ஆணைக்குழுவில் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாள்வதில் அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் அறிக்கை

0 9

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் போது நடந்­த­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றங்கள் குறித்து இலங்கை, உள்­நாட்டு பொறி­மு­றைகள் மூலம் விசா­ரிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி, டெய்லி மிரர் பத்­தி­ரி­கையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட பேட்­டியில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெட்­டே­கொட வழங்­கிய ஆலோ­ச­னையை அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கமும் நாட்டின் ஆயுதப் படை­களும் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வேண்டும்.

“யுத்­தக்­குற்­றங்கள் உள்­ளூரில் விசா­ரிக்­கப்­ப­டா­விட்டால் அர­சியல் தலை­வர்கள் கூட பயணக் கட்­டுப்­பா­டு­களை எதிர்­கொள்ள நேரிடும்” என்று அநுர மெட்­டே­கொட கூறி­யி­ருந்தார். எனது பார்­வையில், அர­சியல் தலை­வர்கள் மட்­டு­மல்­லாமல், மனித உரிமைச் சட்­டங்­களை நிலை­நி­றுத்தத் தவ­றி­ய­மைக்­காக புல­னாய்­வா­ளர்கள், வழக்­கு­ரை­ஞர்கள், நீதி­ப­திகள் மற்றும் அவர்­க­ளது குடும்­பங்கள் கூட சர்­வ­தேச பயணக் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு மட்­டு­மல்­லாமல், வேறு வகை­யான சட்ட நெருக்­கு­தல்­க­ளுக்கும் ஆளாக நேரி­டலாம்.

மூன்று உறுப்­பி­னர்­களைக் கொண்ட புதிய அமைச்­ச­ர­வைக்கு, வெளி­யு­றவு அமைச்­சுக்கு புதிய “போக்கை மாற்றும்” வழி­காட்­டு­தல்­களை வழங்க நியா­ய­மான நேரம் இருந்­தி­ருக்­காது என்­பது புரிந்து கொள்­ளத்­தக்­கது. இதனால் 11அக்­டோ­பர் 2024 அன்று முடி­வ­டைந்த ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அமர்­வு­களில் இந்த விடயத்தில் முன்னாள் அர­சாங்­கங்­களின் கொள்­கை­களே தொடர்ந்­தன. அர­சாங்­கத்­துக்கு, அறி­வு­றுத்தப்பட்­ட­படி, போர்க்­குற்­றங்கள் பற்­றிய விசா­ர­ணை­களில் 14/11 பொதுத் தேர்­தல்கள் முடி­வுற்­ற­தோடு வெளிப்­புற தலை­யீ­டு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­பதை தவிர்த்து, உள்­ளக விசா­ர­ணை­களை தெரிவு செய்ய வேண்டும்.

ஆயு­தப்­ப­டை­க­ளுக்கு எதி­ராக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் குறித்து உண்­மை­யான உள்­நாட்டு விசா­ரணை மற்றும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான குற்­ற­வா­ளிகள் மீது வழக்குத் தொடர்­வது என்­பன நாட்­டிற்கு எதி­ராக கூறப்­படும் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து ஆயு­தப்­ப­டை­களை விடு­விக்க உதவும். எவ­ரேனும் குற்றம் புரிந்­த­வர்­க­ளாக காணப்­பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அது விட­யத்தில் ஒரு முடி­வுக்கு வரும், இல்­லையேல் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை மீதான சிறப்பு பொறி­மு­றையை ஸ்தாபித்தல் என்­பது மிகவும் பார­தூ­ர­மான விளை­வுளை ஏற்­ப­டுத்தும். இந்தப் பொறி­மு­றை­யா­னது ஏற்­க­னவே இலங்­கையில் மனித உரி­மைகள் நிலை­மையை கண்­கா­ணித்தல், மனித உரி­மைகள் நிலை­மைகள் பற்றிய தக­வல்­களை சேக­ரித்தல் மற்றும் அறிக்கை இடல் ஆகிய நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­டுள்­ளது.

சமீ­பத்தில் முடி­வ­டைந்த ஜெனீவா அமர்­வு­களில், மனித உரிமை ஆணைக்­குழு ஆதா­ரங்­களை சேக­ரிப்­ப­தற்­கான கால அவ­கா­சத்தை மட்டும் நீடிக்­க­வில்லை. இலங்­கையின் மனித உரிமை மீறல்கள் பற்­றிய ஆதா­ரங்­களை சேக­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் “ஆற்­றலை” மீள்­வ­லுப்­ப­டுத்­தவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐ.நா மனித உரிமை ஆணை­ய­கத்தின் தீர்­மானம் 51/1 ஐ முற்­றாக நிரா­க­ரிப்­ப­தற்குப் பதி­லாக, அநுர மெட்­டே­கொட பரிந்­து­ரைத்த, உள்­நாட்டு விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­களை தொடுப்­பது நிச்­ச­ய­மாக தேசிய நல­னுக்கு வழி­ய­மைப்­ப­தாக இருக்கும். அதே­வேளை சர்­வ­தேச அரங்­கு­களில் போர்க் குற்றம் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்கும் குழுவில் உள்ள நாடுகள் மத்­தியில் சக்­தி­வாய்ந்த அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து மற்றும் கனடா ஆகிய முக்­கிய நாடுகள் உள்­ள­டங்­கி­யுள்­ளன என்­பதும் கவ­னிக்­கப்­பட வேண்­டிய உண்­மை­யாகும். மிக முக்­கி­ய­மாக எமது பொரு­ளா­தார அவ­ல­நி­லையை சமா­ளிக்க, மேற்­கத்­திய கட்­டுப்­பாட்டில் உள்ள சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுடன் நாம் ஒத்­து­ழைத்து பணி­யாற்ற வேண்­டியும் உள்­ளது.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெட்­டே­கொட முன்னாள் யூகோஸ்­லா­வி­யாவில்1990களில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்­பான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்ற (ஐ.சி.சி) விட­யங்­களில் ஜெனீ­வாவில் கிட்­டத்­தட்ட ஒரு தசாப்த காலம் பணி­யாற்­றி­யுள்ளார். அவர் கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்­தங்­க­ளாக இலங்­கையின் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திலும் பணி­யாற்­றி­யுள்ளார். அவர் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தற்­போ­தைய தலை­வ­ரா­கவும் உள்ளார். இருப்­பினும் அவ­ரது கருத்­துக்கள் அவ­ரது தனிப்­பட்ட நிலை­யி­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

நாங்கள் ரோம் சாச­னத்தின் தரப்­பி­னர்­க­ளாக இல்­லா­விட்­டாலும், போர்க்­குற்­றங்­க­ளுக்­காக இலங்கை அர­சியல் தலை­வர்கள் மீது மனித உரிமை ஆணை­யகம் வழக்குத் தொட­ரலாம் என்ற விட­யத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மனித உரிமை ஆணைக் குழுவின் வழக்­கு­தொ­டரல் என்­பது, வழக்கு தொடரல் மற்றும் கைது­க­ளுக்கு மேல­தி­க­மாக, அது வழக்குத் தொடரத் தேர்ந்­தெ­டுக்கும் எந்­த­வொரு நாட்­டிலும் திட்­ட­மி­டப்­பட்ட ‘மேல­திக பிராந்­திய அதி­கார வரம்­பு­களின் கீழ்’ கைது மற்றும் வழக்குத் தொட­ரப்­ப­டு­வ­தற்கு போர்க்­குற்­றங்கள் மட்­டு­மல்­லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்­பான ஏனைய அனைத்து வழக்­கு­களும் தொடர்­பான சான்­றுகள் சேக­ரிக்­கப்­படும். இலங்கை அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பாட்டு விதி­களின் படியும் மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்­டங்­களின் அடிப்­ப­டை­யிலும் மேலும் நாட்டின் மனித உரிமை சட்டங்களின் கீழும் வழக்கை தொடர தீர்மானிக்கும் நாட்டில் இது இடம்பெறலாம்.

எனவே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தனது போக்கை மாற்ற வேண்டும். யுத்தக் குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகள் என்பது போர்க்குற்றங்களை முற்றாக ஒப்புக்கொள்வது என்று அர்த்தமல்ல!
பலஸ்­தீ­னத்தில் இனப்­ப­டு­கொலை மற்றும் இன­வெறி போன்ற மிகவும் கடு­மை­யான குற்­றங்­க­ளுக்­காக இஸ்ரேல் மீது வழக்குத் தொட­ரப்­ப­ட­வில்­லையே என்று அந்த இடத்தில் கூச்­ச­லி­டு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.