‘யெலோ வெஸ்ட்’ ஆர்ப்பாட்டத்தில் எட்டு பேர் பலி

0 522

பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தில் இதுவரை எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் செயற்பாடு அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் சுற்றுவட்ட பாதைகளை மறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் வரி சீர்திருத்தத்திற்கு எதிரான யெலோ வெஸ்ட் குழுவினரின் போராட்டம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறானதொரு அமைதியின்மை நிலவியதா என்பது எனக்குத் தெரியாது. யெலோ வெஸ்ட் போராட்டக்காரர்களினதும், பிரான்ஸ் மக்களினதும், எமது பாதுகாப்புத் தரப்பினரதும் பாதுகாப்பிற்காக இப்போராட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.