பொன்­விழாக் காணும் ஜாமிஆ நளீ­மிய்யா

0 267

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்,
ஜாமிஆ நளீமிய்யா.

பேரு­வ­லையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்­து­வைக்­கப்­பட்ட ஜாமிஆ நளீ­மிய்யா இவ்­வ­ருடம் அதன் பொன்­வி­ழாவைக் கொண்­டா­டு­கி­றது. இந்தக் கலா­நி­லையம் நாட­றிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்­க­ளது சிந்­த­னையில் கரு­வுற்று அக்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்த மிக முக்­கி­ய­மான புத்­தி­ஜீ­வி­க­ளதும் சமூக ஆர்­வ­லர்­க­ளதும் ஆலோ­ச­னைகள், வழி­காட்­டு­தல்­களின் அடி­யாக உருப்­பெற்­றது.

நளீ­மிய்­யாவின் கல்விசார் இலக்­குகள், கல்வித் திட்டம், பாடப்­ப­ரப்பு என்­பன சிறந்த கல்விப் புலமும், அறி­வார்ந்த அணு­கு­மு­றையும், பரந்த நோக்கும், ஆன்­மீ­க–­பண்­பாட்டுப் பயிற்­சியும் கொண்ட அறிஞர் பரம்­ப­ரை­யொன்றை உரு­வாக்கும் நோக்கைக் கொண்­ட­வை­யாகும். நளீ­மிய்­யாவில் கற்­ற­வர்கள் அரபு, ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் ஆகிய மொழி­ய­றிவைக் கொண்­டி­ருப்­ப­துடன் பாரம்­ப­ரிய இஸ்­லா­மிய கலா­ஞா­னங்­க­ளோடு நவீன சிந்­தனைப் போக்­கு­க­ளையும் இந்த நாட்டின் பொதுக் கலைத் திட்­டத்­தையும் கற்­றி­ருக்­கின்­றனர். இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பணியில் தம்­மா­லான எல்லா முயற்­சி­களை தாம் வகிக்கும் அரச மற்றும் தனியார் பத­விகள் ஊடாக அவர்கள் செய்து வரு­கி­றார்கள்.

கற்­கை­நெ­றியின் இரு கட்­டங்கள்
நளீ­மிய்­யாவின் கற்கை நெறி ஏழு வரு­டங்­களைக் கொண்­ட­தாகும்.
முதல் மூன்று வரு­டங்­களைக் கொண்ட அடிப்­படை கற்­கைகள் பிரிவில் அற­பு­மொழி, அரபு இலக்­கணம், தர்­பியா,ஃபிக்ஹுஸ் ஸுலூக், தஜ்வீத் சட்­டங்கள், குர்ஆன் மனனம்,தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மொழிப் பாடங்­க­ளுடன் க.பொ.த. உயர்­தர (கலைப்) பிரி­வுக்­கான பாடங்­களும் கற்­பிக்­கப்­பட்டு உயர் தரப் பரீட்­சைக்கு மாண­வர்கள் தோற்­று­கின்­றனர்.

இஸ்­லா­மியக் கற்­கைகள் பீடம் நான்கு வரு­டங்­களைக் கொண்­டது. இப்­பி­ரிவில் மாண­வர்­க­ளுக்கு குர்ஆன், ஸுன்னா விளக்­கங்­களும் அவற்­றோடு தொடர்­பான கலை­களும், இபாதாத், குடும்பம், வியா­பாரம், நீதித் துறை, பாகப் பிரி­வினை என்­ப­வற்­றோடு தொடர்­பான இஸ்­லா­மிய சட்­டங்­களும் (ஃபிக்ஹ்), அகீதா, முஸ்­லிம்கள் இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழ்­வதால் இலங்­கையின் பன்­ம­த ,பல்­லின கலா­சாரச் சூழ­மைவை கவ­னத்திற் கொண்டு சமா­தான கற்­கைகள், இஸ்­லா­மிய வங்­கி­யியல், சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான வாழ்­வொ­ழுங்கு, பிர­தான மதங்கள், அவற்றின் ஒப்­பீட்­டாய்வு போன்ற பாடங்­களும் தர்க்­க­வியல், சமூ­க­வியல், இஸ்­லா­மிய உலகின் சிந்­தனைப் பாங்­குகள், தஸவ்வுப், இல்முல் கலாம், தத்­துவம், ஸீரா, இஸ்­லா­மிய வர­லாறு என்­ப­னவும், தகவல் தொழில்­நுட்­பத்­தோடு தொடர்­பான பாடங்­களும் ஆங்­கிலம், அறபு, சிங்­களம் போன்ற மொழி­களும் போதிக்­கப்­ப­டு­கின்­றன. ஆய்­வா­ளர்­க­ளுக்கு அவ­சி­ய­மான மென்­திறன் (Soft skills)பயிற்­சி­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற பல்­க­லைக்­க­ழ­க­மொன்றின் பட்டப் படிப்பை வெளி­வா­ரி­யாக மேற்­கொள்­வ­தற்கு மாண­வர்கள் இக்­கா­லப்­பி­ரிவில் தயார்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு இதற்­கான ஊக்­கு­விப்பும் வழி­காட்­டல்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதனால், நளீ­மிய்­யாவின் பட்­ட­தா­ரி­க­ளாக வெளி­யே­று­ப­வர்கள் ஏக காலத்தில் அதன் உள்­ளகக் கற்கை நெறி­யையும், வெளி­வாரிப் பட்டப் படிப்­பையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெறு­கின்­றனர்.

மாண­வர்­க­ளது எழுத்து, பேச்­சாற்றல், மென் திறன்கள், மொழி, விளை­யாட்டுத் திறன்கள் போன்­ற­வற்றை விருத்தி செய்யும் நோக்­குடன் ஜாமி­ஆவின் ‘வெளிக்­களப் பிரிவு’ இயங்கி வரு­கி­றது. ‘றாபிதா கல­மிய்யா’ என்ற பெயரில் வாரா­வாரம் இயங்கும் சுவ­ரொட்டிப் பத்­திரிகை மூலம் மாண­வர்கள் தமது எழுத்­தாற்­றல்­களை வளர்க்­கின்­றனர். அத்­துடன் காலம் வேண்டி நிற்கும் பல கருப்­பொ­ருள்­களில் விஷேட கருத்­த­ரங்­கு­களும் பயிற்சிப் பட்­ட­றை­களும் ஒழுங்கு செய்­யப்­ப­டு­கின்­றன.

முக்­கிய பிரி­வுகள்
ஜாமி­ஆவின் நூலகம் ஆங்­கிலம், தமிழ், சிங்­களம், அரபு ஆகிய மொழி­களில் சுமார் 50,000 நூல்­க­ளையும், சஞ்­சி­கைகள், பத்­தி­ரி­கைகள் ஆய்­வ­றிக்­கைகள் என்­ப­வற்­றையும் கொண்­டி­ருக்­கி­றது. அது விரி­வு­ரை­யா­ளர்­க­ளதும் மாண­வர்­க­ளதும் அறி­வையும், ஆராய்ச்சித் திறன்­க­ளையும் வளர்ப்­ப­தற்­காக பெரிதும் துணை­யாக அமைந்­துள்­ளது. நவீன பாணி­யி­லான உத்­தி­களைப் பயன்­ப­டுத்தி மாண­வர்­க­ளுக்கு மொழியை திறம்­பட கற்­பிப்­ப­தற்­காக அறபு மொழி ஆய்வு கூடத்தை (Language Lab) உள்­ள­டக்­கிய அறபு மொழி நிறு­வ­னமும் உள்­ளது. மாண­வர்­க­ளது கணினி மற்றும் தொழில்­நுட்பத் துறை­யி­லான அறி­வு­களை விருத்தி செய்­வதில் தகவல் தொழில்­நுட்ப பிரிவு செயற்­பட்டு வரு­கி­றது.

அபி­வி­ருத்தி, ஆய்வு மற்றும் ஆராய்ச்­சிக்கும் பயிற்­சிக்­கு­மான நிறு­வனம் (ADRT) சமூ­கத்தின் பல துறை சார்ந்­த­வர்­களை பயிற்­று­விப்­ப­தற்­காக இயங்கும் அதே வேளை, நளீ­மிய்யா இஸ்­லா­மிய வெளி­யீட்டுப் பணி­யகம் இது­வ­ரையில் ஆய்வு சஞ்­சி­கை­யான ‘இஸ்­லா­மிய சிந்­தனை’ யின் 156 இதழ்­க­ளையும் பல நூல்­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளது.
இஸ்­லாத்தின் சமா­தானத் தூதை எமது நாட்­டுக்கு சிறந்த முறையில் எடுத்­துக்­கூ­று­வ­துடன் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கும் இடையில் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தான சக­வாழ்­வையும் கட்டி எழுப்பும் நோக்­கோடு அண்­மையில் Salam Center உரு­வாக்­கப்­பட்­டது.

நாட்டில் உள்ள உயர் கல்வி நிறு­வ­னங்­களில் மீள்­நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதை இலக்­காக கொண்டு இலங்கை அர­சாங்­கத்தால் தெரிவு செய்­யப்­பட்ட 7 பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஜாமி­ஆவும் ஒன்­றாகும். அந்த வகையில், தேசிய ஐக்­கி­யத்­துக்கும் மீள்­நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான முன்­மா­திரி பீடம் (Model Faculty National Unity and Reconciliation) 2018 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

உட்­கட்­ட­மைப்பு
ஜாமிஆ சிறந்த உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளையும் மாண­வர்­க­ளது உடல், உள ஆரோக்­கி­யத்தை கருதிக் கொண்ட ஏற்­பா­டு­க­ளையும் ரம்­ய­மான, கவர்ச்­சி­யான, பசு­மை­யான, அமை­தி­யான, சந்­த­டி­க­ளற்ற சூழ­லையும் கொண்­டி­ருக்­கி­றது. வளா­கத்தின் கட்­ட­டங்கள் இஸ்­லா­மிய கட்­ட­டக்­கலைப் பாரம்­ப­ரி­யத்தை பறை­சாற்றி நிற்­கின்­றன. மொத்­தத்தில் வளாகம் அறி­வுச்­சூ­ழ­லுக்­கென்றே மிகவும் திட்­ட­மி­டப்­பட்டு அழ­கிய முறையில் அமைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சர்­வ­தேச அங்­கீ­காரம்
ஜாமிஆ வெளி­நா­டு­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்கள், ஆய்வு நிறு­வ­னங்கள், மனி­த­வள விருத்­திக்­காக இயங்கும் பல அமைப்­பு­க­ளோடு நீண்ட கால­மாக நெருக்­க­மான உறவைக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த நிறு­வ­னங்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருந்தும், தனிப்­பட்ட ரீதி­யிலும் பல முக்­கி­யஸ்­தர்­களும் கல்­வி­மான்­களும் அவ்­வப்­போது ஜாமி­ஆ­வுக்கு வருகை தந்­தி­ருக்­கி­றார்கள்.

ஜாமி­ஆவின் பட்டச் சான்­றிதழ் சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்கள் பல­வற்றில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இஸ்­லா­மிய உலகின் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளது ஒன்­றி­யத்தில்(FUIW) ஜாமிஆ அங்­கத்­துவம் வகிப்­ப­துடன் சில சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளோடு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. அந்த வகையில் சர்­வ­தேச தொடர்­பு­களை ஜாமிஆ பெற்­றி­ருப்­ப­தா­னது அதன் சர்­வ­தேச தரத்­திற்­கான முக்­கிய சான்­றாகும்.

சாத­னைகள்
கடந்த 50 வருட காலத்தில் மகத்­தான வளர்ச்­சியைக் கண்டு இலங்கை முஸ்­லிம்­களின் ஓர் உயர் பல்­க­லைக்­க­ழகம் என கரு­தப்­ப­டு­ம­ள­வுக்கு சிறப்­புற்று விளங்கும் நளீ­மிய்­யா­ அதன் அரை நூற்­றாண்டு வர­லாற்றில் கணி­ச­மான அளவு சாத­னை­களை ஈட்­டி­யி­ருக்­கி­றது. இஸ்­லா­மிய ஆய்வுத் துறை­யிலும் கற்றல், கற்­பித்தல் துறை­யிலும் இஸ்­லாத்தை முன்­வைக்கும் பணி­யிலும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு அறிவுத் தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­திலும் நளீ­மிய்யா பட்­ட­தா­ரிகள் முன்­னணி வகிக்­கி­றார்கள்.

 

கொடை வள்ளல் மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம்

இது­வரை ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் நளீ­மிய்­யாவின் கற்­கை­நெ­றியை முழு­மை­யாகப் பூர­ணப்­ப­டுத்­தி­யுள்­ளனர். மலே­சியா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, யெமன், ஸஊதி அரே­பியா, சூடான், இங்­கி­லாந்து, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட வேறு பல நாடு­க­ளி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமது உயர்­கல்­வியை தொடர்ந்­த­வர்­களில் கணி­ச­மான தொகை­யினர் கலா­நிதி பட்­டங்­களை பெற்­றி­ருப்­ப­துடன் இன்னும் பலர் அதற்­காக தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். M.Phil. M.A. Bachelor Degree, Diploma சான்­றி­தழ்­க­ளையும் பலர் பெற்­றுள்­ளார்கள். மலே­சி­யாவின் மலாயா பல்­க­லைக்­க­ழகம், இஸ்­லா­மிய கலை­க­ளுக்­கான பல்­க­லைக்­க­ழகம், சர்­வ­தேச இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம், பாகிஸ்­தானின் சர்­வ­தேச இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம், தாய்­லாந்து இள­வ­ரசர் சோங்க்லா பல்­க­லைக்­க­ழ­கத்தின் பட்­டாணி வளாகம், புரூனை தாருஸ் ஸலாம் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஐக்­கிய இராச்­சி­யத்தின் மார்க் ஃபீல்ட் கலா­நி­லையம் போன்ற தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் துறைத் தலை­வர்­க­ளாக, விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக ஆய்­வா­ளர்­க­ளாக பல நளீ­மீக்கள் பணி­யாற்­றி­யுள்­ளனர்; தற்­போதும் பலர் பணி­யாற்றி வரு­கின்­றனர். மேலும் சிலர் பேரா­சி­ரி­யர்­க­ளா­கவும் உள்­ளனர்.

நளீ­மிய்யா பட்­ட­தா­ரி­களுள் பலர் SLEAS (இலங்கை கல்வி நிர்­வாக சேவைப்) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து கல்விப் பணிப்­பாளர், வலயக் கல்விப் பணிப்­பாளர், உதவிக் கல்விப் பணிப்­பாளர் போன்ற பத­வி­களை வகிக்­கின்­றனர். தேசிய கல்வி நிறு­வ­னத்தில் பாட­சாலைப் பாடங்­க­ளுக்­கான கலைத்­திட்­டத்தை உரு­வாக்­குதல், அதற்­கான பாடப் புத்­த­கங்­களை எழு­துதல், ஆசி­ரியர் கைநூல்­களைத் தயா­ரித்தல், ஆசி­ரியர் பயிற்­சி­களை வழங்­குதல் என பல­த­ரப்­பட்ட வேலைத்­திட்­டங்­க­ளுடன் தம்மை இறுக்­க­மாக சம்­பந்­தப்­ப­டு­தி­யுள்­ளார்கள். நூற்றுக் கணக்­கா­ன­வர்கள் பாட­சா­லை­களில் அதி­பர்­க­ளாக, பிரதி அதி­பர்­க­ளாக, பகுதிப் பொறுப்­பா­ளர்கள் சேவை­யாற்­று­கின்­றனர்.

இலங்­கையின் நிரு­வாக சேவைப் பரீட்சை (SLAS)யில் இது­வரை பலர் சித்­தி­ய­டைந்து அமைச்­சு­களில் செய­லாளர்,மேல­திக செய­லாளர், சிரேஷ்ட உதவிச் செய­லாளர், திணைக்­க­ளங்­க­ளது பணிப்­பா­ளர்கள் போன்ற பத­வி­க­ளோடு சேர்த்து பிர­தேச செய­லா­ளர்­க­ளா­கவும் கடமை புரி­கின்­றனர். கடல்­க­டந்த சேவை பரீட்சை (SLOS)யில் நளீ­மீக்கள் சித்­தி­ய­டைந்து வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களில் உயர் பத­வி­களை வகிக்­கி­றார்கள். சிலர் நீதி­ப­தி­க­ளாக இருப்­ப­துடன் கணி­ச­மான தொகை­யினர் சட்­ட­த­ர­ணி­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர்.

நளீ­மீக்­களில் பலர், கணி­ச­மான தொகை நூல்­க­ளையும் மொழி­பெ­யர்ப்­புக்­க­ளையும், பொது­வான ஆக்­கங்­க­ளையும், ஆய்வுக் கட்­டு­ரை­க­ளையும் எழுதி­யுள்­ளனர். ஆங்­கிலம், அரபு, சிங்­களம், தமிழ் ஆகிய மொழி­களில் நூற்­றுக்­க­ணக்­கான கட்­டு­ரைகள் அவர்­களால் எழு­தப்­பட்­டுள்­ளன. கடந்த ஐந்து தசாப்­தங்­க­ளாக அவர்­களால் எழு­தப்­பட்ட ஆக்­கங்­களை மதிப்­பீடு செய்­கையில் அவை சம­நி­லை­யான சமு­தா­ய­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான அறி­வியல் பங்­க­ளிப்­பு­க­ளாக அமைந்­துள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.
தேசிய ரீதி­யாக இயங்கும் அமைப்­புக்­க­ளிலும் ஊர் மட்­டங்­களில் உள்ள கல்வி, பொரு­ளா­தார, சமூக மேம்­பாட்டு அமைப்­பு­க­ளிலும் அவர்கள் பிர­தான பத­வி­களை வகிக்­கின்­றனர். சிலர் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையில் வள­வா­ளர்­க­ளா­கவும் நிகழ்ச்சித் தயா­ரிப்­பா­ளர்­க­ளா­கவும் உள்­ளனர். தனியார், அரச வானொ­லிகள், தொலக்­காட்­சி­களில் பலர் நிகழ்ச்­சி­களை செய்து வரு­கி­றார்கள். பலர் கிர­மமா­கவும் அவ்­வப்­போதும் குத்­பாக்­களை நிகழ்த்­து­கின்­றனர்.

1996 ஆம் ஆண்டு முதல் ‘றாபி­ததுன் நளீ­மிய்யீன்’ எனப்­படும் பழைய மாணவர் அமைப்பு உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் பல கிளை­க­ளைக் கொண்டு இயங்­கு­கி­றது. நளீ­மிய்­யா­வுக்குப் பங்­க­ளிப்பு செய்தல், நளீ­மீக்­களின் ஐக்­கி­யத்­திற்­காக உழைத்தல், இஸ்­லா­மிய பிரச்­சா­ரத்­திற்கு பங்­க­ளிப்பு செய்தல் ஆகிய மூன்று இலக்­கு­க­ளையும் அது கொண்­டி­ருக்­கி­றது.

தனித்­து­வ­மான சிந்­தனைப் போக்கு
ஜாமிஆ நளீ­மிய்­யாவின் இலக்கு தெளி­வா­னது. அல்லாஹ் மனித சமூ­கத்­துக்குத் தந்த இஸ்­லாத்தை அங்க சம்­பூ­ர­ண­மான வாழ்க்கைத் திட்­ட­மாக, நாகரிகமாக, மனித சமூகம் நவீன காலத்தில் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைக்கின்ற, இஸ்லாமிய கலாஞானங்களையும் நவீன கலைகளையும் கற்ற, இஸ்லாம் தற்காலத்தில் எதிர் நோக்கும் அறைகூவல்களை அறிவுபூர்வமாக எதிர்கொள்ளும் திராணி படைத்த, சமநிலை ஆளுமையும், திறமைகளும், இறையச்சமும், தூர நோக்கும், அழகிய பண்பாடுகளும், சமயோசிதமும், அறிவுப் பின்புலமும் கொண்ட, சமூத்திற்கு அறிவுத் தலைமைத்துவத்தை வழங்கும் ஒரு பரம்பரையை உருவாக்குவதே அந்த இலக்காகும்.
இலங்கை முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக இருப்­பதால் அவர்கள் தமது இஸ்­லா­மிய தனித்­து­வங்­களைப் பேணி வாழ்­வ­தோடு பிற­ ச­மு­தா­யங்­க­ளோடு சமா­தான சக­வாழ்வை மேற்­கொண்டு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். ஆழமான ஈமானைக் கொண்ட, அறிவு பூர்வமான, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட, எவ்வித தீவிரங்களும் அற்ற, நடுநிலையான சமுதாயமாக மிளிர வேண்டும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்ைபச் சுமந்தவர்களாக தியாக சிந்தையுடன் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் புத்திஜீவிகளை உருவாக்கும் வகையிலேயே ஜாமிஆவின் கலைத்திட்டம் அமைந்திருக்கிறது.

நிறுவனம் இது வரை கண்ட எல்லா சாதனைகளுக்கும் அல்லாஹ்வின் அருள் தான் பிரதான காரணமாகும். அல்ஹம்துலில்லாஹ்.இந்நிறுவனத்தை உருவாக்கி, கட்டிக் காத்தவர்கள், தற்போதும் அதனை தமது தோள்களில் சுமந்திருப்பவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மேலான கூலிகளை வழங்குவானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.