இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : கரையோரத்திலிருந்து வெளியேறுக

இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு

0 13

(எப்.அய்னா)
பயங்­க­ர­வாத தாக்­குதல் அச்­சு­றுத்தல் கார­ண­மாக இலங்­கையில் உள்ள சில சுற்­றுலாப் பகு­தி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு தனது நாட்டு மக்­க­ளுக்கு இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு சபை நேற்று புதன்­கி­ழமை விஷேட‌ அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

“சுற்­றுலாப் பகு­திகள் மற்றும் கடற்­க­ரை­களை மைய­மாகக் கொண்ட பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் பற்­றிய தற்­போ­தைய நில­வரம்” எனும் தலைப்பில் இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு சபை இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.

அறு­கம்பே வளை­குடா பகுதி மற்றும் இலங்­கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்­க­ரைகள் தொடர்­பான குறித்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது .

எவ்­வா­றா­யினும் இஸ்­ரேலின் தேசிய பாது­காப்பு சபை அச்­சு­றுத்­தலின் தன்மை தொடர்பில் குறிப்­பிட்டு எதுவும் குறிப்­பி­டப்­ப­டாத போதும் கரை­யோரம் தவிர்ந்த‌ இலங்­கையின் மற்ற பகு­தி­களில் உள்ள இஸ்­ரே­லி­யர்­களை எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும், பொது இடங்­களில் சனத் திரளான இடங்­களில் செல்­வதை தவிர்ந்­து­கொள்­ளு­மாறும் அவ்­வெச்­ச­ரிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்பில் இஸ்­ரே­லிய பாது­காப்பு ஸ்தாபனம், இலங்­கையில் உள்ள பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன் நிலைமை தொடர்பிலான முன்னேற்றங்களை அவதானித்து வருவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.