அந்தோனியார் தேவாலய உற்சவத்தின்போது கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

0 155

(எம்.எப்.அய்னா)
கொழும்பு -கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தின் 189ஆவது வரு­டாந்த உற்­ச­வத்தை மையப்­ப­டுத்தி நடாத்­தப்­படும் சமய அனுஷ்­டானங்­களின் போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் நுழைந்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மாத்­தளை பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் இம்­தியாஸ் மொஹம்மட் நெளபர் எனும் 46 வயது நபர் தொடர்­பி­லேயே இந்த தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த நபர் கரை­யோர பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் எதிர்­வரும் 19ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், இவ்­வி­சா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அதன்­படி, தேசிய உளவுச் சேவை, பொலிஸ் உளவுச் சேவை­யான பொலிஸ் விஷேட பிரிவு, குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­ட­மி­ருந்து, கைது செய்­யப்­பட்ட குறித்த நபர் தொடர்பில் அறிக்­கைகள் கோரப்­பட்­டுள்­ளன.

அந்த அறிக்­கை­களை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார்.
சந்­தேக நபரின் தோற்­றத்தை மையப்­ப­டுத்­திய சந்­தே­கத்தில், இந்த சந்­தேக நபர் தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்டு பரி­சோ­தனை செய்­யப்­பட்ட போதே நியா­ய­மான சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் இந்த கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

பாது­காப்பு அதி­கா­ரிகள் முன்­னெ­டுத்த பரி­சோ­த­னை­களின் போது சந்­தேக நபர், அன்­டனி டெனட் எனும் பெய­ரி­லான அடை­யாள அட்டை ஒன்­றினை காண்­பித்­துள்ளார். எனினும் சந்­தேக நபரை சோதனை செய்­த­போது அவ­ரிடம் இருந்து, கிராம சேவகர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­திய தற்­கா­லிக அடை­யாள அட்­டைக்­கான ஆவணம் மீட்­கப்­பட்­டுள்­ளது. அதில் சந்­தேக நபரின் பெயர் இம்­தியாஸ் மொஹம்மட் நெளபர் எனவும் வயது 46 எனவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­துள்­ளது.

இது தொடர்பில் சந்­தேக நபரை விசா­ரணை செய்­த­போது, தான் திரு­ம­ண­மாகி மாத்­தளை -அக­ல­வத்தை – விகாரை மாவத்­தையில் வசிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ளார்.
எனினும் தனது தாய், மட்­டக்­கு­ளிய -பர்­கி­யூஷன் வீதியில் வசிப்­ப­தா­கவும், தனது தாய் முஸ்­லி­மாக இருந்த போதும் தந்தை ஜோன்சன் ராஜா எனவும் சந்­தேக நபரின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தான் சிறு­வ­யதாக இருக்கும் போதே தந்தை இறந்­து­விட்­ட­தா­கவும், அதன் பின்னர் தனது தாயார் முஸ்லிம் ஒரு­வரை 2 ஆவ­தாக திரு­மணம் செய்­த­தா­கவும் அவர் பொலிஸ் விசா­ர­ணையில் குறிப்­பிட்­டுள்ளார். அந்த 2ஆவது மணத்தின் பின்­ன­ரேயே தனது பெயர் மொஹம்மட் நெளபர் என மாற்­றப்­பட்­ட­தாக சந்­தேக நபர் குறிப்­பிட்­டுள்ளார். திரு­ம­ணத்தின் பின்னர் தான் மனைவி, பிள்­ளை­க­ளுடன் மாத்­தளை – அக­ல­வத்த பகு­தியில் வசித்­த­தாக சந்­தேக நபர் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில், சந்­தேக நபர் தொடர்பில் கரை­யோர பொலிஸார் மாத்­தளை பொலி­ஸா­ரிடம் வின­வி­யுள்­ளனர். இதன்­போது சந்­தேக நப­ருக்கு எதி­ராக மாத்­தளை நீதிவான் நீதி­மன்­றினால் பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யாணை உத்­த­ர­வொன்று இருப்­பது தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதிக மது பாவ­னைக்கு அடி­மை­யா­ன­வ­ராக அறி­யப்­படும் சந்­தேக நபர், அதனால் புனர்­வாழ்­வுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டவர் என பொலிஸார் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். மது­பானம் அருந்­தி­விட்டு சண்டை சச்­ச­ர­வு­களில் ஈடு­ப­டு­வதால், மனை­வியும் அவரை பிரிந்து வாழ்­வ­தாக பொலிஸ் தரப்பு கூறு­கின்­றது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, சந்­தேக நபர் மட்­டக்­குளியிலுள்ள தாயின் வீட்­டி­லி­ருந்து பஸ் வண்­டியில், கிராண்பாஸ் பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றினை நோக்கி தான் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கவும், அப்­போது கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் தேவ ஆராதனைகள் தனக்கு கேட்டதாகவும், அப்போது தனது தந்தை ஞாபகத்துக்கு வரவே பஸ்ஸிலிருந்து இறங்கி தேவாலயம் உள்ளே சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட குறித்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.