மதீனா வீதி விபத்தில் இலங்கை ஹஜ் முகவரொருவர் உயிரிழப்பு

2023 ஹஜ் யாத்திரையில் இதுவரை மூன்று இலங்கையர்கள் மரணமாகியுள்ளனர்

0 188

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரைக்­காக இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு யாத்­தி­ரி­கர்­களை அழைத்­துச்­சென்ற ஹஜ் முகவர் ஒருவர் மதீ­னாவில் வீதி விபத்தில் சிக்கி வபாத்­தா­கி­யுள்ளார்.

இவ்­வாறு வீதி­ வி­பத்தில் வபாத்­தா­னவர் பிஸ்­மில்லாஹ் ட்ரவல்ஸ் உரி­மை­யாளரான சிஹாப்தீன் என்­ப­வ­ராவார்.

இவர் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை வபாத்­தா­ன­தாக ஜித்­தா­வி­லுள்ள இலங்­கையின் கொன்சியு­லர் ஜெனரல் காரி­யா­லயம் உறுதி செய்­துள்­ளது.
சிஹாப்தீன் கடந்த திங்­கட்­கி­ழமை வீதி விபத்­துக்­குள்­ளானார். அவர் உட­ன­டி­யாக மதீனா மிர்காத் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இந்­நி­லையில் அவர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை வபாத்­தானார் என ஜித்­தா­வி­லுள்ள இலங்­கையின் கொன்சியு­லர் ஜெனரல் பலாஹ் ஹிப்ஸி மெள­லானா தெரி­வித்தார்.

ஜனாஸா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து எடுத்­து­வ­ரப்­பட்டு ஜென்­னத்துல் பக்கி மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

சிஹாப்தீன் கொழும்பு ஹமீ­தியா, அல்­ஹு­சைனி கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட 3500 பேர்­களில் சிஹாப்­தீனின் மரணம் மூன்­றா­வ­தாகும். ஏனைய இரு மர­ணங்­களும் இரு­தய நோய் கார­ண­மாக நிகழ்ந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

நேற்று முன்­தினம் மக்­கா­வி­லி­ருந்து ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஸீனத் சப்ரா செய்யத் அலி என்ற பெண் மாரடைப்பினால் காலமானார்.

இவரது ஜனாஸா நேற்றுமுன்தினம் மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.