நிறை­வேற்றிக் கொள்­ளு­மாறும் உலமா சபை பொது­மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ஜும்­ஆக்கள் தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வெளி­யிட்­டுள்ள அறி­வித்­த­லி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பொதுச் செய­லாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகி­யோ­ரினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அவ்­வ­றி­வித்­தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கொவிட் 19 காலப்­ப­கு­தியில் சில சங்­க­டங்­களின் கார­ண­மாக தற்­கா­லி­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஜும்­ஆக்கள் அச்சங்­க­டங்கள் நீங்­கி­யதன் பின்­னரும் தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­கி­றது. அவை மார்க்­கத்தின் பிர­காரம் சரி­யா­னதா என ஜம்­இய்­யாவின் அங்­கத்­த­வர்கள், மஸ்­ஜித்­களின் நிர்­வா­கிகள் மற்றும் பொது­மக்­களும் தெளிவை வேண்­டு­கின்­றனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஓரி­டத்தில் புதி­தாக ஜும்ஆ ஆரம்­பிக்கும் விட­யத்தில் மார்க்க ரீதி­யாக வழி­காட்டி வரு­கின்­றது.
ஓர் ஊரில் ஒரு ஜும்ஆவை நிறை­வேற்­று­வதே அடிப்­ப­டை­யாகும். எனினும், நிர்ப்­பந்­த­மான சூழ்­நி­லை­களில் மார்க்க வழி­காட்­டல்­களைக் கவ­னத்­திற்­கொண்டு பிறி­தொரு ஜும்­ஆவை நடாத்­து­வ­தற்கு அனு­ம­தி­யுள்­ளது.

அந்­த­வ­கையில் ஜம்­இய்யா அன்­று­தொட்டு இன்று வரைக்கும் ஜும்ஆ விட­ய­மாக மார்க்க ரீதி­யாக வழி­காட்­டலைக் கோரும்­பட்­சத்தில் குறித்த மஸ்­ஜி­துக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் ஃபத்வாக் குழு நேர­டி­யாக விஜயம் செய்து ஆய்­வுகள் மேற்­கொண்­டதன் பின்­னரே மார்க்க வழி­காட்டல் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

ஓர் இடத்தில் மார்க்க வழி­காட்­டல்­களை பேணாது ஜும்ஆ நடை­பெ­று­மாயின் அந்த ஜும்ஆ செல்­லு­ப­டி­யற்­ற­தா­கவே ஆகி­விடும். அத்­துடன் அந்த ஜும்­ஆ­விலே கலந்து கொள்­ளக்­கூ­டிய மக்­க­ளது ஜும்ஆ­வுக்கு யாரெல்லாம் அதை நடாத்­து­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தார்­களோ, இருக்­கின்­றார்­களோ அவர்­களே அதற்குப் பொறுப்பும் கூற வேண்டும்.

அத்­துடன் குத்பாப் பிர­சங்கம் நடாத்­தக்­கூ­டிய கதீப்­மார்கள் மற்றும் இமாம்கள் மார்க்க வழ­காட்­டல்­களைப் பேணாது ஜும்ஆக்கள் நடை­பெ­றக்­கூ­டிய இடங்­களில் பிர­சங்கம் செய்­வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

எனவே, பொதுமக்கள் மார்க்க ரீதியாக ஜும்ஆவை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ள இடங்களில் உங்களது ஜும்ஆக்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.