பலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கையர்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

0 127

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

கொடூ­ர­மான, கொலை­கார, காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகும் பாலஸ்­தீன மக்­க­ளுடன் ஒட்­டு­மொத்த இலங்கை மக்­களும் ஒன்­று­பட்டு நிற்­பார்கள் என்­பதை இந்த உயர்ந்த சபையில் மிகத் தெளி­வாக அறி­வித்துக் கொள்­கின்றோம். இந்தக் கொடூ­ர­மான கொலைக் கலாச்­சா­ரத்தை நிறுத்தி, பேச்­சு­வார்த்தை மேசைக்கு வந்து சகோ­த­ரத்­து­வத்­து­டனும், நல்­லி­ணக்­கத்­து­டனும், ஒற்­று­மை­யு­டனும் இப்­பி­ரச்­சி­னையை தீர்க்க இஸ்­ரேலை கேட்­டுக்­கொள்­கிறோம் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யைாற்­று­கையில், பாலஸ்­தீன மக்­க­ளுக்கும் இஸ்ரேல் மக்­க­ளுக்கும் சரி­யான முடி­வு­களை சர்­வ­தேச சமூ­கத்தின் தலை­வர்கள் என்று அழைக்­கப்­ப­டு­ப­வர்கள் எடுக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

எந்த விலை கொடுத்­தா­வ­து ­பெற்றுக் கொள்ளும் அமைதி மற்றும் பாலஸ்­தீன மக்­களின் படு­கொ­லைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்து, இஸ்­ரேலும் பாலஸ்­தீனும் ஒன்­றுக்­கொன்று இணக்­க­மாகச் செயல்­ப­டு­வதை உறு­தி­செய்யும் அமைதி எமக்குத் தேவை. நாங்கள் அமை­தியை விரும்­பு­கிறோம் என்­ப­துடன் பாலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கவும் வேண்டும். அவர்களின் தேசியம், அரச நிருவாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.