நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு: ஞானசார தேரருக்கு எதிராக சாட்சியமளிக்கும் ரிஷாத்

0 173

(எம்.எப்.அய்னா)
இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் இன்று சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்ளார்.

அரச தரப்பு சாட்­சி­யா­ள­ராக அவர் இன்று கொழும்பு மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளிக்­க­வுள்­ள­துடன் அதற்­கான அறி­வித்தல் அவ­ருக்கு ஏற்­க­னவே அனுப்­பப்பட்­டுள்­ளது.
இந்த வழக்கின் சாட்சி விசா­ர­ணை­கள் கடந்த 2022 செப்­டம்பர் 20 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், ஏற்­க­னவே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியோர் சாட்­சியம் அளித்­துள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு இன்று (15)கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.
2016 நவம்பர் மாதம் முதலாம் திக­திக்கும் 16 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலத்தில், கொழும்பு – கிரு­லப்­ப­னையில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மான வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. தண்­டனை சட்டக் கோவையின் 291(அ) பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை அவர் புரிந்­த­தாக சட்ட மா அதி­பரால் குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது. வர­லாற்று சிறப்புமிக்க பலாங்­கொடை ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் குறித்து ஊடக சந்­திப்பில் கருத்து வெளி­யிடும் போது, கூர­கல பெளத்த புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தா­கவும், கேவ­ல­மான வசனங்­களைக் கொண்டு இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழிபடும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தா­கவும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இடம்­பெற்ற விசா­ர­ணை­களை மையப்­ப­டுத்தி, மேல் நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு அது கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது. இதன்­போது கல­கொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜராவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழுவினர் ஆஜராவது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.