2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்துக்கான விருது விடிவெள்ளிக்கு!

0 342

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் சங்­கமும் இணைந்து நடாத்­திய 2021 ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ஊடக அதி­யுயர் விருது வழங்கும் விழாவில் விடி­வெள்ளி பத்­தி­ரிகை விரு­தினை வென்­றுள்­ளது.
மவுன்ட் லவி­னியா ஹோட்­டலில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்ற இந் நிகழ்வில் 2021 ஆம் ஆண்­டுக்­கான சிறந்த பத்தி எழுத்­தா­ள­ருக்­கான பி.ஏ. சிறி­வர்­தன விருதை விடி­வெள்­ளியின் சிரேஷ்ட உதவி ஆசி­ரியர் ஏ.ஆர்.ஏ.பரீல் பெற்றுக் கொண்டார்.

விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் தொடர்ச்­சி­யாக எழுதி வரும் பத்தி எழுத்­துக்­க­ளுக்­கா­கவே இந்த விருது வழங்­கப்­பட்­டது.

2012 ஆம் ஆண்­டுக்­கான சிறந்த பத்தி எழுத்­தா­ள­ருக்­கான விரு­தையும் விடி­வெள்ளி சார்பில் ஏ.ஆர்.ஏ.பரீல் பெற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கமும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இணைந்து வரு­டாந்தம் நடாத்தும் சிறந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான விருது வழங்கும் விழாக்­களில் கடந்த காலங்­க­ளிலும் விடி­வெள்ளி பல விரு­து­களை வென்­றுள்­ளது.
கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்­டு­களில் சிறந்த இளம் ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கான சான்­றிதழ் விருதை விடி­வெள்ளி ஊட­க­வி­ய­லாளர் எஸ்.என்.எம். சுஹைல் பெற்றுக் கொண்டார்.

2011 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடி­வ­மைப்­புக்­கான சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

2016 ஆம் ஆண்டு சிறந்த செய்தி இணை­யத்­த­ளத்­திற்­கான சிறப்புச் சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

2018 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடி­வ­மைப்­புக்­கான விருதும் சிறந்த செய்தி இணை­யத்­த­ளத்­திற்­கான சிறப்புச் சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

2020 ஆம் ஆண்­டுக்­கான விசேட நிலை­மை­களில் செய்தித் தேட­லுக்­கான பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு விரு­தினை விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் சுயா­தீன ஊட­க­வி­ய­லாளர் ஏ.எம். றிப்தி அலி பெற்றுக் கொண்டார்.

2020 ஆம் ஆண்­டுக்­கான சிறந்த பக்க வடி­வ­மைப்­புக்­கான சான்­றிதழ் விருதும் விடி­வெள்­ளிக்கு கிடைக்கப் பெற்­றது.

இந்­நி­லை­யி­லேயே 2021 ஆம் ஆண்­டுக்­கான விருது வழங்கல் நிகழ்­விலும் விடி­வெள்ளி தமிழ் பத்­தி­ரி­கை­களில் சிறந்த பத்தி எழுத்­தா­ள­ருக்­கான விரு­தினை தன­தாக்கிக் கொண்­டுள்­ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விடிவெள்ளி வார பத்திரிகை கடந்த 15 வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் முதன்மைக்குரலாக பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.