உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்த சுவீடன் “குர்ஆன் எரிப்பு’ சம்பவம்!

0 311

ஏ.ஆர்.ஏ.பரீல்

உலக முஸ்­லிம்கள் தியாகத் திரு­நா­ளான ஹஜ் பெரு­நாளைக் கொண்­டா­டிக் ­கொண்­டி­ருந்த வேளையில் சுவீ­டனில், முஸ்­லிம்கள் தங்­க­ளது உயி­ரிலும் மேலாகக் கருதும் புனித குர்ஆன் பகி­ரங்­க­மாக எரி­யூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி புதன் கிழமை சுவீ­டனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு முன்னால் இந்த அவ­ம­திப்பு அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.
சுவீடன் பொலி­ஸாரின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தின்­போதே உலக முஸ்­லிம்­களை கொதித்தெழச் செய்த இந்த உணர்வு மேலிட்ட சம்­பவம் இடம் பெற்­றி­ருக்­கி­றது. பல வரு­டங்­க­ளுக்கு முன்பு சுவீ­டனை வந்­த­டைந்­தி­ருந்த சல்வான் மொமிகா என்ற 37 வய­தான ஈராக்­கிய பிர­ஜையே புனித குர்ஆன் பக்­கங்­களை தீயிட்டுக் கொழுத்­தி­யுள்ளார்.

முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக பெரும்­பா­லான நாடுகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடு­க­ளி­லி­ருக்கும் சுவீடன் தூது­வர்­களை அழைத்து சுவீடன் மீதான தங்கள் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் இஸ்­லாத்­துக்கு எதி­ரான செயற்­பாட்­டினை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன. மதத்­தினை நிந்­தனை செய்யும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் கோரி­யுள்­ளன.

இதே­வேளை இலங்கை அர­சாங்­கமும் இச்­செ­யலை எதிர்த்து கண்­டன அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

குர்ஆன் எரிப்பு விவ­காரம் தொடர்பில் ஐ.நா.வின் மனித உரிமை பேர­வையில் ஆரா­யப்­ப­ட­வேண்­டு­மென பாக்­கிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையையடுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவரச கூட்டமொன்றினை நடாத்தியுள்ளது.

இலங்கை அர­சு கண்­ட­னம்
சுவீ­ட­னி­ல் அல்குர்ஆன் தீயிட்டு எரிக்­கப்­பட்­ட­மையை இலங்கை அர­சாங்கம் வன்­மை­யாக கண்­டிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

‘கருத்து சுதந்­திரம் ஏனை­ய­வர்­களின் உரி­மை­களை மதிக்கும் வகையில் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். கருத்தச் சுதந்­திரம் ஏனைய மதங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை உரு­வாக்­குவ­தற்கும், வெறுப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. தேசிய மற்றும் சர்­வ­தேச அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்தின் நலன் கருதி சமூ­கங்­க­ளுக்­கி­டையே மத சகிப்­புத்­தன்­மையை ஏற்­ப­டுத்தி வெறுப்பு செயல்­களைத் தடுப்­ப­தற்கு அனைத்து நாடு­களும், தனி­ந­பர்­களும் கட­மைப்­பட்­டுள்­ளார்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்இய்­யத்துல்
உலமா சபை
அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை இந்த இழி­வான வெறுக்­கத்­தக்க செயலை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. சுவீடன் அர­சாங்கம் புனித குர்­ஆனை எரி­யூட்­டிய நப­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும். இவ்­வா­றான செயல்கள் சமூ­கங்­களின் மத்­தியில் சமா­தா­னத்­துக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தி ஒற்­று­மையை இல்­லாமற் செய்யும் என்­பதால் சட்டம் கடு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அகில இங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷெய்க் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கோரிக்கை விடுத்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ஈதுல் அழ்ஹா தினத்தில் தனி­நபர் ஒருவர் புனித அல்­குர்­ஆனின் புனி­தத்­தன்­மையைக் கெடுக்கும் விதத்தில் ஸ்டொக் ஹோம் பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே புனித குர் ஆனின் பக்­கங்­களை எரி­யூட்­டி­யுள்ளார். இந்தச் செயல் இலங்கை முஸ்­லிம்கள் உட்­பட உலக முஸ்லிம்கள் மத்­தியில் பெரும் சோகத்தை தோற்­று­வித்­துள்­ளது.

அதே­வேளை இந்தச் செயலை இலங்கை அர­சாங்கம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. இதற்காக இலங்கை அர­சாங்­கத்­துக்கு எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம். அத்­தோடு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­றுமை நில­வு­வ­தற்­காக இவ்­வா­றான சமய வெறுப்பு செயல்­களைத் தவிர்க்­கு­மாறு அனைத்து நாடு­க­ளையும், தனி­ந­பர்­க­ளையும் வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

சூபி தரீக்­காக்­களின் உயர்பீடம்
கண்­ட­னம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்ட சம்­பவம் வெறுப்­பினை வெளித்­தள்­ளிய இஸ்­லாத்­துக்கு எதி­ரான சிலரின் விஷத்­தன்­மை­யான நட­வ­டிக்­கை­யாகும். சுவீ­டனின் கருத்துச் சுதந்­திரம் என்ற பெயரில் குர்ஆன் எரிக்­கப்­பட்­டமை அந்­நாட்டின் மீது வெறுப்­பி­னையும், கோபத்­தி­னையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இச்­சம்­ப­வத்தை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம் என சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இன்­றைய நாக­ரீக உலகில் சுவீடன் நாட்­டி­னது இந்த வெறுப்­பான செயற்­பாட்டை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். சுவீ­டனின் பெரும்­பான்­மை­யான மக்கள் சமா­தான சக­வாழ்­வினை விரும்­பு­ப­வர்கள். இவ்­வா­றான செயற்­பாடு இடம்­பெற்­றி­ருக்கக் கூடாது. இவ்­வா­றான இஸ்­லாத்­துக்கு எதி­ரான சம்­ப­வங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். சுவீடன் மக்கள் மத சுதந்­தி­ரத்­துக்கு எதி­ரான இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளை உணர்வுபூர்­வ­மாக எதிர்த்து குரல் கொடுக்­க­வேண்டும். இத்­த­கைய சம்­ப­வங்கள் நாடு முழு­வதும் பிரச்­சி­னை­களைத் தோற்­று­விக்­கலாம்.
குர்ஆன் முஸ்­லிம்­களால் பய­பக்­தி­யுடன் புனி­த­மாக கரு­தப்­படும் நூலாகும். குர்ஆன் கரு­ணை­யையும் அன்­பி­னையும் போதிக்­கி­றது.

சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் சுவீ­ட­னி­லுள்ள இன­வாதிகளால் கருத்துச் சுதந்­திரம் என்ற பெயரில் இஸ்­லாத்­துக்­கெ­தி­ராக மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­ப­திக்கு கடி­தம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரான இலங்கை அர­சாங்­கத்தின் வலு­வான கண்­டன அறிக்­கையை இலங்கை மற்றும் உலக முஸ்லிம் சமூகம் பாராட்டி வர­வேற்­கி­றது. புனித குர்ஆன் அவ­ம­திக்­கப்­பட்­ட­போது இந்­திய பெருங்­க­டலில் உள்ள ஒரு சிறிய தீவான இலங்கை உல­கெங்­கிலும் உள்ள முஸ்­லிம்­க­ளுடன் தனது ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்­பதை உல­கிற்கு நிரூ­பித்­த­தற்கு நன்­றிகள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

சுவீ­டனில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக இலங்கை அர­சாங்கம் கண்­டன அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது. குறிப்­பிட்ட கண்­டன அறிக்­கையை வர­வேற்று நன்றி தெரி­விக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் உதவித் தலைவர் ஹில்மி அஹமட் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது; சுவீ­டனில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்ட விவ­காரம் கடந்த நாட்­களில் பல முஸ்லிம் நாடு­களில் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. உலகம் முழு­வதும் சுவீடன் அதி­கா­ரி­க­ளுக்கு பர­வ­லாக கண்­ட­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி புதன்­கி­ழமை சுவீடன் ஸ்டொக் ஹோமில் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு வெளியில் இரு­ ந­பர்கள் புனித குர்ஆன் பாகங்­களைக் கிழித்து பள்­ளி­வா­ச­லுக்கு வெளியில் எரித்­தனர். ஈத் அல் அழ்­ஹாவின் முக்­கி­ய­மான இஸ்­லா­மிய விடு­மு­றை­யின்­போது இஸ்­லா­மிய புனித நூலான குர்ஆன் எரிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில், பல நாடு­களில் வாழும் முஸ்­லிம்கள் இதனால் ஆத்­தி­ர­முற்­றனர். வேத­னைப்­பட்­டனர். குர்ஆன் அல்­லாஹ்வின் நேரடி வார்த்­தைகள் என்று முஸ்­லிம்­களால் நம்­பப்­ப­டு­கி­றது. அத்­தோடு இவ்­வாறு வேண்­டு­மென்றே குர்­ஆனை எரித்­து அவ­ம­திப்­பது தெய்வ நிந்­த­னை­யாகும். மாறாக குர்­ஆனை மதிப்­பது இஸ்­லாத்தின் மத நம்­பிக்­கையின் ஒரு முக்­கிய அங்­க­மாகும். உல­கெங்­கி­லு­முள்ள இஸ்­லா­மிய வெறுப்­பா­ளர்கள் கருத்துச் சுதந்­திரம் என்ற போர்­வையில் இஸ்­லாத்­தையும் புனித குர்­ஆ­னையும் தமது அன்­புக்­கு­ரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் தொடர்ந்து அவ­ம­தித்து வரு­கி­றார்கள். இது ஐக்­கிய நாடு­களின் சாச­னத்தில் அடங்­கி­யுள்ள கருத்துச் சுதந்­தி­ரத்தின் ஜன­நா­யக கோட்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­னது.

அந்­தந்த நாடு­களின் அனைத்து பிர­ஜை­க­ளுக்கும் உள்ள உரி­மையைப் போலவே முஸ்­லிம்­களின் உரிமைகளையும், அவர்களின் நம்பிக்­கையை கண்­ணி­யத்­துடன் கடைப்­பி­டிப்­ப­தற்­கான சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வது ஒவ்­வொரு அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

பல முஸ்லிம் நாடுகள் தங்கள் நாட்­டி­லுள்ள சுவீடன் தூது­வர்­களை வர­வ­ழைத்து, மதங்­க­ளையும், மதத்­த­லை­வர்­க­ளையும் அவ­ம­திப்­பதை அனு­ம­திக்கும் சுவீடன் அர­சாங்­கத்­தி­னது நிலைப்­பாட்­டுக்கு எதி­ராக தமது கோபத்­தையும் ஏமாற்­றத்­தையும் கண்­ட­னத்­தையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. கருத்துச் சுதந்­தி­ரத்­துக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்தும் சுவீடன் நீதி­மன்றம் எரிக்கும் போராட்­டக்­கா­ரர்கள் எவ­ரையும் அனு­ம­திக்­க­வில்லை. இந்­நி­லையில் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­வர்கள் மீது சுவீடன் நீதி கட்டமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் இன்னும் அறியவில்லை.
இரண்டு இஸ்லாமிய வெறுப்பாளர்கள் புனித குர்ஆனை அவமதித்தபோது, இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவான இலங்கை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்ததற்கு எமது நன்றிகள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சவூதி அரே­பியா கண்­டனம்
சுவீடன் ஸ்டொக்ஹோம் மத்­திய பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­ன­வ­ரொ­ருவர் புனித குர்­ஆனை எரித்­த­மைக்கு சவூதி அரே­பியா தனது பலத்த கண்­ட­னத்­தையும் அதி­ருப்­தி­யையும் வெளி­யிட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் சுவீடன் நாட்டின் தூது­வரை அழைத்து மத நிந்­த­னை­யான இச்­செ­யலை கண்­டிப்­பதா­கவும், நிரா­க­ரிப்­ப­தா­கவும் தெரி­வித்தார். இவ்­வா­றான மதத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­மா­னப்­ப­டுத்தும் செயல்கள் நிறுத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொண்டார்.

அத்­தோடு சகிப்புத் தன்மை, மித­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்தை நிரா­க­ரித்தல் என்­ப­வற்­றுக்­காக மேற்­கொள்­ளப்­படும் சர்­வ­தேச முயற்­சி­க­ளுக்கு நேர­டி­யாக முரண்­படும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் சுவீடன் அரசு உட­ன­டி­யாக நிறுத்திக் கொள்ள வேண்­டு­மெ­னவும் சவூதி வெளி­வி­வ­கார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்­ளார்.

பாப்­ப­ரசர் கண்­டனம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்­கப்­பட்டு அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டமை தன்னை சினமும், வெறுப்பும் அடையச் செய்­துள்­ள­தாக பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தெரி­வித்துள்­ளார்.
பேச்சுச் சுதந்­தி­ரத்தைக் காரணம் காட்டி குறிப்­பிட்ட சம்­ப­வத்­திற்கு அனு­மதி வழங்­கி­யதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் உல­கெங்­கு­முள்ள கத்­தோ­லிக்­கர்­களின் தலை­வ­ரான பாப்­ப­ரசர் கூறி­யுள்ளார்.

கத்­தோ­லிக்­கர்­களின் தலை­வ­ரான பாப்­ப­ர­சரின் கண்­ட­னத்தை பல முஸ்லிம் நாடுகள் வர­வேற்­றுள்­ளன.

குர்ஆனை எரித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக கருதும் புனித குர்ஆனை எரித்த இனவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சுவீடன் அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இதுவே உலக முஸ்லிம்களினதும் மதங்களுக்கிடையில் நல்லுறவை பேணுபவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.