அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்

கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

0 54

(எப்.அய்னா)
முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, தொடர்­பி­லான விவ­கார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) உத்­த­ர­விட்­டது.

ஜாதிக பல சேனாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பினுள் அத்து மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கொம்­பனித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணையின் பின்னர், முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர் ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் வழக்கில் ஆஜ­ரா­கா­மையால் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதி­மன்ற நீதி­பதி தனுஜா லக்­மாலி உத்­த­ரவு பிறப்­பித்­தது. 758/14 எனும் வழக்­கெண்­களைக் கொண்ட இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. முறைப்­பாட்­டா­ளர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மன்றில் பிர­சன்­ன­மானார்.
இதன்­போது மன்றில் ஆஜ­ரா­கிய பொலிசார், விசா­ர­ணை­களை நிறை­­வு­றுத்தி குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்தே ஞான­சார தேரரைக் கைது செய்ய இவ்­வ­ழக்கு தொடர்பில் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இதனை விட 2014.04.12 அன்று கொம்­பனி வீதி பொலிஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இஸ்­லாத்­தையும் குர் ஆனையும் அவ­ம­திக்கும் வித­மா­கவும் நிந்­திக்கும் வித­மா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு முன்­னரும் இவ்வழக்கில் கடந்த 2017 ஜூன் 15 ஆம் திகதியும் மன்றில் ஆஜராகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.