முஸ்லிம் திணைக்கள கட்டிட விவகாரம்: புத்திஜீவிகள் அமைப்பு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடத் தீர்மானம்

0 326

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இயங்கி வரும் கொழும்பு 10 ரி.பி.ஜாயா மாவத்­தை­யி­லுள்ள கட்­டி­டத்தின் ஒரு பகு­தியை ஏனைய மத திணைக்­க­ளங்­க­ளுக்கு வழங்க புத்­த­சா­சன, கலா­சார மற்றும் மத விவ­கா­ரங்கள் அமைச்சு மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்தை முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் அமைப்­புகள் எதிர்த்­துள்­ளன.
கம்­பஹா மாவட்ட புத்­தி­ஜீ­விகள் அமைப்பு, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேரில் சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கம்­பஹா மாவட்ட புத்­தி­ஜீ­விகள் அமைப்பு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு – மாளி­கா­வத்தை இஸ்­லா­மிய நிலை­யத்தில் ஒன்­று­கூடி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள கட்­டிடம் மற்றும் முஸ்லிம் சமூ­கத்தின் ஏனைய பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்தது. இக்­கூட்­டத்­திலே மேற்­கு­றிப்­பிட்ட தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
புத்­தி­ஜீ­விகள் அமைப்பின் கூட்­டத்­துக்கு சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஹுசைன் முஹம்மத் தலைமை வகித்தார். புத்­த ­சா­சன அமைச்சு மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னத்தை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்கு உத்­த­ர­வி­டு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பிட்ட கட்­டிடம் முஸ்­லிம்கள் தொடர்­பான பல்­வேறு அரச நிறு­வ­னங்­களை உள்­வாங்­கு­வ­தற்­கா­கவே நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. என்­றாலும் பல தடைகள் கார­ண­மாக கட்­டி­டத்தின் மூன்று மாடி­களைத் தவிர ஏனைய மாடிகள் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­மையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்­தியே அரசு கட்­டி­டத்தின் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத மாடி­களைப் பொறுப்­பேற்­றுள்­ளது.

பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டா­துள்ள கட்­டி­டத்தின் ஏனைய மாடி­களைப் பூர­ணப்­ப­டுத்தி வக்பு சபை, வக்பு ட்ரிபி­யுனல், காதிகள் மேன்­மு­றை­யீட்டுச் சபை மற்றும் அதன் ஆவ­ண களஞ்­சி­ய­சாலை, அரச ஹஜ் குழு, அரபுக் கல்­லூ­ரி­களின் தலை­மை­யகம், வாசி­க­சாலை என்­ப­ன­வற்றை உள்­வாங்­கு­மாறு புத்­தி­ஜீ­விகள் அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளா­தாக அமைப்பின் இணைச்­செ­ய­லா­ளர்­க­ளான அலி­ஹசன் மற்றும் ஏ.ஆர்.எம்.முஸம்மில் ஆகியோர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தனர்.

முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் அமைப்பின் கூட்­டத்தில் முன்னாள் பரீட்சை ஆணை­யாளர் ஏ.எஸ்.மொஹமத், முஸ்லிம் கலா­சார அமைச்­ச­ரா­க­வி­ருந்த லக் ஷ்மன் ஜய­கொ­டியின் இணைப்புச் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய உவைன் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

ஜனா­தி­ப­தி­யுடன் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கட்­டி­டத்தின் ஒரு பகுதி இந்து மற்றும் கிறிஸ்­தவ திணைக்­க­ளங்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட உலமாக்கள் இவ்விவகாரத்தை ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அவர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.