மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலை தாமதியாது மீளத்திறக்க ஏற்பாடு செய்க

கபூரியா விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சரிடம் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள்

0 236

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் 100வருட காலத்­துக்கும் மேற்­பட்ட வர­லாறு கொண்ட பள்­ளி­வா­ச­லொன்று இருக்­கி­றது. இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் இப்­பள்­ளி­வா­ச­லிலே தங்­க­ளது சமயக் கட­மை­களை நிறை­வேற்றி வந்­தனர். என்­றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பாது­காப்பு கார­ணங்­களை முன்­வைத்து பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­சலை தாம­தி­யாது மீளத்­தி­றக்க ஏற்­பாடு செய்­யுங்கள் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு அமைச்சர் விஜே­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் வேண்­டுகோள் விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு தொடர்­பான வரவு – செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே முஜிபுர் ரஹ்மான் மேற்­கு­றிப்­பிட்ட கோரிக்­கையை முன்­வைத்தார்.

சிறைச்சாலை அதி­கா­ரிகள் இப்­பள்­ளி­வா­சலை தமது வேறு தேவை­க­ளுக்­காக உப­யோ­கப்­ப­டுத்­து­கின்­றனர். இப்­ப­கு­தியில் வாழும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்கள் தமது சம­யக்­க­ட­மை­க­ளுக்­காக வேறு­பள்­ளி­வாசல் இன்றி அல்­ல­லு­று­கின்­றனர்.அத்­தோடு பள்­ளி­வா­சலில் நடாத்­தப்­பட்டு வந்த அஹ­திய்யா பாட­சா­லையும் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி பள்­ளி­வா­சலை அப்­ப­குதி மக்­க­ளுக்கு மீளப் பெற்­றுக்­கொ­டுங்கள் எனக்­கோ­ரி­யுள்ளார்.

மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி
மஹ­ர­க­மயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூரி மற்றும் சுலைமான் வைத்­தி­ய­சாலை இயங்­கி­வந்த, கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரிக்கு வக்பு செய்­யப்­பட்ட வக்பு சொத்­துக்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கோரி­யுள்ளார்.

விவா­தத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் தற்­போது வக்பு சொத்­துக்கள் தொடர்­பாக பெரிதும் பேசப்­பட்டு வரு­கி­றது. வக்பு சொத்­துக்­களை அப­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சியில் ஒரு­சிலர் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரிக்­கென வக்பு செய்­யப்­பட்ட வக்பு சொத்தை மர்ஹூம் அப்துல் கபூரின் குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவர் அச்­சொத்தைக் கையேற்று வக்­பு­சட்­டத்­தையும் மீறி சட்ட விரோத செயல்­களில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

கபூ­ரிய்யா வக்பு சொத்­தினை அவர் சொப்ட் லொஜிக் போன்ற நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்து அதனை குடும்பச் சொத்து என்­கிறார்.

அன்று முஸ்லிம் தன­வந்­தர்­களால் வக்பு செய்­யப்­பட்ட சொத்­து­களை வக்பு சட்­டத்தின் கீழ் பாதுகாத்துத் தருமாறு நீதியமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். வக்பு செய்யப்பட்ட சொத்துகளின் பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தவர்கள் அந்த சொத்துக்கள் தனியார் சொத்து என்றுகூறி கையாட முயற்சிக்கின்றனர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.