ஹஜ் ஏற்பாடுகள் குறித்து முறைப்பாடளிக்க முடியும்

திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு

0 189

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட இலங்கை யாத்திரிகர்கள் யாத்­திரை தொடர்­பான முறை­பா­டுகள் இருப்பின் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு, எழுத்து மூலமோ, மின்­னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைசல் ‘விடி­வெள்­ளிக்’குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் பகி­ரங்க அறி­வித்தல் விடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் கூறினார். மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில் சவூதி அரே­பியா மினாவில் இடம் பெற்ற அசெளகரியங்களைத் தவிர வேறு சம்­ப­வங்­களை இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­கொள்­ள­வில்லை. மொத்­தத்தில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயணம் சிறப்­பாக நிறை­வே­றி­யது.

மினாவில் இடம் பெற்ற அசெளகரியங்களை இலங்கை யாத்­தி­ரி­கர்கள் மாத்­திரம் எதிர்­கொள்­ள­வில்லை. பங்­களா தேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்­தோ­னே­சியா போன்ற நாடு­களின் யாத்­தி­ரி­கர்­களும் எதிர்­கொண்­டனர்.

இதே­வேளை இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட யாத்­தி­ரிகள் மொத்­த­மாக நான்கு பேர் சவூ­தியில் வபாத்­தா­கி­யுள்­ளனர். ஒருவர் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை வபாத்­தா­கி­யுள்ளார். நால்­வரில் ஒருவர் வீதி­வி­பத்தில் வபாத்­தா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது என்றும் தெரி­வித்தார்.

மேலும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து ஹஜ் முக­வர்கள், யாத்­திரை, மற்றும் ஒப்­பந்­தங்கள் மீறப்­பட்­டமை தொடர்­பாக கிடைக்­கப்­பெறும் முறை­பா­டுகள் சுயா­தீன குழு­வொன்றின் மூலம் ஆரா­யப்­பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.