சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : வைத்தியர் நவீன் விஜேகோனை கைது செய்து ஆஜர் செய்யவும்

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு ஆலோசனை

0 26

எப்.அய்னா

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சையின் போது சந்­தே­கத்­துக்­கி­ட­மாக உயி­ரி­ழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்­லியின் மரணம் தொடர்பில் சாட்­சியம் வழங்­கு­வதை, விஷேட வைத்­திய நிபுணர் நவீன் விஜேகோன் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணித்து வரும் நிலையில், குறித்த சம்­ப­வத்தில் குற்ற பங்­க­ளிப்­பொன்று அவரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு சான்று இருக்­கு­மாயின் அவரை சாட்­சி­யா­ள­ராக அன்றி, சந்­தேக நப­ராக பெய­ரிட்டு உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் செயற்­படும் சிறப்புப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்­டது.

கொழும்பு மேல­திக நீதிவான் ஹர்­ஷன கெக்­கு­ண­வல இதற்­கான உத்­தரவை நேற்று (9) பிறப்­பித்தார்.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சையின் போது சந்­தே­கத்­துக்­கி­ட­மாக உயி­ரி­ழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்­லியின் மரணம் தொடர்­பி­லான பூரண விசா­ர­ணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் செயற்­படும் சிறப்புப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இது­வரை பொரளை பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள், தற்­போது சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மாஅ­தி­பரின் கீழ் செயற்­படும் கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள படு­கொலை, திட்­ட­மி­டப்­பட்ட குற்­றங்கள் மற்றும் கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் சிறப்புப் பிரிவின் (Homicide & Organized Crime Investigation and Murder) பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரந்­தெ­னி­யவின் நேரடி கட்­டுப்­பாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி சிறுவன் ஹம்­தியின் பெற்­றோ­ரிடம் வாக்கு மூலம் பெற்­றுள்ள குறித்த சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள், லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர், ஏனைய வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்­யவும், ஆவ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இது­வரை குறித்த சிறு­வனின் சத்­திர சிகிச்­சை­யுடன் தொடர்­பு­பட்ட அனைத்து மூல ஆவ­ணங்­களும் விசா­ர­ணை­யா­ளர்­களின் கைக­ளுக்கு கிடைக்­காத நிலையில், அவற்றைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறப்பு விசா­ரணைப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

நேற்று இவ்­வ­ழக்கின் மரண விசா­ர­ணை­க­ளுக்­கான சாட்­சியம் பதிவு செய்ய ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதில் குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லி­யாவில் தற்­போது வசிக்கும் வைத்­தியர் நவீன் விஜே­கோனின் சாட்­சியம் ஸ்கைப் ஊடாக பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­த­தது. எனினும் வைத்­தியர் அதற்கு எந்த பதி­லையும் அளிக்­க­வில்லை எனவும், அவர் சாட்­சியம் அளிப்­பதை வேண்­டு­மென்றே புறக்­க­ணிப்­ப­தாக தோன்­று­வ­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் மன்றில் குறிப்­பிட்­டனர்.
இத­னை­ய­டுத்தே, வைத்­தியர் நவீ­னுக்கு குற்­றத்­துடன் தொடர்­பி­ருந்தால் சாட்­சி­யா­ள­ராக அன்றி, சந்­தேக நப­ராக பெய­ரிட்டு கைது செய்­யு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லி சிறு­நீ­ரக சத்­தி­ர­சி­கிச்­சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயி­ரி­ழந்­தி­ருந்தார். சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்­ன­ரான தொற்று பரவல் மர­ணத்­துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் அப்­போது குறிப்­பிட்ட நிலையில், பாரிய மருத்­துவ தவ­றொன்று அல்­லது மனித உறுப்பு வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்று ஹம்­தியின் மர­ணத்தின் பின்­ன­ணியில் இருக்­கலாம் என சிறு­வனின் குடும்­பத்தார் சார்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இந்த விசா­ர­ணை­யே சிறப்பு பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்ட வைத்­தியர் நவீன் விஜேகோன் அவுஸ்­தி­ரே­லி­யாவுக்கு சென்ற நிலையில் இவ்­வி­சா­ர­ணைகள் மேலும் மந்­த­ம­டைந்­தன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.